Showing posts with label Natural manure. Show all posts
Showing posts with label Natural manure. Show all posts

Tuesday, September 20, 2016

அசோலா‘ ஓர் அமுதசுரபி!

அசோலா‘ ஓர் அமுதசுரபி!



“ஊர்ல சொல்வாங்களே... 'சுண்டைக்காய் கால்பணம், சுமை கூலி முக்காப்பணம்'னு... அதுமாதிரிதான் நேத்துவரை எங்க பொழப்பு இருந்துச்சி. பால் கறந்து வித்தா கிடைக்கற காசுல பாதி காசு தீவனம் வாங்கறதுக்கே காணாம போயிட்டி ருந்திச்சி. கையில கால் காசு தங்கல. ஆனா, இன்னிக்கு நிலமையே வேற... இந்த 'அசோலா'வை வளர்த்து மாடுகளுக்குக் கொடுத்த பின்னாடி தீவன செலவு பாதியா கொறைஞ்சி போச்சி.. அதோட பாலும் கூடுதலா கறக்குது. இப்பதான் நாலு காசு கையில நிக்கிது”
-திண்டுக்கல் அருகே கண்ணாபட்டியைச் சேர்ந்த முருகேசன் என்கிற விவசாயியின் அனுபவம் இது.
இவரைப்போலவே பல விவசாயிகளின் வாழ்க்கையில் அற்புத மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது அசோலா என்ற பாசிவகைத் தாவரம். 

ஐம்பது செங்கல், சின்னதாக ஒரு தார்பாலின் ஷீட், இரண்டு சட்டி மாட்டுச் சாணம், பத்துக் குடம் தண்ணீர், கால் கிலோ அசோலா இது இருந்தால் போதும்... நீங்களும் அசோலா வளர்க்க ஆரம்பித்துவிடலாம். இவற்றை வாங்குவதற்கு வெறும் இருநூறு ரூபாய்தான் செலவு... மூன்றே நாட்களில் இருமடங்கு, அடுத்தடுத்த நாட்களில் பலமடங்கு என்று பெருகிக்கொண்டே இருக்கும் அசோலாவினால் கிடைக்கும் பலனோ... பல ஆயிரம் ரூபாய் மதிப்புடையது.
மாட்டுக்கு மட்டுமல்லாமல் அனைத்து கால்நடை களுக்கும் தீவனமாக பயன்படுவதுடன், நெல் வயலில் உரச்செலவை குறைத்து, களையைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் இந்த அசோலாவுக்கு இருப்பதால், விவசா யிகளைப் பொறுத்தவரை இது ஓர் அமுதசுரபி!
''என்கிட்ட ஆறு கறவை மாடு இருக்கு. பால் மூலமா வர்ற வருமானத்தை வெச்சிதான் குடும்பத்தை ஓட்டிட்டிருக்கேன். தவுடு, புண்ணாக்கு எல்லாம் கலந்து வெச்சாதான் பால் அதிகமா குடுக்கும். ஒரு லிட்டர் பால் வித்தா, பத்து ரூவா கிடைக்கும். இதுல தீவன செலவுக்கே அஞ்சு ரூவா போயிருது. ஒரு நாளைக்கு புண்ணாக்கை போடாட்டி பாலோட அளவு குறைஞ்சிரும். இப்படி தீவன செலவு போக மிச்சமிருந்ததை வெச்சிதான் பொழப்பை ஓட்டிட்டிருந்தேன். இந்த நிலைமையிலதான் என்.ஜி.ஓ. அமைப்பைச் சேர்ந்தவங்க அசோலாவைப் பத்திச் சொன்னதோட பயிற்சியும் கொடுத்தாங்க.
அம்பது சதுரடி தொட்டியில கால் கிலோ அசோலாவைதான் போட்டேன். இப்ப தெனமும் ஒரு கிலோ அசோலா எடுத்து மாடுகளுக்கு தீவனமா குடுக்கிறேன். தவிடு, புண்ணாக்கோட அளவைப் பாதியா கொறைச்சிட்டேன். சராசரியா ஆறு லிட்டர் பால் கொடுத்துக்கிட்டிருந்த மாடுங்க, இப்ப ஏழு லிட்டர் வரைக்கும் கொடுக்குது. பாலும் அதிக கொழுப்புச் சத்தோட இருக்கு.

முன்னல்லாம் தீவன செலவு பதினைஞ்சி ரூபாய் வரைக்கும் ஆகும். ஆனா, அசோலாவை கிலோ அறுபது பைசா செலவுல நானே உற்பத்தி செய்றதால செலவு ரொம்ப குறைஞ்சிருக்கு. பாலும் கூடுதலா கெடைக்குது. இதெல்லாம் அசோலா எனக்குக் கொடுத்த போனஸ்'' என்று தெம்பாகச் சிரிக்கும் முருகேசன்,
''என்னை பாத்துட்டு இப்ப பலரும் அசோலா உற்பத்தி பண்றாங்க. எங்க ஏரியாவுல இப்ப அசோலாவோட ஆட்சிதான் நடக்குது” என்று மகிழ்ச்சி பொங்கச் சொன்னார்.
அசோலாவை தமிழக விவசாயிகளிடத்தில் அறிமுகம் செய்ததில் கன்னியாகுமரியில் உள்ள 'விவேகானந்தா கேந்திர'த்துக்கு முக்கிய இடம் உண்டு. இங்கே இயற்கை வள அபிவிருத்தித் திட்டம் என தனி அமைப்பே செயல்பட்டு வருகிறது. அதன் ஆராய்ச்சி உதவியாளர் பிரேமலதா, (தொலைபேசி: 04652 -246296) மலையாள வாசனையுடன் அசோலவைப் பற்றி விவரித்தார்.
''பாசி குடும்பத்தைச் சேர்ந்த மிதக்கும் தாவரம்தான் இந்த அசோலா. இதன் தண்டு, வேர் பகுதிகள் தண்ணீருக்குள் மூழ்கி இருக்கும். இலைகள் நீரின் மேல்பரப்பில் இருக்கும். பெரும்பாலும் பச்சை அல்லது லேசான பழுப்பு நிறத்தில் இருக்கும். கால்நடை தீவனமாகப் பயன்படுவது போலவே தாவரங்களுக்கு உரமாகவும் பயன்படுகிறது. அசோலாவின் இலைப்பகுதியின் உள்ளே நீலப்பச்சைப் பாசி இருக்கிறது. காற்று மண்டலத்திலுள்ள தழைச்சத்தை கிரகித்து தாவரங்களுக்கு கொடுக்கும் வேலையை இது செய்கிறது. இந்த நீலப்பச்சை பாசியின் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்களை நீரிலிருந்து அசோலா எடுத்துத் தருகிறது. அசோலாவின் விதைப்பருவத்திலிருந்து அதனுள் இந்த நீலப்பச்சை பாசியும் சேர்ந்தே வளர்கிறது. இந்தச் சிறப்பு வேறு எந்தத் தாவரத் துக்கும் இல்லை” என்று வியப்பூட்டும் தகவல்களை எடுத்து வைத்தவர், அசோலா வளர்ப்பு முறைகளைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.
''வளர்ப்புச் செலவைக் குறைக்கும் வகையில் செயற்கை நீர்தொட்டியை அறிமுகப்படுத்தி யிருக்கிறோம். மரநிழலில் ரெண்டு மீட்டர் நீளம், ஒரு மீட்டர் அகலத்துக்கு செங்கல்லை வரிசையா அடுக்கினால் தொட்டிபோன்ற அமைப்பு உருவாகும். அதனுள் பழைய பிளாஸ்டிக் சாக்குகளை விரித்து, அதன் மீது தார்பாலின் ஷீட்டை விரிக்கவேண்டும். அதன் மீது 15 கிலோ அளவுக்கு வளமான மண்ணைப் பரப்பிவிடவேண்டும். பத்து லிட்டர் தண்ணீரில் ஒரு கிலோ பசும்சாணியையும், இருபது கிராம் ராக்பாஸ்பேட் (கல்மாவு) அல்லது சூப்பர் பாஸ்பேட்டை கரைத்துவிட வேண்டும். தொட்டியின் உள்பகுதியில் பத்து செ.மீ. உயரத்துக்கு தண்ணீர் இருந்தால் போதும். அதில் 500 கிராம் அசோலாவை போடவேண்டும். பத்து பதினைந்து நாட்களில் தினமும் அரை கிலோவிலிருந்து ஒரு கிலோ வரை அசோலா அறுவடை செய்யலாம்.
சூப்பர் பாஸ்பேட் பத்து கிராம், சாணம் 500 கிராம் இவற்றை ஐந்து நாட்களுக்கொரு முறைக் கரைத்து அந்தத் தொட்டியில் விட்டுக் கொண்டிருந்தால் அசோலாவின் வளர்ச்சி ஒரே சீராக இருக்கும். உற்பத்திச் செலவு கிலோவுக்கு 65 பைசாதான்.
வெப்பநிலை 25 முதல் 31 டிகிரி வரை இருக்கும்போது அசோலாவின் வளர்ச்சி நன்றாக இருக்கும். வெப்பநிலை அதிகமாகும் போது, வளர்ச்சி குறைந்து நிறமும் பழுப்பாக மாறிவிடும். தினமும் கையினாலோ... குச்சியாலோ தொட்டி யைக் கிளறிவிட்டு, அசோலாவை அறுவடை செய்துகொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் இட நெருக்கடி இல்லாமல் அவை நன்றாக வளரும்” என்றவர், அடுத்து அதன் பயன்பாடுகள் பற்றி விவரித்தார்.
''அசோலா எல்லாச் சத்துக்களும் உள்ள ஒரு தீவனமாகும். குறைந்த அளவு லிக்னின் மற்றும் நார்ச்சத்து இருப்பதால் இதை கால்நடைகள் மட்டுமல்லாமல் கோழி, மீன், பன்றி ஆகியவற்றுக்கும் உணவாக கொடுக்கலாம். அறுவடை செய்த அசோலாவில் மாட்டுச் சாண வாடை இருக்கும். அதனால் நன்றாக கழுவிதான் கால்நடைகளுக்குக் கொடுக்கவேண்டும். தவிடு அல்லது மாட்டு தீவனத்துடன் சரிபாதியாகக் கலந்து கொடுக்கலாம். ஒரு மாட்டுக்கு ரெண்டு கிலோ அளவில் தீவனமாக கொடுக்கும்போது 20% வரை பால் உற்பத்தி அதிகரிப்பதுடன் பாலின் தரம், மாட்டின் உடல் ஆரோக்கியம், வாழ்நாள் ஆகியவை அதிகரிக்கிறது. புண்ணாக்கு போன்ற தீவனத்தின் பயன்பாட்டை 40% வரை குறைக்கிறது.
கோழிகளுக்கு அசோலாவை நேரடியாக கொடுக்கும் போது முட்டையின் தரம் கூடுவதுடன் எண்ணிக் கையும் அதிகரிக்கிறது. அசோலா சாப்பிடும் கோழி களை பெரும்பாலும் நோய் தாக்குவதில்லை. ஆடு களுக்கு கொடுக்கும்போது ஆரோக்கியம் அதிகரிப் பதுடன் பாலின் அளவு கூடுகிறது. அசோலாவை உணவு உப்புடன் சேர்த்து பன்றிகளுக்கு கொடுத்தால் எடை அதிகரிப்பதுடன் இறைச்சியின் தன்மையும் நன்றாக இருக்கும். பெரிய தொட்டிகளில் வியாபார ரீதியாக மீன் வளர்ப்பவர்கள், அசோலாவை உணவாகக் கொடுத்தால் அதிக எடையிலான மீன்கள் விரைவாகவே கிடைக்கும். முயலுக்கும் கூட அசோலாவைக் கொடுக்கலாம். இதன் பயன்ப £ட்டை சொல்லிக்கொண்டே போகலாம்'' என்று பெருமிதமாகச் சொன்னவர், ''அசோலா வளர்ப்பு சம்பந்தமான பயிற்சியை மாதம் இரண்டு தடவை கன்னியாகுமரியிலிருக்கும் எங்கள் கேந்திராவில சொல்லிக்கொடுக்கிறோம். இரண்டு நாள் பயிற்சிக்கான கட்டணம் ரூ.400. தங்குமிடம், உணவு மற்றும் அசோலா வளர்ப்புக்கான பாலிதீன் ஷீட்கள் ஆகியவையும், விதைப்புக்குத் தேவைப்படும் அசோலாவையும் இலவசமாக கொடுப்போம்” என்று சொன்னார்.
ஆடு, மாடுகளுக்கு மட்டுமன்றி பயிருக்கும் பயன் தருவதாக வந்திருக்கும் அசோலா... உண்மையிலேயே அமுதசுரபிதான்!

கொசு விரட்டும் அசோலா! 

அசோலாவில் அதிகளவு புரதச்சத்து, அமினோ அமிலங்கள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி-12, பீட்டா கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு, தாமிரம், மெக்னீசியம், ஆகியவை அடங்கி யுள்ளன. அசோலாவில் நீர்ச்சத்து 90-92%, புரோட்டீன் 25-30%, அமினோ அமிலங்கள் 10-15% என்ற அளவில் உள்ளன. மிகக் குறைந்தளவு எண்ணெய் சத்தும், கார்போ-ஹைட்ரேட்டும் உள்ளன.
ஏழைகளின் 'ஸ்பைருலினா' என அழைக்கப்படும் அசோலாவை மனிதர்களும் சாப்பிடலாம். அசோலாவை நன்றாக கழுவி பாலில் போட்டு கொதிக்கவைத்து சாப்பிடலாம். வடை, போண்டா வகைகளில் கீரைக்குப் பதிலாக அசோலாவை பயன்படுத்தலாம். கொழுப்பே இல்லை... முழுக்க புரதமே நிறைந்திருக்கிறது என்பதால் எந்த பயமும் இல்லை.
அசோலா வளர்க்கும் இடத்தில் கொசு வராது என்பதால், கொசுத் தொல்லை இருப்பவர்களும் இதை வளர்க்கலாம்.

நெல் நடவு செய்த ஒரு வாரத்தில ஒரு ஏக்கர் நிலத்தில் 200 கிலோ அசோலாவை போடவேண்டும். அது 25 நாட்களில் நன்றாக வளர்ந்து நிலம் முழுவதும் பரவிவிடும். இது நுண்ணுயிர் உரம் என்பதால் 30% உரச்செலவு குறையும். தண்ணீர் ஆவியாவது தடுக்கப் படும். களைகள் கட்டுப்படும். மகசூலும் கூடும்.

Wednesday, March 2, 2016

ஆட்டு எரு: சத்துமிக்க இயற்கை உரம்

ஆட்டு எரு: சத்துமிக்க இயற்கை உரம்

பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றால் ஏற்படும் பக்க விளைவுகள் மனித சமுதாயத்திற்கு பெரும் தீங்கை விளைவிக்கின்றன.
அன்றாடம் பயன்படுத்தப்படும் காய்கறிகள் முதல் கடுகு வரை ஒவ்வொன்றையும் விளைவிக்க பயன்படுத்தப்படும் யூரியா போன்ற செயற்கை ரசாயன உரங்கள் உடலுக்கு பெரும் தீங்கை விளைவிக்கக் கூடியவை.அதேநேரத்தில், ரசாயன உரங்களின் விலையும் தற்போது வேகமாக உயர்ந்து வருகிறது.
செயற்கை ரசாயன உரங்களால் நமக்கு ஏற்படும் ஆபத்துகளைப் போக்க இயற்கை நமக்கு தந்த வரப்பிரசாதம்தான் ஆட்டு எரு. ஆட்டு எருவில், மாட்டு எருவில் உள்ளதைப் போல 2 மடங்கு தழைச் சத்தும், சாம்பல் சத்தும் உள்ளன. ஓர் ஆடு, ஓராண்டுக்கு 500 முதல் 750 கிலோ வரை எருவைக் கொடுக்கிறது.
ஓர் ஏக்கர் நிலத்தை எல்லா சத்துகளையும் கொண்டு வளப்படுத்த 100 ஆடுகளை வளர்த்தால் போதுமானது. ஆட்டு எரு மண் வளத்தைப் பெருக்கி, பசுமைப் புரட்சிக்கு வித்திடுகிறது என்றால் மிகையாகாது.
ஆட்டு எருவை மண்ணில் இட்டால் கரிமப் பொருள்களின் அளவு அதிகரித்து ஈரப் பதத்தை சேமிக்கும் திறன் அதிகமாகிறது. ஆட்டு எருவில் உள்ள சத்துகளின் அளவு, ஆட்டு இனம் மற்றும் அவற்றுக்கு அளிக்கப்படும் தீவனத்தைப் பொருத்தே இருக்கும்.
ஆடுகளுக்கு புரதச்சத்து நிறைந்த தீவனங்களான குதிரை மசால், முயல் மசால், வேலி மசால், சுபா புல், தட்டைப் பயறு போன்ற தீவனங்களை அளித்தால், எருவில் தழைச்சத்தின் அளவு அதிகமாக இருப்பதோடு, நுண்ணூட்டச் சத்துகளும், தாது உப்புகளும் அதிகமாகக் காணப்படும். ஆட்டு எருவில் 60 முதல் 70 சதம் தண்ணீரும், 2 சதம் தழைச் சத்தும், 0.4 சதம் மணிச் சத்தும் 1.7 சதம் சாம்பல் சத்தும் உள்ளன. மேலும், பயிர் வளர்ச்சிக்குத் தேவையான போரான், மெக்னீசியம், கோபால்ட், தாமிரம், துத்தநாகம், மாலிப்டினம் சத்துகளும் அதிகளவில் காணப்படுகின்றன.
நம்முடைய அன்றாட விவசாயத்திற்கு அதிகளவில் ஆட்டு எரு தேவைப்படுமாயின் அவற்றை ஆழ்கூள முறையில் தயார் செய்யலாம்.
அதற்கு முதலில் ஆட்டுக் கொட்டகையின் தரைப் பகுதியில் நிலக்கடலைத் தோல், சிறிய துண்டுகளாக வெட்டிய வைக்கோல், இலைச் சருகுகள், மரத்தூள், தேங்காய் நார்க் கழிவு போன்றவற்றை அரை அடி உயரத்தில் ஓர் ஆட்டிற்கு 7 கிலோ என்ற அளவில் பரப்ப வேண்டும்.
இவ்வாறு பரப்பினால் ஆட்டுப் புழுக்கையானது இந்த ஆழ் கூளத்தில் படிந்துவிடும். சிறுநீர் ஆழ் கூளத்தால் உறிஞ்சப்பட்டு தழைச் சத்து வீணாகாமல் பாதுகாக்கப்படும். ஆழ் கூளத்தில் உள்ள ஈரத் தன்மையைப் பொருத்து 3-லிருந்து 4 மாதங்களுக்கு ஒரு முறை ஆழ் கூள் ஆட்டு எருவை விவசாயத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்.
ஆழ் கூள முறையைப் பொருத்தமட்டில் 10 ஆடுகளிலிருந்து ஓராண்டில் இரண்டரை டன் தரமான எரு கிடைக்கும். இதில் 50 கிலோ யூரியாவில் உள்ளதைப்போல, தழைச் சத்தும், 37 கிலோ சூப்பர் பாஸ்பேட்டில் உள்ள மணிச் சத்தும், 40 கிலோ பொட்டாஷில் உள்ள சாம்பல் சத்தும் கிடைக்கும்.
இவ்வாறு ஆழ் கூள முறையில் பெறப்படும் ஆட்டு எருவை வேளாண் பயிர் சாகுபடிக்கு பயன்படுத்தினால் களை எடுக்கும் செலவு குறையும். மேலும், நெல், தக்காளி, மிளகாய், கத்தரி மற்றும் அனைத்து விதமான வேளாண்மைப் பயிர்களுக்கும் இந்த எருவைப் பயன்படுத்தினால் அதிக லாபம் அடையலாம்.
எனவே, ஆட்டு எருவை முறையாகப் பயன்படுத்தி இயற்கை வழி வேளாண்மைக்கு வித்திட்டால் ரசாயன உரங்களால் ஏற்படும் தீமைகளைக் குறைக்க முடியும்.
நன்றி: தினமணி

இயற்கை பூச்சி விரட்டி செய்வது எப்படி?

இயற்கை பூச்சி விரட்டி செய்வது எப்படி?

  • கசப்பு சுவையுள்ள (வேம்பு) 2 கிலோ, பாலுள்ள செடி (எருக்கு இலை) 2கிலோ, துவர்ப்பு சுவையுள்ள செடி 2 கிலோ, கொய்யா இலை 1/2 கிலோ, கரும்பு வெல்லம் அல்லது கருப்பட்டி 1/2 கிலோ, மேற்கண்ட இலைகளை உரலில் இட்டு ஆட்டி 10 லிட்டர் கோமியத்தில் கலக்க வேண்டும்.
  • 1/2 கிலோ வெல்லம் அல்லது கருப்பட்டியை தூளாக்கி தண்ணீரில் கரைத்து மேற்கண்ட கரைசலுடன் சேர்த்து, கரைசலை பிளாஸ்டிக் அல்லது சிமென்ட் தொட்டியில் தயாரிக்க வேண்டும்.
  • நிழலான இடத்தில் வைக்க வேண்டும். மூடி வைக்க வேண்டும்.
  • இரண்டு நாள் கழித்து வடிகட்டி 1லிட்டர் கரைசலுடன் 10 லிட்டர் நீர் சேர்த்து தாவரங்களின் இலைகளில் தெளிக்க வேண்டும்.
  • அடர்த்தியான இலைப்பகுதிகளில் இக்கரைசலை ஐந்து நாட்களுக்கு ஒருமுறை தெளிக்க வேண்டும். 5 கிராம் காதி சோப்புக் கரைசலை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • 5 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்க வேண்டும். இலைகளில் கரைசலின் நாற்றம் இருந்து கொண்டு இருக்கும். எனவே பூச்சிகள் நெருங்காது.
  • ஒவ்வொரு தடவை தெளிக்கும் போது வேறு மூன்று, நான்கு ரக குலைகளை மேற்கண்டவாறு ஊறப்போட்டு 1 லிட்டருக்கு 10 லிட்டர் நீர் சேர்த்துக் சோப்புக் கரைசலையும் சேர்த்து தெளிக்க வேண்டும்.
இவ்விதம் தயார் செய்த பூச்சி விரட்டிக் கரைசலின் மூலம் பெரும்பாலான பூச்சிகளை விரட்டி விடலாம்

இயற்கை பூச்சி விரட்டி

 இயற்கை பூச்சி விரட்டி 

















இன்னொரு இயற்கை பூச்சி விரட்டி – அரப்பு மோர்

இன்னொரு இயற்கை பூச்சி விரட்டி – அரப்பு மோர்

இயற்கை தொழில்நுட்பங்களில் ஒன்றான அரப்பு மோர் கரைசல்  தயாரிப்பது எப்படி?
குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்கள் கிராமங்களில் பண்ணை மகளிர் அமைக்கும் வீட்டுக் காய்கறி மற்றும் பயிர் சாகுபடி நிலங்களில் எளிதாக வேளாண் பணிகளை சிறப்பான முறையில் செய்து அதிக லாபம் பெற அரப்பு மோர் கரைசலை தயாரிக்கவும், தொடர்ந்து பயன்படுத்துவது வாயிலாக அதிகளவு மகசூல் பெற முடியும்.

தயாரிக்கும் முறை:
  • நமது ஊர்களில் அதிகமாக கிடைக்கும் அரப்பு இலை அல்லது உசிலை மர இலைகளை 2 கிலோ அளவில் பறித்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் நன்றாக நீருடன் சேர்த்து அரைக்க வேண்டும்.
  • இதிலிருந்து 5 லிட்டர் அளவில் கரைசல் எடுத்து புளித்த மோருடன் சேர்க்க வேண்டும்.
  • பின்னர் இந்தக் கரைசல் கலவையை மண்பானை அல்லது பிளாஸ்டிக் வாளியில் ஒருவார காலத்துக்கு புளிக்க விட வேண்டும்.
  • பின்பு ஒரு லிட்டர் அரப்பு மோர் கரைசலுடன் 10 லிட்டர் தண்ணீர் கலந்து விவசாயிகள் பயிர்களுக்கு எளிதாக தெளிக்கலாம்.
  • கை தெளிப்பானில் தெளிக்கும் போது ஒரு டேங்க் அளவுக்கு தெளிக்கும் அளவு இது ஒரு ஏக்கர் பயிருக்கு 10 தெளிப்பான் டேங்க் அளவுக்கு தெளிக்க வேண்டியிருக்கும்.
  • விவசாயிகள், பண்ணை மகளிர் குறைந்த செலவில் அரப்பு மோர் கரைசலை தங்கள் வீடுகளிலேயே தயார் செய்து குறைந்த காலத்தில் பயன்படுத்தி அதிக மகசூல் பெற முடியும்.
பிற பயன்கள்:
  • அரப்பு மோர் கரைசல் தெளிப்பதன் வாயிலாக எளிதாக பயிர் பாதுகாப்பு தொடர் நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொள்ள முடியும்.
  • அரப்பு மோர் கரைசல் தெளிப்பதால் பூச்சிகள் தூர ஓடிவிடும்.
  • குறைந்த செலவில் விவசாயிகள் தங்களின் வீடுகளில், வயல்களில், தோட்டங்களில் உள்ள பயிரை எளிதாக பாதுகாக்க முடியும்.
  • அரப்பு மோர் கரைசலை பூப் பிடிக்கும் பருவத்தில் தெளிப்பதால் பயிர் வளர்ச்சி வேகமாக காணப்படும். நிறையப்பூக்கள் பூக்கும்.
  • அரப்பு மோர் கரைசலில் ஜிப்ரலிக் அமிலம் என்ற வளர்ச்சி ஊக்கி உள்ளதால் பயிர்கள் குறைந்த காலத்தில் நல்ல வளர்ச்சியை தந்து அதிக விளைச்சல் மற்றும் மகசூல் கிடைக்கும்.

Tuesday, June 23, 2015

பசுந்தாள் உரங்கள்

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம் - பசுந்தாள் உரங்கள்


ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகமானது மண்ணில் இருக்கும் இயற்கை ஊட்டங்களை பயிர் சாகுபடிக்கு பயன்படுத்திக் கொள்ள ஊக்குவிக்கிறது. பயிரின் ஊட்டச்சத்து தேவையையும், இயற்கை மற்றும் ரசாயன ஆதாரங்களின் மூலம் ஊட்டச்சத்துக்களையும் ஒருங்கிணைத்து பயிர்களுக்கு சமச்சீர் ஊட்டத்தை அளிக்கிறது. 
இயற்கையோடு ஒன்றிய, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கக் கூடிய உன்னத உர உபயோக வழிமுறை தான் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகமாகும்.

"மண் வளத்தைப் பேணிக் காக்க மட்குத் தன்மையை அதிகரிப்பதாகும். அதிக மட்கும் தன்மையுள்ள மண் மிகுந்த வளமான மண்ணாகவும், ஈரம் காக்கும் தன்மையுடையதாகவும், பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நுண்ணுயிரிகளை பெருக்கும் தன்மையுடையதாகவும் இருக்கும். இத்தகைய மண்ணில் பயிரிடப்படும் பயிர்கள் முழு உற்பத்தித் திறனை வெளிக்கொணர்வதாக இருக்கும்.

மண்ணின் மட்குத் தன்மையை பசுந்தாள் உரப் பயிர்களை நிலத்தில் விதைத்து பூக்கும் பருவத்தில் மடக்கி உழுவதன் மூலம், பசுந்தழைகள், தொழு உரம், மண் புழு உரம், பயிர்க் கழிவுகள் மற்றும் கால்நடைக் கழிவுகள் பயிர் உற்பத்திக்கு பயன்படுத்துவதன் மூலமும் அதிகரிக்கலாம்.

பசுந்தாள் உரங்களை இடும்பொழுது பயிர்களுக்குத் தேவையான சத்துக்களை அளிப்பது மட்டுமன்றி மண் வளம், கட்டமைப்பை மேம்படுத்தி மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளின் பெருக்கத்துக்கும் வழிவகுக்கிறது.

சணப்பை, தக்கைப் பூண்டு, பில்லிபெசரா, சீமை அகத்தி, கொளிஞ்சி போன்ற பசுந்தாள் உரப் பயிர்களை மண்ணில் விதைத்து, பூக்கும் பருவத்தில் மடக்கி உழ வேண்டும். இதனால், மண்ணில் தழைச்சத்து சேர்க்கப்படும் அளவு குறைவாக இருந்தாலும் தொடர் பயன்பாட்டின்போது மண்வளம் பெரிதும் மேம்படுத்தப்படுகிறது.

விவசாயிகளால் பெருமளவில் பயன்படுத்தப்படும் இயற்கை இடுபொருள் தொழு உரம் கால்நடைகளின் சாணம், தீவன மிச்சங்கள், வைக்கோல் மற்றும் இதர பயிர்க் கழிவுகளுடன் நன்கு மட்க வைக்கப்பட்டு மண்ணில் இடுவதால் பயிர் விளைச்சல் மற்றும் மண்ணின் தன்மை மேம்படுத்தப்படுகிறது.

நன்கு மட்கிய தொழு உரத்தை பயிர் விதைப்பிற்கு மூன்று வாரங்களுக்கு முன் மண்ணில் இட்டு நன்கு உழவு செய்வது உள்ளிட்டவைகள் மூலம் மண் வளம் பாதிக்காமல் பயிர்களுக்கு கிடைக்கும்.

சீமை அகத்தி - Gliricidia sepium benefits

Gliricidia sepium - சீமை அகத்தி Seemai Agathi,Vivasaaya Thegarai

General. 

Known commonly as gliricidia or madre tree, Gliricidia sepium is well known in plantation agriculture as a shade tree. Therefore, it is also called the Mother of Cocoa. It is a nitrogen-fixing tree that is native to Central and South America. Gliricidia was introduced to Sri Lanka from West Indies and later to India.

Tree. 

Gliricidia is a small fast growing, deciduous, thornless tree. Its short trunk is covered with soft gray bark marked by longitudinal cracks. It grows up to 10 m height. It has an open crown and a trunk of less than 30 cm diameter.

 Distribution.

 It is grown for green manure in Maharashtra, Tamil Nadu, Karnataka and Kerala. It is widely planted on farm bunds, backyards, and as live fencing.

Soil and Climate. 

Gliricidia prefers deep, rich, well-drained soils. It can be grown up to an elevation of 1000 m, but does not tolerate frost. It is a fast-growing species, especially in warm and humid climate.

Propagation.

 It is propagated by seed or cuttings. The easiest method is to use poles of about 2.0 m length, which regenerate readily and grow into a tree within a short period. Removal of such poles also helps keep the tree in proper shape. Seeds can be sown directly or in polybags and raised in a nursery for transplanting.

 Important uses: 

Green manure. 

Gliricidia enhances soil organic matter when green foliage and dry leaf litter are incorporated. Being a nitrogen fixer, the biomass of gliricidia is a rich source of nitrogen. During dry and cold seasons, it sheds its leaves and thereby conserves precious soil moisture. It can be grown along the boundaries of the field and the green matter per ha annually. Its essential nutrient composition is 2.9% N, 0.5% P2O5 and 2.8% K2O.

Wood and fuel. 

Wood finishes smoothly and is suitable for making small articles, agricultural implements and tool handles. Wood is highly resistant to termites and decay. It is also used for ports and heavy construction. It is a good fuel wood with a calorific value of 4,900 k. cal per kg. Gliricidia produces ample branch wood as it coppices easily.

 Ornamental value. 

The tree produces dense masses of attractive white or pink flowers. The flowers are a good source of forage for bees. The flowers appear during January March when the tree is leafless. It can be grown along paths of parks, gardens and avenues. It can also be pruned to a height of 2.0 m and maintained as a hedge.

Shade. 

Gliricidia is traditionally used as a shade tree for plantation crops and as a support for pepper and vanilla.

 Fodder. 

Leaves of gliricidia contain more than 20% crude protein and are nutritious for cattle. But livestock not conditioned to it may not readily eat it. In such situations, wilting the leaf may be helpful.

 Other uses.

 The roots, bark and seeds are poisonous. Juice of the leaves is used for treating centipede bite. Flowers and seeds are used as rat poison. Powdered seeds, leaves and bark mixed with rice are used for controlling storage pests. 

Friday, May 29, 2015

Manures - Amudha Karaisal

Manures - Amudha Karaisal

In this blog, we are going to see Amudha Karaisal.  This is known as Amruthpani in Hindi.


Required Ingredients


S.No.Ingredient NameQty in Litres/Kgs
1Fresh Cow Dung1 Kg
2Cow's Urine1 Litres
3Jaggery25 Grams
4Water10 Litres
5Ipomoea Cornea1 Kg

Note:
  • Ipomoea Cornea is known as Neiveli Kattamanakku in Tamil and is an Optional Ingredient.
Method of Preparation
  1. Mix all of them and stir well (3 times a day).
  2. The manure should be kept in the shade and covered with a wire mesh or plastic mosquito net to prevent houseflies from laying eggs and the formation of maggots (worms) in the solution.

Method of Storage
  1. Not Applicable as the manure can be used after 24 hours itself.

How long can we store the Manure?
  1. Not Applicable as the manure can be used after 24 hours itself.

How to use the Manure?
  1. Spray System - The manure can be applied as a foliar spray.
  2. Flow System - The solution of manure can be mixed with irrigation water, either through drip irrigation or flow irrigation.
Note: Dilute 1 Litre of the manure with 10 Litres of Water before applying.

When to use the Manure?
  1. Generally, it is accepted that every 15 days the manure can be applied.

List of Nitrogen Fixers

List of Nitrogen Fixers

In this blog, we will see the various crops that fix Nitrogen in the soil.  This will enable us to plan well and get the maximum benefit.


Identifying Excessive or Deficient Nitrogen
  1. Too Little Nitrogen results in plant burning, which causes them to shrivel and die
  2. Too Much Nitrogen results in Leaf edges becoming yellow or brown and wilt


List of Nitrogen Fixers
  1. Albizia lebbeck (வாகை மரம்)
  2. Alfalfa (குதிரை மசால்)
  3. Alsike clover / true clover
  4. Bambara groundnut
  5. Beech Tree(புங்கம்)
  6. Berseem clover
  7. Birdsfoot trefoil
  8. Blue-green alga
  9. Bread Beans
  10. Broad bean (அவரைக்காய்)
  11. Chicken Pea (கொண்டைகடலை)
  12. Clitoria ternatia (சங்கு புஷ்பம் மரம்)
  13. Clover (தீவனப்புல்)
  14. Common bean
  15. Cowpea
  16. Crimson clover
  17. False Rudraksh
  18. Fenugreek (வெந்தயம்)
  19. Field peas
  20. French Beans
  21. Gliricidia sepium (சீமை கொன்றை)
  22. Green Gram
  23. Groundnut (கடலை)
  24. Hairy vetch
  25. Hyacinth Beans (அவரைக்காய்/ மொச்சை)
  26. Leucaena leucocephala (சவுண்டல் /கூபாபுல் )
  27. Indian Coral Tree (கல்யாண முருங்கை)
  28. Manila Tamarind (கொடுக்காபுளி)
  29. Mung bean
  30. Pecan
  31. Pigeon Pea or Red Gram
  32. Prosopis cineraria (வன்னி மரம்)
  33. Red Beans (Adzuki bean)
  34. Red Bead Tree (ஆனை குண்டுமணி)
  35. Red clover
  36. Senna
  37. Sesbania Grandiflora (அகத்தி கீரை)
  38. Sesbania sp
  39. Soybeans
  40. Sunhemp
  41. Sweet clover
  42. Sweet Peas
  43. Velvet bean (பூனைக்காலி)
  44. White sweetclover (வெள்ளை இனிப்பு தீவனப்புல்)

Pesticides - Ginger Garlic Extract

Pesticides - Ginger Garlic Extract

In this blog, we are going to see Ginger Garlic Extract which is called as Inji Poondu Karaisal in Tamil

Required Ingredients

S.No.Ingredient NameQty in Litres/Gms
1Ginger1 Gms
3Garlic2 Gms
2Green Chilli1 Gms
4Cow's Urine5 Litres
5Water1 Litres

Method of Preparation
  1. The Garlic outer skin is removed and ground into a paste.
  2. The Ginger and Green Chilli are ground into a paste.
  3. Both the pastes are dissolved in Cow's Urine & Water and is kept for 10 days.
  4. Please note that the stick (neem stick is better or any pole) used for mixing the ingredients should be cleaned before & after the usage so as to avoid maggots formations in the pesticide.
Method of Storage
  1. The pesticide should be kept in the shade and covered with a wire mesh or plastic mosquito net to prevent houseflies from laying eggs and the formation of maggots (worms) in the solution. This is applicable during the preparation as well as during the shelf life of the pesticide as well.
How long can we store the Pesticide?
  1. Not Applicable

How to use the Pesticide?
  1. Spray System - The pesticide can be applied as a foliar spray.
Note: Dilute 500 ml to 1000 ml of the pesticide with 10 Litres of water before applying.

When to use the Pesticide?
  1. Generally, the ideal time for spraying is during 6 am to 8.30 am and between 4 pm and 6.30 pm.
Which pests are controlled by the pesticide?
  1. The pesticide is effective in controlling leaf roller, thrips, mealy bugs, fruit, stem and bark borer, hairy caterpillar and aphids.

Manures - Effective Microorganisms

Manures - Effective Microorganisms

In this blog, we are going to see Effective Microorganisms which are mainly used for composting purposes but can also be used as a manure.

Required Ingredients

S.No.Ingredient NameQty in Litres/Kgs
1Papaya500 Grams
3Jaggery500 Grams
2Yellow Pumpkin / White Pumpkin 500 Grams
4Live Soil with good moisture1 Handful
5Water20 Litres
6Mud Pot1 Number

Note:
  • Please note that the stick (neem stick is better or any pole) used for mixing the ingredients should be cleaned before & after the usage so as to avoid maggots formations in the manure.

Method of Preparation
  1. Fill the Mud Pot with 20 Litres of Water.
  2. Crush the jaggery into fine powder and dissolve it in water.
  3. Remove the skin of the papaya and cut the papaya into very small pieces and put it in the water.
  4. Repeat the step 3 for Pumpkin as well.
  5. Add the Live Soil to the water (The Live Soil should not be dry and should have enough moisture in it)
  6. Stir the contents daily in the evening.
  7. The solution will be ready in about 10-15 days and a foul smell will emanate and this indicates the solution is ready for use.
    Method of Storage
    1. The manure should be kept in the shade and covered with a wire mesh or plastic mosquito net to prevent houseflies from laying eggs and the formation of maggots (worms) in the solution. This is applicable during the preparation as well as during the shelf life of the manure as well.
    How long can we store the Manure?
    1. Not Applicable
    How to use the Manure?
    1. Spray System - The manure can be applied as a foliar spray.
    2. Flow System - The solution of manure can be mixed with irrigation water, either through drip irrigation or flow irrigation.
    When to use the Manure?
    1. Generally, it is accepted that every 15 days the manure can be applied.

    Pesticides - Five Leaf Extract

    Pesticides - Five Leaf Extract

    In this blog, we are going to see Five Leaf Extract which is called as Eindhu Ilai Karaisal in Tamil.

    Required Ingredients
    S.No.Ingredient NameQty in Litres/Kgs
    1Neem Leaves (Vembu in Tamil)1 Kg
    2Vitex negundo or Chaste Tree Leaves (Nochi in  Tamil)1 Kg
    3Guduchhi/Amruth (Seenthil Kodi in Tamil)1 Kg
    4Jatropha curcas (Kattu Amanaku in Tamil )1 Kg
    5Calotropis gigantea (Erukkan in Tamil)1 Kg
    6Water5 Litres
    7Cow's Urine5 Litres

    Note:
    • Can also use leaves of Malabar Nut (Adathoda in Tamil), Andrographis paniculata or Kalmegh (Siriyanangai in Tamil), Clerodendron (Peenarisanghu in Tamil) and Usil (Arappu in Tamil).

    Method of Preparation
    1. Make a paste of any of the five leaves mentioned above and dissolve it in 5 Litres Cows Urine.
    2. The concoction is then diluted in 5 Litres of Water.
    3. Keep this undisturbed for 5 days.
    Method of Storage
    1. The pesticide should be kept in the shade and covered with a wire mesh or plastic mosquito net to prevent houseflies from laying eggs and the formation of maggots (worms) in the solution. This is applicable during the preparation as well as during the shelf life of the pesticide as well.
    How long can we store the Pesticide?
    1. Not Applicable
    How to use the Pesticide?
    1. Spray System - The pesticide can be applied as a foliar spray.
    Note: Dilute 500 ml of the pesticide with 10 Litres of water before applying.

    When to use the Pesticide?
    1. Generally, the ideal time for spraying is during 6 am to 8.30 am and between 4 pm and 6.30 pm.
    Which pests are controlled by the pesticide?
    1. Generally, most of the pests are controlled by this.

    Pesticides - Neem Leaves Paste

    Pesticides - Neem Leaves Paste

    In this blog, we are going to see Neem Leaves Paste.

    Required Ingredients

    S.No.Ingredient NameQty in Litres/Grams/Kgs
    1Water50 Litres
    2Fresh Cow Dung20 Kgs
    3Cow's Urine20 Litres
    4Neem Leaves20 Kgs

    Method of Preparation
    1. First add the Cow Dung to the Water.
    2. Add Cow's Urine as well.
    3. Crush the Neem Leaves well and add the pulp as well.
    4. Stir the solution using a stick to get a fine paste after 48 hours.
    Note:
    • Please note that the stick (neem stick is better or any pole) used for mixing the ingredients should be cleaned before & after the usage so as to avoid maggots formations in the pesticide.
    • The pesticide should be kept in the shade and covered with a wire mesh or plastic mosquito net to prevent houseflies from laying eggs and the formation of maggots (worms) in the solution.

    Method of Storage
    1. The pesticide should be kept in the shade and covered with a wire mesh or plastic mosquito net to prevent houseflies from laying eggs and the formation of maggots (worms) in the solution.  This is applicable during the preparation as well as during the shelf life of the pesticide as well.
    How long can we store the Pesticide?
    1. Not Applicable
    How to use the Pesticide?
    1. Apply the paste to the stems of Mango, Pomegranate & Orange trees.
    When to use the Pesticide?
    1. Generally, the ideal time for applying the paste is during 6 am to 8.30 am and between 4 pm and 6.30 pm.
    Which pests are controlled by the Pesticide?
    1. Not Applicable

    Pesticides - Agniastra

    Pesticides - Agniastra

    In this blog, we are going to see Agniastra which is popularised by Subhash Palekar.

    Required Ingredients

    S.No.Ingredient NameQty in Litres/Kgs
    1Pot1
    2Cow's Urine10 Litres
    3Tobacco1 Kg
    4Green Chillies500 Grams
    4Neem Leaves5 Kgs

    Note:
    • Cow's Urine should be from Local Cows and not from cross-bred or foreign breeds.

    Method of Preparation
    1. Add 10 Litres of Cow's Urine to the Pot.
    2. Crush the Tobacco and add them to the Cow's Urine.
    3. Crush the Green Chillies and add them as well.
    4. Crush the Neem Leaves and add the pulp as well.
    5. Boil this mixture continuously for 5 times.
    6. Allow this solution to ferment for 24 hours.
    7. Filter the solution using a cloth and use it.
    Note:
    • The pesticide should be kept in the shade and covered with a wire mesh or plastic mosquito net to prevent houseflies from laying eggs and the formation of maggots (worms) in the solution.
    Method of Storage
    1. The pesticide should be kept in the shade and covered with a wire mesh or plastic mosquito net to prevent houseflies from laying eggs and the formation of maggots (worms) in the solution.  This is applicable during the preparation as well as during the shelf life of the pesticide as well.
    How long can we store the Pesticide?
    1. Not Applicable
    How to use the Pesticide?
    1. Spray System - The pesticide can be applied as a foliar spray.
    When to use the Pesticide?
    1. Generally, the ideal time for spraying is during 6 am to 8.30 am and between 4 pm and 6.30 pm.
    Which pests are controlled by the Pesticide?
    1. The pesticide is effective in controlling Leaf Roller, Stem Borer, Fruit Borer & Pod Borer.

    Pesticides - Pungam Seeds Solution

    Pesticides - Pungam Seeds Solution

    In this blog, we are going to see Punga Vithai Karaisal or Pungam Seeds Solution.  The botanical name of Pungam is Pongammia Punnata (L.) and it is known as Karanj in Hindi.

    Required Ingredients 

    S.No.Ingredient NameQty in Litres/Grams/Kgs
    1Water1 Litre
    2Pungam Dried Seeds25 Grams

    Method of Preparation
    1. Crush the Pungam Dried Seeds into fine powder.
    2. Add the 25 Grams of Pungam fine powder to 1 Litre of Water.
    3. Stir the solution well so that the fine powder is completely dissolved in the water,
    4. Filter the solution using a cloth and use it.
    Note:
    • Please note that the stick (neem stick is better or any pole) used for mixing the ingredients should be cleaned before & after the usage so as to avoid maggots formations in the pesticide.
    • The pesticide should be kept in the shade and covered with a wire mesh or plastic mosquito net to prevent houseflies from laying eggs and the formation of maggots (worms) in the solution.

    Method of Storage
    1. The pesticide should be kept in the shade and covered with a wire mesh or plastic mosquito net to prevent houseflies from laying eggs and the formation of maggots (worms) in the solution.  This is applicable during the preparation as well as during the shelf life of the pesticide as well.
    How long can we store the Pesticide?
    1. Not Applicable
    How to use the Pesticide?
    1. Spray System - The pesticide can be applied as a foliar spray.
    When to use the Pesticide?
    1. Generally, the ideal time for spraying is during 6 am to 8.30 am and between 4 pm and 6.30 pm.
    Which pests are controlled by the Pesticide?
    1. The pesticide is effective in controlling Aphids.

    Pesticides - Neemastra

    Pesticides - Neemastra

    In this blog, we are going to see Neemastra which is popularised by Subhash Palekar.

    Required Ingredients

    S.No.Ingredient NameQty in Litres/Kgs
    1Water100 Litres
    2Fresh Cow Dung5 Kgs
    3Cow's Urine5 Litres
    4Neem Leaves5 Kgs

    Note:
    • Fresh Cow Dung & Cow's Urine should be from Local Cows and not from cross-bred or foreign breeds.
    Method of Preparation
    1. Add the 5 Litres of Cow's Urine to the 100 Litres of Water.
    2. Add the 5 Kgs of Cow Dung to the water as well.
    3. Crush the 5 Kgs of Neem Leaves and add the Neem Pulp to the water as well.
    4. Allow this solution to ferment for 24 hours.
    5. Stir the solution twice a day by using a stick.
    6. Filter the solution using a cloth and use it.
    Note:
    • Please note that the stick (neem stick is better or any pole) used for mixing the ingredients should be cleaned before & after the usage so as to avoid maggots formations in the pesticide.
    • The pesticide should be kept in the shade and covered with a wire mesh or plastic mosquito net to prevent houseflies from laying eggs and the formation of maggots (worms) in the solution.
    Method of Storage
    1. The pesticide should be mixed thoroughly twice daily (in the morning & evening).
    2. The pesticide should be kept in the shade and covered with a wire mesh or plastic mosquito net to prevent houseflies from laying eggs and the formation of maggots (worms) in the solution.  This is applicable during the preparation as well as during the shelf life of the pesticide as well.
    How long can we store the Pesticide?
    1. Not Applicable
    How to use the Pesticide?
    1. Spray System - The pesticide can be applied as a foliar spray.
    When to use the Pesticide?
    1. Generally, the ideal time for spraying is during 6 am to 8.30 am and between 4 pm and 6.30 pm.
    Which pests are controlled by the Pesticide?
    1. The pesticide is effective in controlling sucking pests and mealy bug.

    Manures - Arappu More Karaisal

    Manures - Arappu More Karaisal

    In this blog, we are going to see Arappu More Karaisal.

    Required Ingredients

    S.No.Ingredient NameQty in Litres/Kgs
    1Usil Leaves2 Kgs
    2Sour Butter Milk5 Litres

    Note:
    • Usil botanical name is Albizia amara and in Hindi it is known as Ailaa.
    Method of Preparation
    1. Separate the Usil Leaves and grind them well using water as required to get 5 Litres of Usil extract solution.
    2. Add Sour Butter Milk to the above solution.
    3. Stir the solution well by using a stick.
    4. Allow the solution to ferment for 7 days.
    Note:
    • Please note that the stick (neem stick is better or any pole) used for mixing the ingredients should be cleaned before & after the usage so as to avoid maggots formations in the manure.
    • The manure should be kept in the shade and covered with a wire mesh or plastic mosquito net to prevent houseflies from laying eggs and the formation of maggots (worms) in the solution.
    Method of Storage
    1. The manure should be kept in the shade and covered with a wire mesh or plastic mosquito net to prevent houseflies from laying eggs and the formation of maggots (worms) in the solution.  This is applicable during the preparation as well as during the shelf life of the pesticide as well.
    How long can we store the Manure?
    1. Not Applicable
    How to use the Manure?
    1. Spray System - The manure can be applied as a foliar spray.
    Note:
    • Dilute 1 Litre of the manure with 10 Litres of water before applying.
    • One acre requires 100 Litres (10 Litres of manure) of spraying.
    When to use the Manure?
    1. Generally, the ideal time for spraying is during 6 am to 8.30 am and between 4 pm and 6.30 pm.
    2. Generally, it is accepted that every 15 days the manure can be applied.

    Pesticides - Thanjavuran Poondu Karaisal

    Pesticides - Thanjavuran Poondu Karaisal

    In this blog, we are going to see Thanjavuran Poondu Karaisal.

    Required Ingredients

    S.No.Ingredient NameQty in Litres/Kgs
    1Rail Poondu250 Grams
    2Cow's Urine2 Litres
    3Neem Oil50 ML
    4Pungan Oil25 ML
    5Fish Amino Acids50 ML

    Note:
    • Rail Poondu botanical name is Croton bonplandianum Baill.
    Method of Preparation
    1. Mix all the Ingredients (No.2 to No.5) well.
    2. Cut the Rail Poondu into small pieces and add it to the solution.
    3. Stir the solution by using a stick.
    4. Allow this solution to ferment for 12 hours.
    5. Filter the solution using a cloth and use it.
    Note:
    • Please note that the stick (neem stick is better or any pole) used for mixing the ingredients should be cleaned before & after the usage so as to avoid maggots formations in the pesticide.
    • The pesticide should be kept in the shade and covered with a wire mesh or plastic mosquito net to prevent houseflies from laying eggs and the formation of maggots (worms) in the solution.
    Method of Storage
    1. The pesticide should be kept in the shade and covered with a wire mesh or plastic mosquito net to prevent houseflies from laying eggs and the formation of maggots (worms) in the solution.  This is applicable during the preparation as well as during the shelf life of the pesticide as well.
    How long can we store the Pesticide?
    1. Not Applicable
    How to use the Pesticide?
    1. Spray System - The pesticide can be applied as a foliar spray.
    Note:
    • Dilute 300 ML of the above extract with 10 Litres of Water before applying.
    • 100 Litres of spray is required for an acre.
    When to use the Pesticide?
    1. Generally, the ideal time for spraying is during 6 am to 8.30 am and between 4 pm and 6.30 pm.
    Which pests are controlled by the Pesticide?
    1. The pesticide is effective in controlling aphids.

    Manures - Attottam

    Manures - Attottam

    We are going to see Attottam.

    Required Ingredients

    S.No.Ingredient NameQty in Litres/Kgs
    1Fresh Goat Dung5 Kgs
    2Goat Urine3 Litres
    3Goat Milk2 Litres
    4Goat Curd2 Litres
    5Banana (Ripe)12 Nos
    6Tender Coconut Water2 Litres
    7Groundnut Cake1.5 Kg
    8Sugarcane Juice2 Kgs
    9Toddy 2 Litres

    Note:
    • Usil botanical name is Albizia amara and in Hindi it is known as Ailaa.
    • An alternative to Groundnut cake is to use Soya or Black Gram or Green Gram grinded well and soaked in water for 24 hours.
    • An alternative to Toddy is to use Coconut Water fermented for 4 days or 50 gms of yeast dissolved in 2 litres of warm water
    • An alterative to Sugarcane Juice is by adding 1 kg of jaggery dissolved in 2 litres of water.
    Method of Preparation
    1. Add Fresh Goat Dung, Goat Urine and Grountnut Cake into a pot or plastic drum.
    2. The next day add Goat Milk, Curd, Coconut Water, Toddy & Sugarcane Juice.
    3. Make the Banana into small pieces or crush them and add them as well.
    4. Stir the solution well twice daily (50 times clockwise and anti-clockwise) by using a stick.
    5. Allow the solution to ferment for 14 days.
    Note:
    • Please note that the stick (neem stick is better or any pole) used for mixing the ingredients should be cleaned before & after the usage so as to avoid maggots formations in the manure.
    • The manure should be kept in the shade and covered with a wire mesh or plastic mosquito net to prevent houseflies from laying eggs and the formation of maggots (worms) in the solution.
    Method of Storage
    1. Stir the solution well twice daily (50 times clockwise and anti-clockwise) by using a stick.
    2. The manure should be kept in the shade and covered with a wire mesh or plastic mosquito net to prevent houseflies from laying eggs and the formation of maggots (worms) in the solution.  This is applicable during the preparation as well as during the shelf life of the pesticide as well.
    How long can we store the Manure?
    1. The manure can be stored for 6 months time.
    How to use the Manure?
    1. Spray System - The manure can be applied as a foliar spray.
    Note:
    • Dilute 200 Milli Litre of the manure with 10 Litres of water before applying.
    • 2 Litres of Attottam diluted in 100 Litres of water is enough for an acre.
    When to use the Manure?
    1. Generally, the ideal time for spraying is during 6 am to 8.30 am and between 4 pm and 6.30 pm.
    2. Generally, it is accepted that every 15 days the manure can be applied.