Tuesday, March 22, 2016

Farm Design - Design One (Ver 2.2)

Farm Design - Design One (Ver 2.2)

We will cover the various permutations and combinations of Long Term Crops (mainly Trees) &
 Medium Term Crops (again mainly Trees) and their placement at a basic design level.

So far, we have covered where the Trees will occupy the spaces in the field.  
But now, we will see the different options within the Trees Space as well.




I have provided 6 options above and we will discuss them in detail below.  
The Options that marked with * can be applied for Long Term Crops & Medium Term Crops as well.

Option 1

  • This option is a very generic option and no specific crops have been mentioned.  
The Long Term Crops specifically means that we should only plant crops that are long term in nature and
similarly Medium Term Crops specifically means that we should only plant crops 
that are medium term in nature.
  • The only requirement in this option is that we have to alternate between Long Term Crops & 
Short Term Crops in each row.
  • The advantage is that the entire row needs attention at the same time whether it is pruning,
 manuring, pesticide requirements, harvest etc.
  • This option is very simple in nature when compared to the other options.


Option 2*
  • This option has Single Type Fruit Crops in one row and Single Type Timber Crops in alternate row.
  • The only requirement in this option is that only one Fruit Crop (eg Mango) has to be planted in one row and 
followed by one Timber Crop (eg Teak) in the next row.
  • The third row can be a different Fruit Crop (eg Coconut) and the fourth row can be a different Timber Crop 
(eg Red Sanders) as well.
  • The advantage is that the entire row needs attention at the same time whether it is pruning, 
manuring, pesticide management, harvest etc.
  • Another advantage in this option is that the alternate row is occupied by Timber Crops and 
the crown size generally will be very less and hence the Odd Rows (Fruit Crops) will 
get sufficient space to grow.
  • This option is again very simple in nature.



Option 3*
  • This option has Single Type Fruit Crops (eg Mango) in one column and 
followed by Single Type Timber Crops (eg Teak) in the next column.
  • The second row can be a different Fruit Crop (eg Coconut) as well as the same or entirely different 
Timber Crop (eg Teak or Red Sanders).
  • The advantage in this option is that the alternate column is occupied by Timber Crops and 
the crown size generally will be very less and hence the Fruit Crops will get sufficient space to grow.
  • The complications starts here as we have 2 different crops in the same row and 
hence has to be managed differently.


Option 4*
  • This option has Single Type Fruit Crops (eg Mango) in one column and followed by 
Multiple Type Timber Crops (eg Melia + Teak + etc) in the next columns.
  • The second row can be a different Fruit Crop (eg Coconut) as well as the same or 
entirely different Timber Crops (eg Melia + Teak + etc or Pencil + Red Sanders + etc).
  • The advantage in this option is that the alternate column is occupied by Timber Crops and
 the crown size generally will be very less and hence the Fruit Crops will get sufficient space to grow.
  • The complications starts here as we have 1 fixed Fruit Crop and 2 or more different 
Timber Crops in the same row and hence has to be managed differently.



Option 5*
  • This option has Multiple Type Fruit Crops (eg Mango + Sapota + etc) and 
followed by Multiple Type Timber Crops (eg Melia + Teak + etc) in the next columns.
  • The second row can be the same or entirely different set of Fruit Crops 
(eg Mango + Sapota + etc or Coconut + Tamarind + etc) as well as the same or entirely different 
Timber Crops (eg Melia + Teak + etc or Pencil + Red Sanders + etc).
  • The advantage in this option is that the alternate column is occupied by Timber Crops and 
the crown size generally will be very less and hence the Fruit Crops will get sufficient space to grow.
  • The complications starts here as we have 2 or more different Fruit Crop and 
2 or more different Timber crops in the same row and hence has to be managed differently.
  • Those who use this option has to maintain records properly to knows which crops stands where.
  • A mini forest is being created in this option.


Option 6
  • This option is a very generic option and no specific crops have been mentioned.
One of the  requirements in this option is that we have to alternate between Long Term Fruit Crops & 
Long Term Timber Crops in the same row.
The other requirement in this option is that we have to alternate between Medium Term Fruit Crops & 
Medium Term Timber Crops in the next row.
  • The advantage in this option is that the alternate column is occupied by Timber Crops and
 the crown size generally will be very less and hence the Fruit Crops column will get sufficient space to grow.
  • Another advantage in this option is that both the crops (more or less) will attain 
maturity at the same time since we are going for the same type of longevity of the crops and 
hence the entire row can be managed properly.
  • A mini forest is being created in this option.

Farm Design - Design One (Ver 3.0)

Farm Design - Design One (Ver 3.0)

We will be covering an important design aspect by which rain water is harvested as part of the design. Water as a resource is becoming scarce and every farmer needs to ensure that water is saved for future use.



We can easily incorporate Rain Water Harvesting in this design without much difficulty.

Each of the Trees Space can be utilized for this purpose.
  We need to dig  trenches of size 2 Ft Width and 1.5 Ft Depth and 
the Length is the entire length of the Trees Space. 

 This method of farming is called Trench Farming. 
 Please note that the Trees are grown in these trenches only.

  • The advantage of this method of Rain Water Harvesting is that we do not have to sacrifice/allocate land for the purpose of Rain Water Harvesting separately.
  • It helps reduce soil erosion due to rains/water run-off.
  • Improves the ground water levels.
  • During the non rainy season, we can use the trenches for putting the broken twigs,
 fallen branches of trees, leaves etc and 
this will become compost.


Please note that the excess water after filling the trenches, 
if any, should be collected in wells, ponds etc or should be made to leave the farmland in a graceful manner.

Note:  Rain Water Harvesting is possible only when there is a Run-Off of Rain Water.

Farm Design - Design One (Ver 4.0)

Farm Design - Design One (Ver 4.0)

We are going to see the Design One (Ver 4.0).




In this blog, we are going to see the actual design in action and 
how we are going to utilize even the space allocated to roads to our advantage.
























Note: The maximum width of the road vehicle in India is not more than 10 ft and 
hence we will keep this in mind while allocating the space for roads.

At the minimum, we have to allocate 15 ft or more for roads in our farm.  

This is only required for the main roads as well as the entire border roads in our farm and 
may not be applicable for the roads in the interior of the farm. 

 This space is required so that the vehicle does not get into the crop areas of the farm and 
hence prevent the damage to the crops in the farm.

If you want the bigger vehicle to travel to the inner parts of the farm also, then 15 ft is required for all the roads.
  Otherwise, you can allocate very small area for smaller vehicles
 (depending on the vehicle width and add 1 or 2 ft extra). 
 This way you can transport the goods to the bigger vehicle by using the small vehicle.

If you want only a single road, I think 15 ft is enough. 
 But if you want double roads (two-way roads) as depicted in the picture, 
it is better to allocate 20 ft for each of the roads. 
 This means you will be allocating 40 ft.

You can plant big trees (bigger crown area) like Coconut, Fig, Tamarind, Jackfruit etc in this Trees Space. 
 This way you are productively using the entire space allocated to the road for other purposes as well.
  This type of planting is applicable only for the East-to-West direction road only.

For the North-to-South direction road, you need to align the trees as per the Trees Space alignment.  
Otherwise, the Open Space area will have shadow and hence the growth of the crops will be affected. 
 If in case, you want to utilize the Open Space area as well, 
you need to grow only those crops that does not grow beyond 4 to 5 ft in height. 

Farm Design - Design One

Farm Design - Design One (Ver 5.0)

We will see the pictorial representation of the Fence Design. 


From the picture, you can notice that there are 3 layers of Fences available. 
 The Fences will consist of 2 Ft Wide & 1.5 Ft Depth.
  The Open Spaces will consist of 3 Ft Wide. 
 Either we can plant ourselves in the Open Spaces or we will allow nature to take care of itself.

It is not necessary to have all the 3 layers of the Fences. 
 Depending on the requirement, you can go for single layer or multiple layers of the Fences.


Reference:

http://agricultureforeverybody.blogspot.in/search?updated-min=2013-01-01T00:00:00%2B05:30&updated-max=2014-01-01T00:00:00%2B05:30&max-results=29

Thursday, March 3, 2016

சமவெளியில் வளரும் கேரட், பீட்ரூட்

சமவெளியில் வளரும் கேரட், பீட்ரூட்

கேரட், பீட்ரூட் போன்ற இங்கிலீஷ் காய்கறிகள் குளிர் நிலவும் பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படுகின்றன. தமிழகத்தில் கொடைக்கானல், ஊட்டி போன்ற இடங்களில் சாதாரணமாக இந்தக் காய்கறி வகைகள் விளைகின்றன. இந்தக் காய்கறிகளைச் சமவெளிப் பகுதியில் விளைவித்திருக்கிறார் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே பச்சுடையாம்பட்டி குட்டைத் தோட்டத்தைச் சேர்ந்த ஜி. சிவக்குமார்.
இதற்குக் காரணம் இயற்கை உரம் தந்த ஊட்டம். ரசாயன உரம் பயன்படுத்தாமல் காய்கறிளை விளைவிப்பது இவருடைய சிறப்பம்சம்.
இவருடைய அப்பா ஆர். கோபாலும் இவரும் 40 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்துவருகிறார்கள். ஆரம்பக் காலத்தில் இருந்து குறுகிய காலப் பயிர்களான கீரை போன்றவற்றைப் பயிரிட்டு வருகிறார்கள். அதில் நல்ல விளைச்சல் கிடைக்கவே, குளிர் பிரதேசங்களில் விளையும் கேரட், பீட்ரூட், காலிஃபிளவர் போன்ற காய்கறி வகைகளை விளைவிக்கும் எண்ணம் தோன்றியது.
அதற்காக நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் ஆலோசனை பெற்றனர். அதன்படி, கேரட், பீட்ரூட், முள்ளங்கி, காலிஃபிளவர் போன்ற பயிர்களைப் பயிரிட்டார்கள். இவற்றுக்கு ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதில்லை.
வீட்டில் வளர்க்கப்படும் கால்நடைகளின் எரு, பஞ்சகவ்யம் போன்றவற்றையே பயன்படுத்துகிறார்கள். இதனால் விளைச்சல் அமோகமாக உள்ளது. இந்த விளைச்சல் தந்த நம்பிக்கையில் ஆப்பிள் மரக்கன்றுகள் வாங்கித் தற்போது நட்டுள்ளனர்.
Courtesy: Hindu
Courtesy: Hindu
மூன்றே மாதங்கள்
“இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதால், எங்களது காய்கறிகளை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். மேலே குறிப்பிட்ட பயிர்கள் அனைத்தும் மூன்று மாதக் காலப் பயிர்கள் என்பதால், விரைவாக அறுவடை செய்ய முடிவதுடன், கணிசமான லாபமும் ஈட்ட முடிகிறது.
இப்பகுதியில் கேரட், பீட்ரூட் விளைவிப்பதைப் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து, தாங்களும் விளைவிக்க முடியுமா என்ற யோசனையுடன் செல்கின்றனர்’’ என்கிறார் ஜி. சிவகுமார். இவர்களது வயலில் தற்போது பீட்ரூட் விளைவிக்கப்படுகிறது. சகோதரர் தோட்டத்தில் காலிஃபிளவர் விளை விக்கிறார்கள். செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை கேரட், பீட்ரூட் விளைவிக்கிறார்கள்.
போதிய மழைப்பொழிவின்மை உள்ளிட்ட காரணங்களால் விவசாயம் நலிவடைந்துவரும் காலகட்டத்தில், குடும்பத்துடன் விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வரும் சிவகுமார் காலத்துக்கேற்ப பயிர்களை விளைவித்து முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.
விவசாயி சிவகுமாரை தொடர்புகொள்ள: 08015267009

சைக்கிள் கலப்பை!

சைக்கிள் கலப்பை!

தெலுங்கானா மாநிலத்தில், ஒரு விவசாயி, சைக்கிள் கலப்பையை கண்டுபிடித்துள்ளார்.தெலுங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டத்தை சேர்ந்தவர், புக்கியாசந்து, 30. அவர், அங்கு விவசாயம் செய்து வருகிறார். சமீபத்தில், தன் நிலத்தில் பருத்தியை விதைத்தார். அப்போது, அவருக்கு ஒரு புதிய யோசனை தோன்றியது.
தன்னிடமிருந்த பழைய சைக்கிளின் பின்புறம் உள்ள சக்கரம், பெடெல் மற்றும் சீட்டை அகற்றினார்.பின், சைக்கிள் செயினில், கலப்பையை பொருத்தி, அதை ஓட்டிப் பார்த்தார். சைக்கிள் கலப்பை நன்றாக வேலை செய்தது.
புக்கியா, அதில் மேலும் சில மாறுதல்களை செய்தார். மண்வெட்டி, கடப்பாரை உள்ளிட்ட பொருட்களை, அதில் பொருத்தி, மறுபடியும் சோதனை செய்தார். அதுவும் நன்றாக வேலை செய்தது.



உடனே, அதே மாடலில், இன்னொரு பழைய சைக்கிளையும் தயார் செய்து, மனைவிக்கு அளித்தார். தற்போது, கணவன், மனைவி இருவரும் சைக்கிள் கலப்பையை பயன்படுத்தி, சிரமப்படாமல் நிலத்தில், வேலை செய்கின்றனர்.
இதைப் பார்த்த, கிராம மக்கள், அவரை பாராட்டினர். ஒரு சைக்கிளை, இது போல் மாற்றி வடிவமைக்க, புக்கியாவிற்கு 300 ரூபாய் மட்டுமே செலவானது. மனித சிரமத்தை குறைக்க உதவும் இது நல்ல கண்டுபிடிப்பு அல்லவா!

Wednesday, March 2, 2016

ஆட்டு எரு: சத்துமிக்க இயற்கை உரம்

ஆட்டு எரு: சத்துமிக்க இயற்கை உரம்

பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றால் ஏற்படும் பக்க விளைவுகள் மனித சமுதாயத்திற்கு பெரும் தீங்கை விளைவிக்கின்றன.
அன்றாடம் பயன்படுத்தப்படும் காய்கறிகள் முதல் கடுகு வரை ஒவ்வொன்றையும் விளைவிக்க பயன்படுத்தப்படும் யூரியா போன்ற செயற்கை ரசாயன உரங்கள் உடலுக்கு பெரும் தீங்கை விளைவிக்கக் கூடியவை.அதேநேரத்தில், ரசாயன உரங்களின் விலையும் தற்போது வேகமாக உயர்ந்து வருகிறது.
செயற்கை ரசாயன உரங்களால் நமக்கு ஏற்படும் ஆபத்துகளைப் போக்க இயற்கை நமக்கு தந்த வரப்பிரசாதம்தான் ஆட்டு எரு. ஆட்டு எருவில், மாட்டு எருவில் உள்ளதைப் போல 2 மடங்கு தழைச் சத்தும், சாம்பல் சத்தும் உள்ளன. ஓர் ஆடு, ஓராண்டுக்கு 500 முதல் 750 கிலோ வரை எருவைக் கொடுக்கிறது.
ஓர் ஏக்கர் நிலத்தை எல்லா சத்துகளையும் கொண்டு வளப்படுத்த 100 ஆடுகளை வளர்த்தால் போதுமானது. ஆட்டு எரு மண் வளத்தைப் பெருக்கி, பசுமைப் புரட்சிக்கு வித்திடுகிறது என்றால் மிகையாகாது.
ஆட்டு எருவை மண்ணில் இட்டால் கரிமப் பொருள்களின் அளவு அதிகரித்து ஈரப் பதத்தை சேமிக்கும் திறன் அதிகமாகிறது. ஆட்டு எருவில் உள்ள சத்துகளின் அளவு, ஆட்டு இனம் மற்றும் அவற்றுக்கு அளிக்கப்படும் தீவனத்தைப் பொருத்தே இருக்கும்.
ஆடுகளுக்கு புரதச்சத்து நிறைந்த தீவனங்களான குதிரை மசால், முயல் மசால், வேலி மசால், சுபா புல், தட்டைப் பயறு போன்ற தீவனங்களை அளித்தால், எருவில் தழைச்சத்தின் அளவு அதிகமாக இருப்பதோடு, நுண்ணூட்டச் சத்துகளும், தாது உப்புகளும் அதிகமாகக் காணப்படும். ஆட்டு எருவில் 60 முதல் 70 சதம் தண்ணீரும், 2 சதம் தழைச் சத்தும், 0.4 சதம் மணிச் சத்தும் 1.7 சதம் சாம்பல் சத்தும் உள்ளன. மேலும், பயிர் வளர்ச்சிக்குத் தேவையான போரான், மெக்னீசியம், கோபால்ட், தாமிரம், துத்தநாகம், மாலிப்டினம் சத்துகளும் அதிகளவில் காணப்படுகின்றன.
நம்முடைய அன்றாட விவசாயத்திற்கு அதிகளவில் ஆட்டு எரு தேவைப்படுமாயின் அவற்றை ஆழ்கூள முறையில் தயார் செய்யலாம்.
அதற்கு முதலில் ஆட்டுக் கொட்டகையின் தரைப் பகுதியில் நிலக்கடலைத் தோல், சிறிய துண்டுகளாக வெட்டிய வைக்கோல், இலைச் சருகுகள், மரத்தூள், தேங்காய் நார்க் கழிவு போன்றவற்றை அரை அடி உயரத்தில் ஓர் ஆட்டிற்கு 7 கிலோ என்ற அளவில் பரப்ப வேண்டும்.
இவ்வாறு பரப்பினால் ஆட்டுப் புழுக்கையானது இந்த ஆழ் கூளத்தில் படிந்துவிடும். சிறுநீர் ஆழ் கூளத்தால் உறிஞ்சப்பட்டு தழைச் சத்து வீணாகாமல் பாதுகாக்கப்படும். ஆழ் கூளத்தில் உள்ள ஈரத் தன்மையைப் பொருத்து 3-லிருந்து 4 மாதங்களுக்கு ஒரு முறை ஆழ் கூள் ஆட்டு எருவை விவசாயத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்.
ஆழ் கூள முறையைப் பொருத்தமட்டில் 10 ஆடுகளிலிருந்து ஓராண்டில் இரண்டரை டன் தரமான எரு கிடைக்கும். இதில் 50 கிலோ யூரியாவில் உள்ளதைப்போல, தழைச் சத்தும், 37 கிலோ சூப்பர் பாஸ்பேட்டில் உள்ள மணிச் சத்தும், 40 கிலோ பொட்டாஷில் உள்ள சாம்பல் சத்தும் கிடைக்கும்.
இவ்வாறு ஆழ் கூள முறையில் பெறப்படும் ஆட்டு எருவை வேளாண் பயிர் சாகுபடிக்கு பயன்படுத்தினால் களை எடுக்கும் செலவு குறையும். மேலும், நெல், தக்காளி, மிளகாய், கத்தரி மற்றும் அனைத்து விதமான வேளாண்மைப் பயிர்களுக்கும் இந்த எருவைப் பயன்படுத்தினால் அதிக லாபம் அடையலாம்.
எனவே, ஆட்டு எருவை முறையாகப் பயன்படுத்தி இயற்கை வழி வேளாண்மைக்கு வித்திட்டால் ரசாயன உரங்களால் ஏற்படும் தீமைகளைக் குறைக்க முடியும்.
நன்றி: தினமணி

agri blog to follow

எலுமிச்சை சாகுபடியில் பயிர்ப் பாதுகாப்பு முறைகள்

எலுமிச்சை சாகுபடியில் பயிர்ப் பாதுகாப்பு முறைகள்

தற்போது நிலவி வரும் தட்பவெப்ப நிலை காரணமாக,எலுமிச்சையில் அதிக மகசூல் கிடைக்கிறது. அதே நேரத்தில், 15 வகையான பூச்சிகளின் தாக்குதலால், எலும்ச்சையில் பெரும் சேதமும் ஏற்பட்டு வருகிறது. இலையைக் குடையும் புழு, சில்லிட் ஒட்டுப் பூச்சி, அசுவிணி, கறுப்பு ஈ மற்றும் தாவர நூல் புழுக்களின் தாக்குதலால், எலும்ச்சை செடிகள் சேதமடைந்துள்ளன.
இலையைக் குடையும் புழுவானது,இளம் இலைகளைக் குடைந்து புறத் தோல்களுக்கு இடையிலான திசுக்களை உள்கொண்டு சேதத்தை விளைவிக்கிறது. அதிகம் தாக்கப்பட்ட இலைகள் பலவித நெளிவு, வளைவுகளுடன் காணப்படுவதோடு, இலைகள் காய்ந்து, சிறுத்து, செடியின் நுனி வளர்ச்சி குன்றுவதுடன், பூக்கள் சரிவரப் பூப்பதில்லை.
சில்லிட் ஒட்டுப் பூச்சிகள் கூட்டம் கூட்டமாக இருந்து கொண்டு இளம் கிளைகள், துளிர் இலைகள், மொட்டுகள், பூக்கள் உள்ளிட்ட பாகங்களில் இருந்து சாற்றை உறிஞ்சி அதிக சேதம் விளைவிக்கின்றன. ஒட்டிப்பூச்சிகள் அதிகம் தாக்கப்பட்ட குருத்துப் பகுதிகள் காய்ந்துவிடும். மேலும் இலைகள் சுருண்டும், நெலிந்தும் காணப்படும்.
இந்தப் பூச்சிகளைத் தொடர்ந்து, அசுவிணி மற்றும் கறுப்பு ஈ அதிகமாகத் தாக்கி சேதத்தை ஏற்படுத்துகிறது. இந்தப் பூச்சிகள், தேன் போன்ற திரவத்தைச் சுரப்பதால், இலைகள் பிசுபிசுப்புடன் காணப்படும்.
இதனால், இலைகள் கருமையாகமாறி, கரும்படல நோயைத் தோற்றுவிப்பதோடு, ஒளிச்சேர்க்கையும் தடைபட்டு, மகசூல் குறைந்து வருகிறது. மேலும் இந்தப் பூச்சிகள் டிரிடிசா என்ற வைரஸ் நோயையும் பரப்புகின்றன.
அடுத்ததாக தாவர நூல் புழுக்கள் எலும்ச்சையின் வேர்களில் இருந்து கொண்டு திசுக்களை உள்கொள்வதால் மரத்தின் நுனி வாடி மேலிருந்து கீழாகக் காய்ந்து காணப்படும். இந்தத் தாக்குதலில் விவசாயிகள் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.
இப்போது குறைந்தபட்சம் ஒர் எலும்ச்சை பழம் ரூ-2க்கு விற்கும் நிலையில் எலுமிச்சையில் சரியான பாதுகாப்பு முறைகளை விவசாயிகள் கையாளுவதால் அதிக லாபம் பெறலாம்.
  • எலுமிச்சை செடிகளைப் பாதுகாக்க நல்ல காற்றோட்டம் அவசியம்.
  • தழைச்சத்து அதிகமாக இடுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • களைகள் இல்லாமல் நன்கு பராமரிக்க வேண்டும்.
  • சரியான பதத்தில் நீர்ப் பாய்ச்ச வேண்டும்.
  • வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லிகளை ஒட்டும் திரவம் கலந்து 15 நாள்கள் இடைவெளியில் 3 முறை தெளிக்க வேண்டும்.
  • மரத்துக்கு மரம் வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும்.
  • மேலும் ஒட்டுப் பொறிகளை ஒர் ஏக்கருக்கு 5 வீதம் வைத்து தாய் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்க வேண்டும்.
  • நன்மைசெய்யும் எதிர் உயிர் பூச்சி மற்றும் பூஞ்சாணங்களை அதிகமாப் பெருகவிட வேண்டும்.
  • நெருக்கமாக இருக்கும் செடிகளைச் சரியான இடைவெளிவிட்டு நடவு செய்ய வேண்டும்.
  • பூச்சிகளின் பாதிப்பு பொருளாதாரச் சேத நிலையை தாண்டும் போது ரசாயனப் பூச்சிக் கொல்லியான அசிபேட் மானோகுரோட்டாபாஸ், டைமீத்தையோட், மாலத்தியான், இம்மிடாகுளோ பிரிட் போன்ற மருந்துகளில் ஏதாவது ஒன்றை ஓர் லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி என்ற அளவில் ஒட்டும் திரவத்துடன் கலந்து செடிகளைச் சுற்றி நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும். தாவர நூல் புழுக்களின் சேதம் இருக்கும்போது குருணை மருந்து இட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் எலும்ச்சை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம்.
  • மேலும் இதுதொடர்பான தொழில் நுட்பங்கள் தேவையெனில் தொழில்நுட்ப வல்லுநர் சி.சங்கர், தந்தை ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்

சின்ன வெங்காயத்தில் விதை உற்பத்தி

சின்ன வெங்காயத்தில் விதை உற்பத்தி

கோயம்புத்தூர் த.வே.ப.கழக காய்கறித் துறையின் தலைவர் முனைவர் சரஸ்வதி  சின்னவெங்காயத்தில் விதை உற்பத்தி பற்றி வெளியுட்டுள்ள அறிவிப்பு
  • கோ.ஆன்.5 என்ற ரகம் விவசாயிகள் மத்தியில் பிரபலமாக உள்ளது. இந்த ரகத்தில் விதை உற்பத்தி செய்ய முடியும் என்பது கூடுதல் சிறப்பு.
  • ஆராய்ச்சி முடிவின்படி அக்டோபர் – நவம்பர் மாதங்களில் விதைக்கப்படும் சின்ன வெங்காயத்தில் இருந்து மட்டுமே பூக்கள் வந்து விதை உருவாகின்றது. குறிப்பாக கோயம்புத்தூர் சுற்று வட்டாரங்களில் நிலவும் தட்பவெப்ப நிலையில் மட்டுமே பூக்கள் பூத்து விதைகள் உருவாகின்றன.
  • விதை வெங்காயத்தை நாற்றங்கால் விட்டு அதில் 40 நாட்கள் வளர்த்து நடவு செய்ய வேண்டும். இப்படி செய்யும் போது 80 நாட்களில் அறுவடைக்கு வந்து விடும்.
  • இந்த முறையில் ஏக்கருக்கு 1 கிலோ விதை போதுமானது. ஆனால் நேரடியாக வெங்காயத்தை விதைக்கும் போது ஏக்கருக்கு 1 டன் வரை விதை தேவைப்படும்.
  • ஏக்கருக்கு சுமார் 40 ஆயிரம் ரூபாய் வரை விதைப்புக்காய்களாகவே செலவு பிடிக்கும்.
    ஆனால் விதை வெங்காயத்தின் விலை ஒரு கிலோ ரூ. 4,300 மட்டுமே ஆகும்.
  • காய்கறித்துறையில் சின்ன வெங்காயம் விதை விற்பனை செய்கிறார்கள். முன்பதிவு செய்து கொண்டால் விதை உற்பத்தி செய்து வழங்குகிறார்கள்.
தொடர்புக்கு தொலைபேசி- 04226611283
டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

சிறிய நிலத்தில் வேளாண்மை செய்து லாபம் பெறுவது எப்படி

சிறிய நிலத்தில் வேளாண்மை செய்து லாபம் பெறுவது எப்படி

விவசாயம் செய்வதில் லாபம் இல்லை என்று பலர் முடிவு எடுக்கும் இந்நாளில், சிறிய அளவில்  வைத்து கொண்டு லாபம் பெற முடியும் என்று நிருபித்து உள்ளார் தர்மபுரி சேர்ந்த முது என்ற விவசாயி. இவரின் வெற்றி ரகசியத்தை பார்ப்போமா?
இவருக்கு 50 சென்ட் நிலம் உள்ளது. இதில், எலுமிச்சை மற்றும் மல்லிகை சாகுபடி செய்கிறார். நேரம் பார்த்து சாகுபடி செய்கிறார். எல்லோரும் போல் இல்லாமல் சரியான பயிரையும் நேரத்திலும் செய்கிறார்.
25 எலுமிச்சை மரங்கள் கோடையில் காவாத்து செய்தால், கோடையில் நல்ல மகசூல் கிடைக்கிறது. திரட்சியான நல்ல நிறம் கொண்ட இந்த எலுமிச்சை பெற அவர் மீன் அமிலத்தை பயன் படுதிகிறார்.
ஒரு மரத்தில் இருந்து 5000 எலுமிச்சை வரி கிடைக்கிறது. ஒன்று ரூ 1.5 விலை போகிறது. சீசனில் மல்லிகை நல்ல விலை ரூ 300/கிலோ வரை போகிறது
இதை தவிர எலுமிச்சை பயிருக்கு ஊடு பயிராக இயற்கை விவசாயம் மூலம் நிலகடலை பயிர் இட்டு  10   மூட்டை கடலை ஒரு மூட்டை ரூ 3000 வரை  கிடைக்கிறது
இவற்றால், இவருக்கு வருடம் ரூ 4 லட்சம் வருமானம்
கிடைக்கிறது
இவரின் வெற்றி ரகசியங்கள்:

  • இயற்கை ஊடு பொருட்கள். இவரிடம் இருக்கும் 5 ஆடு, 5 மாடுகள் மூலம் கிடைக்கும் இயற்கை எரு மட்டுமே பயன் படுத்துவதால், செலவு குறைகிறது
  • எந்த நேரத்தில் எந்த பயிர்க்கு நல்ல மவுசு இருக்கிறது என்று தெரிந்து பயிர் இடுதல்
  • இயற்கை விவசாயத்தில் கிடைக்கும் சாகுபடிக்கு கிடைக்கும் நல்ல விலை.
  • ஒரே பயிரை பயிர் இடாமல் பல பயிர்களை வருடம் முழுவதும் சுழற்சி முறையில் பயிர் இடுவது
முத்துவின் இயற்கை விவசாயம்
  • 10 கிலோ மீன் அழுகலை 10 லிட்டர் புளித்த மோரில் சேர்த்து 15 நாட்கள் ஒரு பிளாஸ்டிக் தொட்டியில் வைக்கவும். அவ்வபோது இதை கலக்கி விடவும். இதை பில்ட்டர் செய்து sprayer மூலம் பயிர்கள் மேல் தெளித்தால் நல்ல திரட்சியான எலுமிச்சை, கடலை கிடைக்கும்
  • வேம்பு புங்கன் நொச்சி போன்ற இலைகளை எடுத்து கசக்கி 10 லிட்டர் கோ கோ மூத்திரம் சேர்த்து புளித்த மோரை சேர்க்கவும். இந்த கலவை ஒரு பிளாஸ்டிக் தொட்டியில் 20 நாள் வைத்து இயற்க்கை பூச்சி விரட்டியாக பயன் படுத்தலாம்
இவர் facebook இனைய தலத்தில் விவசாயம் கறக்கலாம் Vivasayam karkalam என்று ஆரம்பித்து 1000 பேர் இவரை follow செய்கின்றனர்
இவரை தொடர்பு கொள்ள
திரு N K P முத்து நகதசம்பட்டி, பென்னாகரம் தாலுகா தருமபுரி மாவட்டம் அலைபேசி எண்: 09344469645

எலுமிச்சையில் வாரம் ரூ.10 ஆயிரம் சம்பாதிக்கலாம்


எலுமிச்சையில் வாரம் ரூ.10 ஆயிரம் சம்பாதிக்கலாம்


திண்டுக்கல் அருகே கோட்டைப்பட்டியை சேர்ந்த விவசாயி ஜெ.சரவணன் ஒரு ஏக்கரில்எலுமிச்சை சாகுபடி செய்தார். இவர் “ராஜமுந்திரி’ என்ற நாட்டு ரகத்தை கன்றுக்கு ரூ.50 வீதம் வாங்கினார். 2 அடி ஆழம் 2 அடி அகலம் உள்ள குழிகள் தோண்டி அதில் குப்பையை கொட்டி கன்றுகளை நட்டார். ஒவ்வொரு கன்றும் 20 க்கு 20 அடி இடைவெளியில் நடப்பட்டது. ஒரு ஏக்கரில் 100 கன்றுகளை நட்டார். இயற்கை விவசாய முறையில் உரமிட்டு வருகிறார்.
Courtesy: Dinamalar

செடிகள் நட்டு 4 ஆண்டுகளுக்கு பின் காய்க்க துவங்கியது. ஒரு மரத்தில் 100 காய்களுக்கு குறையாமல் காய்க்கின்றன. ஒவ்வொரு பழமும் குறைந்தது 80 கிராம் வரை உள்ளது. சில பழங்கள் 120 கிராம் வரை உள்ளன (சாதாரணமாக 60 கிராம்). தலா ஒரு மாத இடைவெளியில் ஆண்டுக்கு 3 முறை காய்க்கின்றன. ஒவ்வொரு முறையும் 12 வாரங்கள் வரை தொடர்ந்து காய்களை பறிக்கின்றனர். வாரத்திற்கு 400 கிலோ காய்கள் கிடைக்கின்றன. குறைந்தது ரூ.10 ஆயிரம் வரை கிடைக்கிறது.
அவர் கூறியதாவது: எலுமிச்சை செடிகளுக்கு கால்நடைகளின் எரு, கழிவு, குப்பையை உரமாக இடுகிறோம். பசுந்தாள் உரங்களும் பயன்படுத்துகிறோம். 15 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்சுகிறோம். நாட்டுரகம் என்பதால் 80 ஆண்டுகள்
வரை காய்க்கும். செடிகளை முறையாக கவாத்து செய்து பராமரிக்கிறோம். இதனால் காய்கள் பறிப்பதில் சிரமம் இல்லை என்றார். தொடர்புக்கு 09791500783

மூங்கில் சாகுபடியில் ஒரு ஏக்கரில் ரூ. 2 லட்சம் வருமானம்


மூங்கில் சாகுபடியில் ஒரு ஏக்கரில் ரூ. 2 லட்சம் வருமானம்


“ஓராண்டில் ஒரு ஏக்கரில் மூங்கில் சாகுபடி செய்து ரூ. 2 லட்சம் வருமானம் பெறலாம்” என, மூங்கில் சாகுபடி கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
மதுரையில் தோட்டக்கலைத் துறை சார்பில் மூங்கில் சாகுபடி கருத்தரங்கு நடந்தது. துணை இயக்குனர் ராஜேந்திரன் வரவேற்றார். கலெக்டர் சகாயம் துவக்கி வைத்து பேசியதாவது:
விவசாயிகள் நெல், கரும்பு சாகுபடி செய்வது போல, மூங்கிலையும் சாகுபடி செய்ய வேண்டும். விவசாயிகள் பாரம்பரிய விவசாய முறைகளை கைவிட்டு, மாற்று விவசாயத்தை சிந்திக்க வேண்டும். மதுரையில் இந்த ஆண்டு 25 எக்டேர் நிலத்தில் மூங்கில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் விளைபொருளை நகரத்தில் உள்ள வணிகர்களுக்கு குறைந்த விலைக்கு விற்பதைவிட, நேரடியாக மதிப்புக் கூட்டு பொருளாக விற்றால் பலமடங்கு லாபம் கிடைக்கும். இதற்கு “நபார்டு’ மூலம் உதவ நாங்கள் தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னோடி விவசாயி பாலசுப்ரமணியன் பேசியதாவது:
  • புல்வகையை சேர்ந்த மூங்கில், 47 சதவீதம் கார்பன்டை ஆக்சைடை பெற்று, 35 சதவீத ஆக்சிஜனை வெளியிட்டு, சுற்றுச் சூழலை பாதுகாக்கிறது.
  • ஒரு ஏக்கரில் 30 டன்வரை சருகுகளை உதிர்ப்பதால், அவை மக்கி இயற்கை உரமாக மாறி மண்வளம் பெருகுகிறது.
  • ஒரு ஏக்கரில் 2 ஆயிரம் மூங்கில் சாகுபடி செய்தால் ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் கிடைக்கும்.
  • பவர் பிளான்ட், கைவினை பொருள், காகிதம், கட்டுமான வேலைக்கு மூங்கில் தேவை.
  • மூங்கில் குருத்தில் இருந்து ஊறுகாய், பொரியல், கேசரி, மிட்டாய், அல்வா, இட்லி பொடி தயாரிக்கலாம்.
  • இதன் தேவை அதிகம் என்பதால் பிறமாநிலத்தில் இருந்து வாங்குகின்றனர்.நாமே பயிரிட்டால் நல்ல வருமானம் பெறலாம்.
  • இதுதொடர்பாக 09486408384  என்ற எண்ணில் விபரம் பெறலாம், என்றார்.
நன்றி: தினமலர்

முள் இல்லா மூங்கில் சாகுபடிக்கு மானியம்

முள் இல்லா மூங்கில் சாகுபடிக்கு மானியம்

உடுமலைப்பேட்டையில் தேசிய மூங்கில் இயக்கத் திட்டத்தின் கீழ் முள் இல்லா மூங்கில்சாகுபடியை ஊக்குவித்து மானிய உதவிகள் வரப்பெற்றுள்ளது.
ஒரு எக்டேருக்கு ரூ.8000/- மான்யமாக தரும் உன்னத மூங்கில் திட்டம் மூலம் இயற்கை வேளாண் உத்தியான காற்று தடுப்பான் மற்றும் உயிர்வேலி மூலம் உபரி வருமானம் உயிர்க்குலங்கள் பல்கிப் பெருகிட கீழே விடும் மூங்கில் இலைகள் மூலம் வாய்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்புக்கு பெரும் உதவி, மண்ணின் பௌதிகத்தன்மை, நீர்ப்பிடிப்புத் திறன் அதிகரிப்பு போன்ற ஏராளமான நன்மைக்கு வழி உள்ளது.
விவசாயிகள் தனது சொந்த செலவில் கன்றுகளைப் பெற்று வாங்கி நட்டு அதன் புகைப்படம், சிட்டா, அடங்கல், ரேஷன்கார்டு மற்றும் விண்ணப்பம் தந்து மூங்கில் சாகுபடி மானியம் பெற டாக்டர் பா.இளங்கோவன், தோட்டக்கலை உதவி இயக்குனர், உடுமலை, அவர் தெரிவித்துள்ளார்.
நட்ட 3ம் ஆண்டு முதல் அறுபது ஆண்டுகள் தொடர்ந்து ஆண்டுதோறும் ஒரு ஏக்கரில் குறைந்தது ஒரு லட்சம் ரூபாய் மதிப்புடைய தரமான மூங்கில் வளர்த்து அறுவடை செய்து உயர்நிலை அடையலாம்.
மூங்கில் கன்றுகள் குறித்து மேலும் விவரம் பெற 09842007125 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
நன்றி: தினமலர்

நாவல் பழ சாகுபடி

நாவல் பழ சாகுபடி

“இன்றைய விவசாயிகளுக்கு தேவை நம்பிக்கையும் புதிய முயற்சியும்” என்கிறார்  மதுபாலன், அரசின் வேளாண்மை துறையின் உதவி இயக்கனர். இதற்கு ஒரு உதாரணம் திண்டுக்கல் மாவட்டத்தில் நாவல் சாகுபடி செய்யும் ஜெயகுமார் என்கிறார் அவர்.
Courtesy: Hindu
Courtesy: Hindu














ஜெயகுமார் 1.5 ஏகரில் நாவல் சாகுபடியும், மீதி 8.5 ஏகரில் நெல்லியும் சாகுபடி செய்துள்ளார். நாவல் மரங்கள் 30-35  அடி வரை வளர்ந்து 60-80 வருடம் வரை காய்க்கும்  திறன் கொண்டன.
ஜெயகுமார் இந்த மரங்களை முறையாக காவாத்து செய்து மரங்களின் உயரத்தை 18-20 அடி மட்டுமே வைத்துள்ளார். இல்லாவிட்டால் இந்த மரங்கள் அதிக உயரம் வளர்ந்து பழங்களை பறிக்க பிரச்னையாகிறது என்கிறார். கிளைகளை உலுக்கி பழங்களை பறிக்க வேண்டும். ஆனால் நாவல் மரங்களின் கிளைகள் எளிதாக உடைவதால் மரம் பாழாகிறது. காவாத்து செய்து மரங்களின் உயரத்தை கட்டுப்பாடு செய்துள்ளார்.
அவர் 80 செடிகளை ஆந்திராவில் இருந்து வாங்கி 24×24 அடி இடத்தில நட்டு  உள்ளார்.சொட்டு நீர் பாசனம்.
நான்கு  ஆண்டுகள் பின் பழங்கள் ஒரு மரத்தில் இருந்து 2kg வந்தன. எட்டு வருடங்கள் கழித்து ஒரு மரத்தில் இருந்து 50kg பழங்கள் வந்தன.
அவர் இயற்கை உரங்கலான எலும்பு பொடி, கோழிவளர்ப்பு கழிவு, கரும்பு கழிவு, பஞ்சகவ்யா போன்றவற்றையே இடுகிறார்.
பழங்கள் தட்டுகளில் சேர்க்க பட்டு கடைகளுக்கு அனுப்ப  படுகின்றன. ஒரு கிலோ ரூ 150 மூலம் இந்த ஆண்டில் 80 மரங்களில் இருந்து 4250 கிலோ மூலம் இரண்டு மாதங்களில் ரூ 6 லட்சம் லாபம் கிடைக்கும் என்கிறார்.
இந்த மரங்களில் பூச்சி தாக்குதல் குறைவு செலவுகள் குறைவு என்கிறார்
இவரை தொடர்பு கொள்ள
C ஜெயக்குமார், நிலகோட்டை தாலுகா மேட்டூர் கேட் போஸ்ட், கோடை ரோடு, மொபைல்: 09865925193 ஈமெயில்:jkbiofarmdgl@gmail.com Mr. Madhu Balan on email : balmadhu@gmail.com, mobile: 09751506521

1கிலோ ரூ.250-க்கு விற்பனையாகும் நாவல் பழம்!

1கிலோ ரூ.250-க்கு விற்பனையாகும் நாவல் பழம்!

நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை, விதை என அனைத்துமே மருத்துவக் குணங்கள் கொண்ட காரணத்தாலும், நாவல் மரங்கள் குறைந்து வருவதாலும், அதன் பழங்கள் தற்போது ஒரு கிலோ ரூ. 250-க்கு விற்பனை செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
நீரிழிவு நோயால் பாதிக்கப்படாதவர்கள் அரிதாகிவிட்ட நிலையில், நாவல் பழமும், விதைகளும் படிப்படியாக நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் சிறந்த மருந்தாக அறியப்பட்டுள்ளதால், அவற்றின் மதிப்பு தற்போது பன்மடங்கு உயர்ந்துவிட்டது.
நீரிழிவு நோய் தவிர, பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும் குணமும், தொண்டைப் புண், தொண்டை அழற்சி போன்ற தொந்தரவுகளைப் போக்குவதற்கும் நாவல் மரப்பட்டைகள் உதவுகின்றன.
Courtesy: Wikipedia
Courtesy: Wikipedia






சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல், சிறுநீர்க்கட்டால் அவதிப்படுவோர் நாவல் பழங்களை பிழிந்து சாப்பிடுவதன் மூலம் குணமடைகின்றனர். நாவல் பழத்துக்கு சிறுநீர் பெருக்கம், பசியைத் தூண்டும் தன்மை உண்டு. மேலும், நாக்கு மற்றும் பல் ஈறுகளைச் சுத்தம் செய்யும் தன்மையும், குடல், இரைப்பை, இதயத்தின் தசைகளை வலுவாக்கும் குணமும் நாவல் பழத்துக்கு உள்ளது.
அதோடு, நாவல் பழச்சாற்றுக்கு நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் குணமும், நாவல் மரத்தின் பட்டைக்கு நரம்பை பலப்படுத்தும் சக்தியும், மூச்சுக்குழல் அழற்சி, காசநோய், குடல் புண்கள் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை குணமாக்கும் சக்தியும் உண்டு. மேலும், ரத்தம் சுத்தப்படுத்துதலிலும் நாவல் பழம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
அனைவராலும் மிகச் சாதாரணமாகக் கருதப்பட்ட நாவல் பழத்துக்கு இத்தகைய மருத்துவக் குணங்கள் உள்ளது என்ற விழிப்புணர்வு தற்போது அனைவருக்கும் ஏற்பட்டுள்ளதே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்றார் இயற்கை விவசாயி ஜி.எஸ். தனபதி.
இதுகுறித்து புதுகை உழவர் சந்தை அருகே பழ வியாபாரம் செய்யும் பெண் கூறியது:
நாட்டு நாவல் மரங்களில் இருந்து ஆடிக்காற்றில் கீழே விழும் பழங்களைத்தான் கிராமங்களில் விற்று வந்தோம். ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக நகர்ப்புறங்களில் நாவல் பழங்களுக்கு மிகுந்த முக்கியத்தும் கிடைத்துள்ளது. அதை வாங்குபவர்கள் சர்க்கரை நோய்க்கு மருந்தாகப் பயன்படுவதாகத் தெரிவித்தனர்.
இந்த நிலையில், நாவல்பழம் உள்ளூரின் தேவையைப் பூர்த்தி செய்யமுடியாததால், ஆந்திர மாநிலத்திலிருந்து திருச்சி காந்தி சந்தைக்கு வரும் நாவல் பழங்களை வாங்கிவந்து விற்கிறோம். ஒரு கிலோ ரூ. 200-க்கு வாங்கி ரூ. 250-க்கு விற்க வேண்டியுள்ளது. எனினும், இதை வாங்கிச் செல்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை என்றார் அவர்.
நன்றி: தினமணி