Wednesday, September 21, 2016

மீன் வளர்ப்பு

மீன் வளர்ப்பு - Meen Valarpu | Alangara | Vanna Meen Valarpu | Pannai | Kuttai |




  மீன் வளர்ப்பு - Vanna | Alangaara |Meen Valarpu | Pond  Fresh Water  Murrel  Colour Fish Farm Farming Katla Jilapy Kenddai  Kunju Sale Business Plan Videos  Tamilnadu | Pannai

தண்ணீர் வளம் இருக்கு, மண் சரியில்ல; மண் நல்லாருக்கு, தண்ணியும் இருக்கு, ஆனா... வேலைக்கு ஆளுங்க கிடைக்கல - விவசாய நிலத்தை சும்மாவே போட்டு வைத்திருப்பவர்கள் ஒவ்வொருவரிடமும் இப்படி ஒவ்வொரு காரணம் தயாரா இருப்பது இங்கே கண்கூடு!
இவர்களுக்கு நடுவே... ''தண்ணி வளமும், குறைஞ்ச ஆள் பலமும் இருந்தாலே போதும், மீன் வளர்ப்புல அருமையான லாபம் சம்பாதிக்க முடியும். இதுக்கு தினமும் அரை மணி நேரம் செலவழிச்சாலே போதும்'' என்று நம்பிக்கை ஊட்டுகிறார்கள், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ள திருஉடையான்பட்டி கணேசன்-சண்முகசுந்தரி தம்பதியர்.
ஒரு ஞாயிற்றுக்கிழமையின் காலைப்பொழுதில் இவர்களுடைய மீன் பண்ணையில் ஆஜரானோம். பரபரப்பாக மீன் விற்பனையிலிருந்தவர்களிடம் நாம், அறிமுகப்படுத்திக் கொள்ள... மகிழ்ச்சியுடன் பேசத் தொடங்கினர்.
''மொத்தம் எட்டரை ஏக்கர் நிலமிருக்கு. தென்னைதான் முக்கிய விவசாயம். வேளாண்மைப் பொறியியல் துறையைச் சேர்ந்தவங்க எங்க தோட்டத்துக்கு வந்து... 'தோட்டத்துல பண்ணைக்குட்டை வெட்டி, மீன் வளர்த்தா நல்ல வருமானம் கிடைக்கும். நிலத்தடி நீரும் அதிகரிக்கும். நாங்களே குட்டை எடுத்துத் தர்றோம்’னு சொன்னாங்க. நாங்க தலையாட்டினதும்... 40 மீட்டர் நீளம், 20 மீட்டர் அகலம், 5 அடி ஆழத்துல பண்ணைக்குட்டை வெட்டிக் கொடுத்தாங்க. அதுக்கப்பறம் குன்றக்குடி கே.வி.கே. மூலமா மீன் வளர்ப்புப் பயிற்சி எடுத்துக்கிட்டு, மீன் வளர்க்க ஆரம்பிச்சுட்டோம்.



மீன் பண்ணை அமைக்க தேவையான மீன் குஞ்சுகள் தேவைக்கு மற்றும் 
ஒரு நாள் மீன் பண்ணையில் நேரடி பயிற்சியும்  நாங்கள் அளிக்கின்றோம் .
தொடர்புக்கு :
Star Global Agri Farms, Mettur , 
Nerinjipettai. ( Erode District)
Salem to Coimbatore,NH-47,Uthamasolapuram,
9944858484.
1)விரால் குஞ்சு (1 இன்ச் - ரூ .2 , 2 இன்ச் ரூ .4) (ஆர்டர் 500 குஞ்சுகள் )
2) கட்லா
3)மிர்கால், 
4)வெள்ளி கெண்டை 
5) புல் கெண்டை, 
6)சாதா கெண்டை
7)ரோகு
சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் உள்ள மீன் குஞ்சு
 உற்பத்தி மற்றும் விற்பனை பண்ணை , Salem
|
|
|
V



*மீன் பண்ணை அமைக்க விரும்புவோர் நேரில் வந்து மீன் குஞ்சுகள் மற்றும்\அதன் தரத்தினை பார்த்து வாங்கி செல்லவும் 

மீன் குஞ்சுகளை நீங்கள் நேரில் வந்து வாங்கி செல்லலாம் அல்லது வங்கியில்  பணம் செலுத்தினால் ,சேலம் அல்லது ஈரோட்டிலிருந்து  வெளியூர்களுக்கு SECT பஸ் / ட்ராவல்ஸ் இல் பிளாஸ்டிக் ட்ரம் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
*மீன் பண்ணை அமைக்க இடம் உள்ள நபர்கள் எங்களுக்கு தெரிவுபடுத்தவும் .
*தமிழகம் முழுவதும் மீன்கள் மொத்தமாக (1 டன் ,2 டன் ) 
வாங்க ,விற்கஅழைக்கவும் , 9944858484

பயிற்சியில் நீங்கள் தெரிந்துகொள்ள இருப்பது 
1)பண்ணை குட்டை எவ்வாறு அமைப்பது ?(குட்டை ஆழம் ,அகலம் )
2)மீன் பண்ணை அமைக்க தேவையான முன் ஏற்பாடுகள் என்னென்னெ ?
3)மீன் வகைகள் என்னென்னெ ? (கெளுத்தி,ரோகு,கட்லா,ஜிலேபி,ஆற )
4)சதுர அடி கணக்கில் குட்டையில் விடப்படும் மீன் குஞ்சுகள் எண்ணிக்கை .
5)மீன் குஞ்சுகளின் வளர்ப்பும் பராமரிப்பும் .
6)மீன்களுக்கு தேவையான தீவனம் தயாரிப்பு .
7)மீன்களுக்கு ஏற்படும் நோய்களும் , அவற்றை தடுக்கும் முறைகளும் .
8)முதலீடு மற்றும் லாப விகிதங்கள் .
9)விற்பனை வாய்ப்பும் ,சந்தை படுத்தும் முறைகளும் .

ஆரம்பத்துல குட்டையில தண்ணியை நிரப்பினதும், தண்ணிய மண்ணு உறிஞ்சிக்கிட்டே இருந்துச்சு. குளத்துக்கரம்பை மண்ணைக் கொண்டு வந்து ஒரு அடி உயரத்துக்கு மெத்தினோம். அப்பறம்தான் தண்ணி நிலைச்சு நின்னுது. இப்ப ரெண்டு வருஷமா மீன் வளர்த்துக்கிட்டிருக்கோம். தீவனம் கொடுக்கறதைத் தவிர வேற எந்தப் பராமரிப்பும் தேவையில்லை. குளத்துல தண்ணி மட்டம் குறைஞ்சுடாமப் பாத்துக்கணும். மீனுங்க களவு போகாம பாத்துக்கணும், அவ்வளவுதான்'' என்று சண்முகசுந்தரி ஆரம்ப கதையைச் சொல்ல, அவரைத் தொடர்ந்தார், கணேசன்.


சராசரி 1,200 கிலோ!
'எந்தப் பிக்கல், பிடுங்கலும் இல்லாத அமைதியான, அதேநேரத்துல நல்ல வருமானமும் கொடுக்குற வேலை இது. போன ஆகஸ்ட் மாசம், 350 கெளுத்தி, 500 ரோகு, 500 கட்லா, 300 சில்வர் கெண்டை, 350 புல் கெண்டைனு மொத்தம் 2 ஆயிரம் மீன் குஞ்சுகளை விட்டிருந்தோம். மீன் தீவனத்தை கடைகள்ல வாங்கி போட்டோம். இப்போ ஒன்பது மாசம் ஆகுது. ஒவ்வொரு மீனும் கிட்டத்தட்ட முக்கால் கிலோ எடை வந்துருச்சு. 2 ஆயிரத்துல...
200 செத்திருந்தாலும் 1,800 மீன் வரைக்கும் தேறிடும். எப்படியும் எடை கணக்குல பார்த்தா... மொத்தமா 1,200 கிலோவுக்கு குறையாது. இப்போதான் பிடிச்சு விக்க ஆரம்பிச்சுருக்கோம்.


*தமிழகம் முழுவதும் மீன்கள் மொத்தமாக (1 டன் ,2 டன் ) 
வாங்க ,விற்கஅழைக்கவும் , 
Star Global Agri Farms ,9944858484


விற்பனைக்காக நாங்க எங்கயும் அலையறதில்ல. ஒவ்வொரு ஞாயித்துக்கிழமையும் பண்ணையிலயே நேரடி விற்பனை மூலமா எல்லாம் முடிஞ்சுடுது. அக்கம்பக்கத்துல இருக்குறவங்க தேடி வந்து வாங்கிக்குறாங்க. தேவையான அளவுக்கு அப்பப்போ பிடிச்சுக்குறோம். ஒரு கிலோ மீன் 80 ரூபாய்னு விக்குறோம். இதுவரை முன்னூறு கிலோ வித்துருக்கோம். மொத்தமா, 1,200 கிலோ மீன் கிடைக்கும்னு வெச்சுக்கிட்டா... 96 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல, செலவுகளுக்கு 30 ஆயிரம் ரூபாய் போனாலும்... மீதி 66 ஆயிரம் ரூபாய் லாபம். எங்களைப் பொறுத்தவரை ஏக்கர் கணக்குல விவசாயமெல்லாம் செய்யத் தேவையில்லை. இந்த மாதிரி ரெண்டு குளம் இருந்தாலே... எந்தப்பாடும் இல்லாம ஒரு குடும்பத்துக்குத் தேவையான அளவுக்கு நிறைவா சம்பாதிச்சுட முடியும்'' என்று முகத்தில் மகிழ்ச்சி ரேகைகள் படரச் சொன்னார்.  
விளையாத மண்ணுக்கு விரால்..! தொழில்
சிவகங்கை மாவட்டம், பாகனேரி பகுதியைச் சேர்ந்த பி.ஆர்.இ. வரதராஜன், தனது தோட்டத்தில் மண்வளம் சரியாக இல்லாததால்... மீன் வளர்த்து வருகிறார். தனது மீன் வளர்ப்பு அனுபவங்களை அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டபோது, ''மொத்தம் 10 ஏக்கர் நிலமிருக்கு. அந்தக் காலத்து வட்டக் கிணறு எப்பவும் தண்ணி குறையாது. நல்ல தண்ணி வசதியிருந்தும், மண்ணு சரியில்லை. கிட்டத்தட்ட எந்தப் பயிரும் வராத ஈழக்களிமண் பூமி. ஓரளவு மண்ணு சுமாரா இருக்கற 6 ஏக்கர் நிலத்துல தென்னையை நட்டு இயற்கை முறையில விவசாயம் செஞ்சிக்கிட்டு இருக்கேன். குன்றக்குடி கே.வி.கே. ஆலோசனைப்படி சும்மா இருந்த இடத்துல இப்பத்தான் மீன் வளக்க ஆரம்பிச்சிருக்கேன்.
90 அடி நீளம், 35 அடி அகலம்ங்கிற கணக்குல 6 குளங்களை வெட்டியிருக்கேன். ரெண்டு குளத்துல விரால் வளர்க்க முடிவு பண்ணினேன். அதுக்காக நாலு மாசத்துக்கு முன்ன ஒரு குளத்துக்கு
400 ஜிலேபி கெண்டைனு ரெண்டு குளத்துலயும் விட்டேன். அதுக ஓரளவு வளந்துடுச்சு. போன மாசம், குளத்துக்கு 400 விரால் குஞ்சுனு ரெண்டு குளத்துலயும் 800 குஞ்சுகளை விட்டுருக்கேன். ஜிலேபி கெண்டை மீன், தன்னோட முட்டைகளை வாயிலயே அடைகாத்து, 18 முதல் 21 நாள் இடைவெளியில குஞ்சுகளா துப்பிக்கிட்டே இருக்கும். இந்த ஜிலேபி குஞ்சுகளை சாப்பிட்டே விரால் வளர்ந்துடும். இன்னும் 8 மாசம் கழிச்சுதான் எவ்வளவு விரால் கிடைக்கும்னு தெரியும்.
அந்த ரெண்டு குளம் போக, மத்த நாலு குளத்துலயும் மிர்கால், கட்லா, ரோகு மீன்களை ஒவ்வொரு குளத்துக்கும் 400 குஞ்சுகள்ன்ற கணக்குல விட்டுருக்கேன். தினமும் ஒரு மணி நேரம் தீவனம் வெச்சு, குளங்களை ஒரு சுத்து சுற்றி வருவேன். அவ்வளவுதான், வேற எந்த ஜோலியும் இல்லை. ஒவ்வொரு குளத்துக்கும் தினமும் ஒரு கிலோ தவிடு, அரை கிலோ கடலைப் பிண்ணாக்கு, 10 கிலோ சாணம் போடுறேன். கே.வி.கே. யிலிருந்து குருணைத் தீவனம் கொடுத்திருக்காங்க. டேஸ்டுக்காக அப்பப்ப அதையும் கொஞ்சம் சேத்துக்குவேன்.
கிலோ 250 ரூபாய்!
இப்ப வரைக்கும் எந்தப் பிரச்னையும் இல்லாம நல்லா வளந்துட்டு வருது. விரால் மீனுக்கு நல்ல கிராக்கி இருக்கு. கிலோ 250 ரூபாய்க்கு வாங்குறாங்க. நான் குளத்துல விட்டிருக்குற 800 குஞ்சுகள்ல... இழப்பு போக, 300 கிலோ கிடைச்சாலும்... 75 ஆயிரம் ரூபாய்  வருமானம் கிடைக்கும். மத்த குளங்கள்ல கிடைக்குற வருமானம்... செலவு கணக்குல போனாலும்... விரால் மூலமா வர்ற வருமானம் மொத்தமும் லாபமா கிடைச்சுடும். எதுக்கும் உதவாத மண்ணை வெச்சுக்கிட்டு 
ஒண்ணும் பண்ண முடியலையேனு கஷ்டப்பட்ட எனக்கு... இப்படி வழி காட்டிய குன்றக்குடி கே.வி.கே.க்குத்தான் நன்றி சொல்லணும்'' என்று நெகிழ்கிறார் வரதராஜன்.
இப்படித்தான் அமைக்கணும் குளம்!
குன்றக்குடியில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கே.வி.கே. (வேளாண் அறிவியல் மையம்). மீன் வளர்ப்பு பற்றிய பயிற்சிகளோடு, தொடர் ஆலோசனைகளையும் கொடுத்து வருவது, இப்பகுதியில் மீன் வளர்ப்பவர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாகவே அமைந்துள்ளது. இங்கே, அனைவருக்கும் பயன்படும் வகையில், இம்மையத்தின் விஞ்ஞானி கணேசன், மீன் வளர்ப்பு முறைகளைப் பற்றி விளக்குகிறார்.
செவ்வக வடிவில் குளம்!
''ஆறு, குளம், ஏரி, ஓடை, கசிவுநீர்க் குட்டை மாதிரியான இடங்களுக்கு அருகில் உள்ள நிலங்கள் மீன் வளர்ப்புக்கு ஏற்றவை. அதிக தண்ணீர் வளம் இருந்து, விவசாயம் செய்ய முடியாத நிலங்களிலும் மீன் வளர்க்கலாம். களிமண், வண்டல் மண் சேர்ந்த நிலமாகவும், போக்குவரத்து வசதி உள்ள இடமாகவும் இருந்தால், நல்லது. களிமண் நிலமாக இருந்தால், தண்ணீர் கசிவு இருக்காது. மணல் அதிகமாக உள்ள மண்ணில் கசிவு இருக்கும். கசிவைத் தடுக்க, குளத்தின் தரைப்பகுதியில் ஒரு அடி உயரத்துக்கு களி மண்ணைப் பரப்பி மெத்தி விடவேண்டும். மீன்குளத்தை செவ்வக வடிவத்தில் அமைத்தால், கையாள்வது சுலபம். இருக்கும் இட வசதி, தண்ணீர் வசதி ஆகியவற்றைப் பொறுத்து, குளத்தின் அளவைத் தீர்மானித்துக் கொள்ளலாம். ஆனால், ஆழம் ஐந்தடிக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.  
கரை... கவனம்!

மீன் பண்ணை அமைக்க தேவையான மீன் குஞ்சுகள் தேவைக்கு மற்றும் 
ஒரு நாள் மீன் பண்ணையில் நேரடி பயிற்சியும்  நாங்கள் அளிக்கின்றோம் .
தொடர்புக்கு :
Star Global Agri Farms, Mettur , 
Nerinjipettai. ( Erode District)
Salem to Coimbatore,NH-47,Uthamasolapuram,
9944858484.
1)விரால் குஞ்சு (1 இன்ச் - ரூ .2 , 2 இன்ச் ரூ .4) (ஆர்டர் 500 குஞ்சுகள் ) 
2) கட்லா
3)மிர்கால்
4)வெள்ளி கெண்டை 
5) புல் கெண்டை
6)சாதா கெண்டை
7)ரோகு

மீன் குஞ்சுகளை நீங்கள் நேரில் வந்து வாங்கி செல்லலாம் அல்லது வங்கியில்  பணம் செலுத்தினால் ,சேலம் அல்லது ஈரோட்டிலிருந்து  வெளியூர்களுக்கு SECT பஸ் / ட்ராவல்ஸ் இல் பிளாஸ்டிக் ட்ரம் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

பயிற்சியில் நீங்கள் தெரிந்துகொள்ள இருப்பது 
1)பண்ணை குட்டை எவ்வாறு அமைப்பது ?(குட்டை ஆழம் ,அகலம் )
2)மீன் பண்ணை அமைக்க தேவையான முன் ஏற்பாடுகள் என்னென்னெ ?
3)மீன் வகைகள் என்னென்னெ ? (கெளுத்தி,ரோகு,கட்லா,ஜிலேபி,ஆற )
4)சதுர அடி கணக்கில் குட்டையில் விடப்படும் மீன் குஞ்சுகள் எண்ணிக்கை .
5)மீன் குஞ்சுகளின் வளர்ப்பும் பராமரிப்பும் .
6)மீன்களுக்கு தேவையான தீவனம் தயாரிப்பு .
7)மீன்களுக்கு ஏற்படும் நோய்களும் , அவற்றை தடுக்கும் முறைகளும் .
8)முதலீடு மற்றும் லாப விகிதங்கள் .
9)விற்பனை வாய்ப்பும் ,சந்தை படுத்தும் முறைகளும் .

குளத்தின் கரைகளை நீர்க்கசிவு இல்லாத அளவுக்கு பலமாக அமைக்க வேண்டும். வண்டல் மற்றும் மணல் ஆகியவற்றோடு, களி மண்ணையும் கலந்து கரை அமைக்கலாம். கரையின் மேல்புறம் ஒரு மீட்டர் அகலம் அளவுக்கு சமதளமாகவும், இரு புறங்களும் சரிவாகவும் இருக்க வேண்டும். நீர்மட்டத்துக்கு மேல் கால் மீட்டர் அளவுக்கு கரையின் உயரம் இருக்க வேண்டும். கரையின் வெளிப்புறத்தில், தென்னை, பப்பாளி... போன்ற அதிகம் வேர் விடாத மரங்களை நிழலுக்காக நடவு செய்யலாம்.  
பச்சை நிறமே... பச்சை நிறமே!
அடுத்து, குளத்தில் தாவர மிதவைகள் வளர்வதற்கான விஷயங்களைச் செய்ய வேண்டும். குளத்தில் ஒரு அடி உயரத்துக்குத் தண்ணீர் நிரப்பி, நான்கு மூலைகளிலும் தலா ஒரு கூடை சாணத்தைப் போட வேண்டும். பச்சை சாணத்தை உடனடியாகப் போடாமல்... ஒரு நாள் வைத்திருந்துதான் போட வேண்டும். மழைநீரை நம்பி வெட்டப்படும் குளமாக இருந்தால்... தண்ணீர் நிரப்புவதற்கு முன்பே சாணத்தைப் போட்டு விடலாம். ஐந்து அல்லது ஆறு நாட்களில் சாணம் கரைக்கப்பட்ட தண்ணீர் பச்சை நிறத்துக்கு மாறியிருக்கும். அந்த சமயத்தில் தண்ணீர் மட்டத்தை நான்கடி அளவுக்கு உயர்த்தி, மீண்டும் நான்கு மூலைகளிலும் தலா ஒரு கூடை அளவுக்கு சாணம் போட வேண்டும். அடுத்த பத்து நாட்களில் தாவர மிதவைகள் உருவாகி விடும். தண்ணீர் பச்சை நிறமாக மாறுவதை வைத்து, இதைத் தெரிந்து கொள்ளலாம். ஒருவேளை மிதவைகள் உருவாகாவிட்டால், வேறு நீர் நிலைகளில் உள்ள பாசிகளை, எடுத்து வந்து போடலாம்.
தாவர மிதவைகள்... கவனம்!
தாவர மிதவைகள், குளத்தில் சரியான அளவுக்கு இருக்க வேண்டும். அதிகமாக இருந்தால், பிராண வாயுவின் அளவு குறைந்து மீன்கள் இறந்து விடும் வாய்ப்பும் உள்ளது. குறைவாக இருந்தால், இயற்கை உணவு பற்றாக்குறை ஏற்பட்டு மீன்களின் வளர்ச்சி குறைந்துவிடும். 'தாவர மிதவைகள் சரியான அளவுக்கு உருவாகியிருகின்றனவா?’ என்று பார்ப்பதற்கும் ஒரு வழி இருக்கிறது.
காலை பத்து மணி அளவில் குளத்தில் இறங்கி நின்று கொண்டு, முழங்கை வரை மடித்து, உள்ளங்கையை மேற்புறமாக திருப்பி வைத்துக் கொண்டு... கையைக் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீருக்குள் இறக்க வேண்டும். உள்ளங்கை கொஞ்சம் கொஞ்சமாக பார்வையிலிருந்து மறையத் தொடங்கும். முழங்கைக்கும், தோள்பட்டைக்கும் இடைப்பட்ட புஜப்பகுதி பகுதி மூழ்கும்போது உள்ளங்கை முழுவதுமாக மறைந்தால்... தாவர மிதவைகள் சரியான அளவில் உள்ளன என்று அர்த்தம். தோள்பட்டை பகுதி வரை மூழ்கிய பிறகும், உள்ளங்கை பார்வையில் இருந்து மறையவில்லை என்றால், மிதவைகள் குறைவாக உள்ளன என்று அர்த்தம். முழங்கை மூழ்குவதற்கு முன்பே உள்ளங்கை பார்வையிலிருந்து மறைந்தால், மிதவைகள் அதிகமாக உள்ளன என்று அர்த்தம். இதை வைத்து சரியான அளவைப் பராமரிக்க முடியும்.
மிதவைகளின் அளவு குறைந்திருந்தால்... கொஞ்சம் சாணத்தைக் கொட்டுவதன் மூலம் அதன் அளவை சமப்படுத்திவிடலாம். மிதவைகளின் அளவு அதிகமாக இருந்தால், குளத்தின் நீரை கொஞ்சம் வெளியேற்றி, புது நீரை விட வேண்டும்.
பகுதிக்கேற்ற மீன் ரகங்கள்!
சரியான அளவில் தாவர மிதவைகள் உற்பத்தியான பிறகுதான் மீன் குஞ்சுகளை குளத்தில் விட வேண்டும். ஒரு ஏக்கர் குளத்தில், அதிகபட்சமாக 4 ஆயிரம் மீன்குஞ்சுகள் வரை விட்டு வளர்க்கலாம். மீன்குஞ்சுகளை விடும் முன்பாக, நமது பகுதியில் விற்பனை வாய்ப்பு, குளத்தின் அளவு, தண்ணீர் வசதி போன்றவற்றை வைத்து, வளர்க்க இருக்கும் ரகங்களை முடிவு செய்ய வேண்டும்.
பொதுவாக நமது பகுதியில், கெண்டை வகைகள், விரால், கெளுத்தி என்ற தேளி ஆகிய ரகங்கள்தான் வணிகரீதியாக லாபகரமாக இருக்கின்றன. பத்து மாதங்கள் வரை தொடர்ந்து குளத்தில் நீர் நிறுத்தும் வசதி இருந்தால், கெண்டை மீன்களையும்; ஆறு மாதங்கள் வரை நீர் நிறுத்தும் வசதி இருந்தால் கெளுத்தி மீன்களையும்; நான்கு மாதங்கள் வரை மட்டுமே நீர் நிறுத்தும் வசதி இருக்கும்பட்சத்தில், ஜிலேபி கெண்டை மீன்களையும் வளர்க்கலாம்.  
குஞ்சுகளுக்கு 50 நாள் வயது!
குஞ்சுகளை முடிவு செய்த உடன், 35 முதல் 50 நாட்கள் வயதுள்ள தரமானக் குஞ்சுகளை வாங்கி குளத்தில் விட வேண்டும். இந்த வயதில் குஞ்சுகள் விரல் அளவுக்கு வளர்ந்திருக்கும். ஒரு குஞ்சு 1 ரூபாய் 50 காசு முதல் 3 ரூபாய் 50 காசு வரை ரகத்துக்கேற்ப விற்பனை செய்யப்படுகிறது. குளத்தின் அளவுக்கேற்ற எண்ணிக்கையில்தான் குஞ்சுகளை வளர்க்க வேண்டும்.
கெண்டை ரகங்களுக்கு ஒரு மீனுக்கு ஒரு சதுர அடி இடம் தேவை. ஒரு சதுர அடியில் 3 முதல் 4 கெளுத்தி மீன்களை வளர்க்கலாம். 25% கட்லா, 15% ரோகு, 20% மிர்கால்,
10% வெள்ளிக்கெண்டை, 10% புல் கெண்டை, சாதா கெண்டை 20% என்ற கணக்கில் கெண்டை மீன் ரகங்களைக் கலந்து வளர்க்கலாம்.
வழக்கத்தை மாற்றக்கூடாது!
மீன்களுக்கு குருணை வடிவிலான சரிவிகித உணவு, ஒரு கிலோ 22 ரூபாய் என்ற விலையில் கடைகளில் கிடைக்கிறது. தவிடு, பிண்ணாக்கைத் தீவனமாகக் கொடுப்பதைவிட இது செலவு குறைவாக இருக்கும். ஒரு மீனுக்கு அதன் உடல் எடையின் அளவில் 2 முதல் 5 சதவிகித அளவுக்கு தினமும் உணவு கொடுத்தால் போதும். மாதத்துக்கு ஒரு முறை கொஞ்சம் மீன்களை பிடித்து, அவற்றின் எடையைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு நாளுக்கான தீவனத்தை மொத்தமாகக் கொடுக்காமல், இரண்டாகப் பிரித்து காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் கொடுக்க வேண்டும்.
இடத்தையும் நேரத்தையும் மாற்றாமல் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் தினமும் தீவனத்தை இட வேண்டும். மீனின் மொத்த எடை எவ்வளவோ... கிட்டத்தட்ட அந்த அளவு தீவனத்தைத்தான் அது சாப்பிட்டிருக்கும் என்பது ஒரு கணக்கு. இதை வைத்து செலவுக் கணக்கைச் சரிபார்த்துக் கொள்ளலாம். உதாரணமாக ஒரு கிலோ எடையுள்ள மீன், அதன் வாழ்நாளில் ஒரு கிலோ முதல் ஒன்றே கால் கிலோ அளவுக்கு தீவனம் சாப்பிட்டிருக்கும். தேளி மீன்கள் ஆறு மாதத்தில் விற்பனைக்கேற்ற வளர்ச்சியை எட்டி விடும். கெண்டை மீன்கள் எட்டு மாதங்களில் வளர்ச்சியை அடைந்து விடும். மீன்கள், முக்கால் கிலோ அளவு எடைக்கு வந்தவுடன் விற்பனையைத் தொடங்கலாம்' என்ற கணேசன் நிறைவாக,
நோய்கள் தாக்காது!
கெண்டை மீன்களைப் பெரும்பாலும் நோய்கள் தாக்குவதில்லை. நீர் மேலாண்மை, தீவன மேலாண்மையைச் சரியாகப் பராமரித்தாலே போதும். விராலுக்கு மட்டும் குளிர் காலத்தில் பூஞ்சண நோய் வரும். இந்நோய் தாக்கிய மீனின் உடம்பில் சாம்பல் பூசியதைப் போல வெண்மையான படலம் படிந்திருக்கும். நாளாக, நாளாக அது புண்ணாகி விடும். பிறகு பாதிக்கப்பட்ட மீன் கீழே இருக்க முடியாமல் நீர்மட்டத்துக்கு மேலே வந்து விடும். சோர்வாக இருக்கும், அப்படி பாதிக்கப்பட்ட மீன்களைப் பிடித்து தனியாக கொண்டு போய் புதைத்தோ அல்லது எரித்தோ விட வேண்டும்.
மஞ்சள், வேப்பிலை ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்து, அரைத்துப் பொடித்து அவ்வப்போது குளத்தில் தூவி விட்டால்... இந்நோய் எட்டியே பார்க்காது. அதையும் தாண்டி வந்து விட்டால், ஒரு லிட்டர் ஃபார்மாலின்  திரவத்தை 40 லிட்டர் நீரில் கலந்து குளத்தில் தெளித்தால், சரியாகி விடும்'' என்றார்.

 ஆறு ரகங்களும் இருக்க வேண்டும்!
கெண்டை மீன்களில் கட்லா, ரோகு, மிர்கால், வெள்ளி கெண்டை (சில்வர் கார்ப்), புல் கெண்டை, சாதா கெண்டை என ஆறு ரகங்கள் உள்ளன. இந்த ஆறு ரக மீன்களும் தண்ணீரில் ஒரே இடத்தில் வசிப்பதில்லை. கட்லா, வெள்ளிக் கெண்டை ஆகியவை குளத்தின் மேல்புறத்திலும், ரோகு, புல் கெண்டை ஆகியவை குளத்தின் நடுப்பகுதியிலும் சாதா கெண்டை, மிர்கால் ஆகியவை குளத்தின் அடிப்பகுதியிலும் வசிக்கும் பழக்கத்தைக் கொண்டவை. அனைத்துப் பகுதிகளிலும் மீன்கள் இருந்தால்தான் அதிக எண்ணிக்கையில் வளர்க்க முடியும்.  
தாவர மிதவைகளில் சில புழு, பூச்சிகளும் உருவாகும். இவற்றை விலங்கின மிதவைகள் என்று சொல்வார்கள். கட்லா மீன்கள் விலங்கின மிதவைகளையும், வெள்ளிக் கெண்டை மீன்கள் தாவர மிதவைகளையும் உணவாக எடுத்துக் கொள்கின்றன. ரோகு மீன்கள் இவை இரண்டையுமே உணவாக எடுத்துக் கொள்கின்றன. புல் கெண்டை மீன்கள் குளத்தில் உள்ள சிறு புற்களை அதிகமாக உண்டு, அவற்றில் செரிக்காதவற்றை வெளியே துப்பும் பழக்கம் கொண்டவை. இப்படி வெளியே துப்பப்படும் உணவை மிர்கால் மற்றும் சாதா கெண்டை மீன்கள் சாப்பிட்டு விடும். அதனால், இந்த ஆறு ரகங்களையும் கலந்து வளர்க்கும்போது தீவனம் வீணாகாமல் தடுக்கப்படும்.
 நாமளே தயாரிக்கலாம்...குருணைத் தீவனம்!
ஒரு கிலோ தீவனம் தயாரிக்கத் தேவையான பொருட்கள்: சோயாபீன்ஸ் மாவு-210 கிராம், கருவாட்டுத்தூள்-203 கிராம், இறால் கருவாட்டுத்தூள்-200 கிராம், சோளமாவு-173 கிராம், கோதுமை மாவு-200 கிராம், உப்பு-4 கிராம், வைட்டமின் பொடி-7 கிராம். இவை மொத்தம் 997 கிராம் எடை வரும். இவற்றை தண்ணீர் சேர்த்து தயாரிக்கும்போது ஒரு கிலோ எடைக்கு வந்து விடும்.
இந்தப் பொருட்கள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் இட்டு... கலந்து வைத்துக் கொண்டு அதில், கொதிக்க வைத்து ஆறிய நீரை ஊற்றி 5 நிமிடம் கிளறி, குக்கரில்
5 நிமிடம் வேக வைக்க வேண்டும். பிறகு, வெந்தக் கலவையை உருண்டைகளாக்கி இடியாப்பம் பிழியும் குழாயில் இட்டு பிழிந்து காய வைத்தால், தீவனம் தயாராகி விடும். அதை கோணியில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
 தேளிக்குத் தடையில்லை! tholil
தேளி மீனுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை பற்றி பேசிய கணேசன், ''தேளியைத் தடை பண்ணிட்டதா பல பேரு தப்பா நினைச்சுகிட்டு இருக்காங்க. 'ஆஃப்ரிக்கன் கேட் ஃபிஷ்’னு ஒரு ரக தேளி மீன் இருக்கு. இதோட முள் அதிக விஷத்தன்மை கொண்டது. அதனால் இந்த ரகத்துக்கு மட்டும்தான் தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்றபடி கெளுத்தி வகையைச் சேர்ந்த தேளிகளுக்குத் தடையில்லை. இவற்றுக்கு அதிக இட வசதி தேவையில்லை என்பதால், தொட்டிகளில்கூட வளர்க்க முடியும். இது சுவை குறைந்து இருப்பதால், அதிக விலைக்கு விற்பனையாவதில்லை'' என்றார்.

 மீன் வளர்ப்பு - Meen Valarpu | Pond  Fresh Water  Murrel  Colour Fish Farm Farming Katla Jilapy Kenddai  Kunju Sale Business Plan Videos  Tamilnadu 

Tuesday, September 20, 2016

காளான் வளர்ப்பு தொழில் தொடங்க முழு விவரம்

காளான் வளர்ப்பு தொழில் தொடங்க முழு விவரம்


குறைந்த இடவசதியே போதும். 
ஒரு படுகையில் இருந்து ஒன்றரை கிலோ. 
மாதம் ரூ.10 ஆயிரம் வருமானம். 
''விவசாயம்தான் எங்க பரம்பரைத் தொழில். ஆனாலும், அதுல தொடர் நஷ்டம் ஏற்படவே, விவசாயத்தை உதறிட்டு வேற வேலைக்குப் போயிட்டேன். அதுக்குப் பிறகு, ஒரு யோசனையோட நண்பர் மோகன்தாஸோட சேர்ந்து மறுபடியும் விவசாயத்துல கால் வெச்சேன்... இன்னிக்கு நல்ல வருமானம் பாக்குறேன். இதுக்கெல்லாம் காரணம்... பசுமை விகடன் கொடுத்த நம்பிக்கையும், வழிகாட்டுதலும், தைரியமும்தான்'' என்று நெகிழ்ந்து போய்ச் சொல்கிறார் திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகேயுள்ள கன்னியாபுரத்தைச் சேர்ந்த ராமசாமி. 
நண்பர் மோகன்தாஸோடு, தோட்டத்திலிருக்கும் காளான் பண்ணையை நமக்குச் சுற்றிக் காட்டியபடியே பேச்சைத் தொடர்ந்த ராமசாமி, ''விவசாயத்தைக் கை விட்டதும், துபாய்ல டிரைவர் வேலைக்குப் போயிட்டேன். இருந்தாலும் அவ்வளவு லேசுல விவசாய அனுபவத்தையும், அதன் மூலமா கிடைச்ச மனநிம்மதியையும் மறக்க முடியல. துபாய்ல இருந்து ஊருக்குத் திரும்பின சமயத்துல, 'பசுமை விகடன்' படிக்கறதுக்கு வாய்ப்பு கிடைச்சுது. அதைப் படிக்க, படிக்க எனக்குள்ள ஏகப்பட்ட நம்பிக்கை ஏற்பட்டுச்சி. திரும்பவும் துபாய் போற முயற்சியைக் கைவிட்டுட்டு, விவசாயத்துலயே மறுபடியும் இறங்கிட்டேன். 
இணைந்த கைகள்! 
என்னோட ரெண்டரை ஏக்கர் நிலத்துல, அரை ஏக்கர்ல மட்டும் ஜீவாமிர்தம் கொடுத்து கத்திரிக்காய் போட்டேன். காரல் இல்லாத, பசுமை மாறாத காயா விளைஞ்சு வந்ததால, மார்க்கெட்டுல என் தோட்டத்துக் காய்களுக்கு நல்ல மவுசு. கொண்டு போனதுமே மொத்தமும் வித்துத் தீர்ந்து போற அளவுக்கு எனக்கு பேரு கிடைச்சுது. அதைத் தொடர்ந்து, விவசாயத்துல தீவிரமா கவனத்தைத் திருப்பினேன். 
ஸ்பின்னிங் மில்லுல வேலை பார்த்துட்டிருந்த நண்பர் மோகன்தாஸ், அடிக்கடி என் தோட்டத்துக்கு வருவார். அவருக்கும் என்னைப் போலவே விவசாயத்துல ஆர்வம் அதிகம். அவரும் 'பசுமை விகடன்' இதழை தொடர்ந்து படிச்சுட்டே இருப்பார். அதுல இருக்கற விஷயங்களையெல்லாம் ரெண்டு பேரும் விவாதிப்போம். அதையெல்லாம் வெச்சு, மேற்கொண்டு ஏதாவது செய்யலாமானு பேசிட்டே இருப்போம். ஒரு தடவை காளான் வளர்ப்புப் பற்றி கட்டுரை வந்துது. அதிக முதலீடு இல்லாம, குறைஞ்ச இடத்துலயே நல்ல வருமானம் பாக்கலாம்னு படிச்சதும்... எங்களுக்கு ஆச்சர்யமா போச்சு. அந்த நிமிஷமே காளான் பண்ணை வைக்கலாம்னு முடிவெடுத்தோம். 
காளான் பண்ணை வெச்சிருக்கற விவசாயிகளோட பண்ணைகளுக்குப் போயி பாத்துட்டு வந்தோம். எங்களுக்கு நம்பிக்கை வந்ததும்... 'இதுதான் நமக்கான தொழில்’னு முடிவு செஞ்சு சிப்பிக்காளான் வளர்ப்புல இறங்கிட்டோம். முதல்ல என்னோட தோட்டத்துல சின்னதா ஒரு குடிசை போட்டு உற்பத்தி செஞ்சிப் பாத்தோம். அக்கம்பக்கத்துல இருக்குறவங்களே தேடி வந்து வாங்கிட்டு போகவே... நம்ம முயற்சி வெற்றிதான்னு ரெண்டு பேருக்கும் ஒரே சந்தோஷம்'’ என்று ராமசாமி குஷியோடு சொல்லி நிறுத்தினார். 
கிடைத்த இடைவெளியில் பேச ஆரம்பித்த மோகன்தாஸ், ''இதன் மூலமா, நம்மளால காளானை நல்லபடியா வளர்த்து லாபம் பார்க்க முடியும்னு எங்களுக்கு நம்பிக்கை வந்துச்சு. உடனே வேலையை விட்டுட்டு, நானும் ராமசாமியோட கைகோத்தேன். எங்க வீடு இருக்கறது திண்டுக்கல், உழவர் சந்தைக்கு பின்னாலதான். வீட்டுக்கு முன்ன கொஞ்சம் காலி இடம் உண்டு. அதுல ஒரு குடிசையைப் போட்டு காளான் வளர்க்க ஆரம்பிச்சோம். அக்கம்பக்கம் இருக்குறவங்களுக்கு அதைக் கொடுத்து பழக்கினோம். இப்ப மூணு குடிசை போட்டு வளர்க்கிறோம். அப்படியிருந்தும்கூட சப்ளை செய்ய முடியல. அந்தளவுக்கு கிராக்கி இருக்கு'' என்று தானும் சந்தோஷம் பொங்கினார். 
அடுத்து, நண்பர்கள் இருவரும் காளான் வளர்ப்பு முறை பற்றி பாடமே நடத்த, அதற்கு செவிமடுத்தோம்... 
குளுகுளுனு இருக்கணும் குடிசை! 
'சிப்பிக்காளான் வளர்க்க 10 அடி அகலம், 20 அடி நீளம், 6 அடி உயரத்தில் தென்னை ஓலை கொண்டு குடிசை அமைக்கவேண்டும். தரைப்பகுதியில் சிமென்ட் மூலம் தளம் அமைத்து, அதற்கு மேல் ஒரு அடி உயரத்துக்கு ஆற்று மணலைப் பரப்ப வேண்டும். இதன்மூலம் அறையின் ஈரப்பதம் ஒரே அளவில் இருப்பதோடு, தண்ணீரும் குறைவாகச் செலவாகும். குடிசைக்குள் 20 முதல் 28 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும், காற்றின் ஈரப்பதம் 85 சதவிகித அளவுக்குக்குக் குறையாமலும் இருப்பது போல் பராமரிக்க வேண்டும். இதற்காக அடிக்கடி தண்ணீர் தெளித்துக் கொண்டே இருக்க வேண்டும். நூல் சாக்குகளை கட்டித் தொங்கவிட்டு, அதை அடிக்கடி ஈரமாக்கிக் கொண்டிருப்பதும் நல்ல பலன் தரும். காற்றோட்டத்தை நன்கு பராமரிப்பதும் முக்கியம். அது இல்லாவிட்டால், அறைக்குள் கரியமில வாயுவின் அடர்த்தி அதிகமாகி காளானின் வளர்ச்சி பாதிக்கப்படும். 
200 கிராம் விதை...3 கிலோ வைக்கோல்! 
அறை தயாரானதும், காளான் படுகைகளை தயார் செய்ய வேண்டும். அதற்கு முன்பாக, காளான் உற்பத்தியாளர்களிடம் இருந்து விதைப்புட்டிகளை (தாய்விதை) வாங்கவேண்டும். காய்ந்த வைக்கோலைத் துண்டுகளாக்கி வேகவைத்து உலரவைக்க வேண்டும். இதை பிளாஸ்டிக் பைகளில் (காளான் வளர்ப்புக்கென்றே பிளாஸ்டிக் பைகள் கடைகளில் கிடைக்கின்றன) ஒரு சுற்று வைக்கோல், அதற்கு மேல் காளான் விதை, மறுபடியும் வைக்கோல், மறுபடியும் விதை என மாற்றி மாற்றி போட்டு உருளைவடிவப் படுகைகளாகத் தயாரிக்க வேண்டும். ஒரு படுகை தயாரிக்க, 
200 கிராம் விதைப்புட்டி, மூன்று கிலோ வைக்கோல் ஆகியவை தேவைப்படும். மேலே சொன்ன அளவுள்ள அறையில் 450 படுகைகள் வரை தொங்க விடலாம், அதாவது ஒரு குடிசையில். அனைத்துப் படுகைகளையும் மொத்தமாகத் தயாரிக்கக் கூடாது. தினமும் பத்து, பத்து படுகைகளாகத்தான் தயாரிக்க வேண்டும். அப்போதுதான் சுழற்சி முறையில் தினமும் காளான் மகசூல் கிடைக்கும். 
25 நாளில் அறுவடை! 
படுகை தயாரித்து முடித்ததும் விதைகளுக்கு நேராக பென்சில் அளவில் ஓட்டை போட வேண்டும். ஒரு படுகையில் அதிகபட்சம் 12 ஓட்டைக்கு மேல் போடக்கூடாது. படுகைகளை உறி மாதிரி கட்டித் தொங்கவிட வேண்டும். ஒரு கயிற்றில் நான்கு படுகை தொங்கவிடலாம். பூஞ்சண இழைகள் படுகையில் பரவ பதினைந்து நாட்களாகும். அது பரவியதும், படுகை முழுக்க வெள்ளை நிறமாக மாறிவிடும். மேல்பக்கம் நனையும்படி தினமும் தண்ணீர் தெளித்து வந்தால், 18 முதல் 20-ம் நாளில் மொட்டு வரும். அதிலிருந்து நான்காவது நாளில் காளான் நன்றாக மலர்ந்து முழுவளர்ச்சி அடைந்துவிடும். இதைப் பறித்து சுத்தம் செய்து விற்பனை செய்யலாம். 

முதல் அறுவடைக்கு 22 முதல் 25 நாட்களாகும். ஒரு அறுவடை முடிந்த பிறகு, தொடர்ந்து தண்ணீர் தெளித்து வந்தால், அடுத்த பத்து நாளில் இரண்டாவது அறுவடை செய்யலாம். இதுபோல ஒரு படுகையிலிருந்து மூன்று முதல் நான்கு தடவை அறுவடை செய்யலாம். ஒரு படுகையின் ஆயுள் அதிகபட்சம் 60 நாட்கள்தான். இந்த 60 நாட்களில் ஒரு படுகையிலிருந்து ஒன்றரை கிலோ காளான் வரை கிடைக்கும். ஒரு படுகை தயார் செய்ய 50 ரூபாய் செலவாகும். 150 ரூபாய்க்கு காளான் கிடைக்கும். கிட்டத்தட்ட 100 ரூபாய் லாபம் கிடைக்கும். பெரிய அளவில் இடவசதி இல்லாதவர்கள்கூட இதைச் செய்யலாம். கணக்குப் போட்டுப் பார்த்தால், ஒரு குடிசையில் இருக்கும் 450 படுகைகள் மூலம் ஒரு மாதத்துக்கு குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய் லாபம் பார்க்க முடியும். 
நிறைவாக பேசிய ராமசாமி மற்றும் மோகன்தாஸ், 'இன்னிக்கு இறைச்சியோட விலை அதிகமாயிருக்குறதால, காளான் பக்கம் மக்களோட கவனம் அதிகமா திரும்பியிருக்கு. முன்னைவிட நல்ல வரவேற்பு இருக்கு. நகரம், கிராமம்னு கணக்கில்லாம எங்கயும் காளான் பண்ணை ஆரம்பிக்கலாம். அடுத்ததா காளான் சூப் தயாரிச்சு விக்கலாம்னு இருக்கோம். அதோட, ஜீவாமிர்தம் கொடுத்து காய்கறிகளையும் தயார் செஞ்சிகிட்டு இருக்கோம். 40 சென்ட்ல கோ-4 தீவனப் புல் சாகுபடி செஞ்சிருக்கோம். அடுத்ததா பால் மாடுகளை வாங்கி பால் உற்பத்தி செஞ்சி, நேரடியா மக்கள்கிட்ட விற்பனை பண்ணலாம்னும் முடிவு செஞ்சுருக்கோம்'' என்றவர்கள், 
''எங்களோட இந்த எல்லா முயற்சிக்கும், வெற்றிக்கும் அடிப்படையா இருந்த பசுமை விகடனுக்கு 


ரொம்ப, ரொம்ப நன்றி'' என்று கைகூப்பினார்கள்! 
Thnxs
தொடர்புக்கு : ராமசாமி: 96882-16058, 
மோகன்தாஸ்: 97889-44907 
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சென்னை நகர்ப்புறத் தோட்டக்கலை வளர்ச்சி மையத்தில் “காளான் வளர்ப்பு” பற்றிய ஒரு நாள் பயிற்சி டிசம்பர் மாதம் 15ம்நாள் (புதன் கிழமை) 15.12.2010 அன்று நடைபெறவுள்ளது.இப்பயிற்சியானது வீட்டிலிருப்போர்மாணவர்கள்தொழில் முனைவோர்வியாபாரிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும். பயிற்சி நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை. பயிற்சி பற்றிய குறிப்பேடுகையேடுமதிய உணவு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சியில் கலந்துக் கொள்ள விருப்பமுள்ளவர்கள்பயிற்சி பற்றிய தகவல்கள் மற்றும் பயிற்சி கட்டணத்தை கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளவும்.
For contact:
The Professor and Head,
Urban Horticulture Development Centre,
Tamil Nadu Agricultural University,
New No. P-44, (Old No. P-37), 6th Avenue, (Behind K- 4 police station),
Anna Nagar, Chennai-40.
Phone: 044 -2626 3484 / 044 – 42170506.
Training Programme on “Mushroom Cultivation”

ஆகாரமின்றி வாழும் அதிசய மனிதர்

பல ஆண்டுகளாக ஆகாரமின்றி வாழும் அதிசய மனிதர்

ஈரோடு மாவட்டம், கோபியை சேர்ந்தவர் இனியன். முன்னாள் ராணுவ வீரர். கடந்த 13 ஆண்டுகளாக நீரை மட்டுமே உணவாக எடுத்து வாழ்ந்து வருகிறார். புதுக்கோட்டை மாவட் டம், ஆலங்குடி வந்திருந்த அவர் கூறியதாவது: 2002 மார்ச் 15ம் தேதி முதல் நீர் உணவு முறைக்கு மாறிவிட்டேன். அது முதல் நீரை ஆகாரமாகவும், விண்வெளி, தூய்மையான காற்று, சூரிய சக்தி ஆகியவற்றில் இருந்து ஆற்றலை எடுத்துக் கொள்ளும் நிலைக்கு எனது உடல் பழக்கப்பட்டு விட்டது. அது ஆரோக்கியமாகவும் இயற்கை சார்ந்த விஷயமாகவும் உள்ளது. இது அதிசயம் அல்ல. என்னிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் பலர் அதுபோல் தான் இருக்கின்றனர். இந்தக் கலையை மற்றவர்களுக்குப் பரவச்செய்யவும் மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுக்கவும் ஏற்பாடு செய்து வருகிறோம்.
வாழ்வில் ஒருமுறை நீருணவுப் பயிற்சியை எடுத்துக் கொண்டு விட்டால் போதும். அப்புறம் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்பதில்லை. வழக்கமாக எடுத்துக் கொள்ளும் உணவு முறைக்கு மாறிவிடலாம். எப்போது ஆரோக்கியமும் உணீடல் பலமும் நிம்மதியும் தேவைப்படுகிறதோ அப்போது தனக்குத் தானே கடைபிடித்துக் கொண்டால்போதும்.
நீருணவு உட்கொண்டால் மருத்துவமனைகள் தேவைப்படாது. இது உடல் சார்ந்த விஷயமல்ல. மனம் சார்ந்தது. மனதளவில் தயாராகி விட்டால் ஒவ்வொருவரும் யோகி தான். அதனால் இந்த வாழ்க்கை முறையை யோக வாழ்வு என்கிறோம். ஜீரண நீரை நிறுத்தாமலோ பசியைப் பொறுத்துக் கொள்ளும் பழக்கமோ இல்லாவிட்டால் விண்வெளிப் பயணம் சாத்தியமில்லை. விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்குப் புரிந்த மற்றவர்களால் அறிவியல் ரீதியாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்தப் பயிற்சியை சாதாரண மக்களும் கடை பிடிக்கும் வண்ணம் இப்போது அனைவருக்கும் சொல்லிக் கொடுத்து வருகிறோம். இதுதான் யோக மருத்துவம்.  http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=112293

“உலக நோய்கள்லயே ரொம்பக் கொடுமையானது பசி நோய்... எல்லாப் பிரச்னைகளுக்கும் அடிப்படைக் காரணம் அதுதான். பசி நோய் மட்டும் இல்லேன்னா, உலகமே அமைதிப் பூங்காவா இருக்கும். அந்த நிலை நோக்கி மனிதர்களை நகர்த்துறதுதான் என் லட்சியம். அந்த முயற்சியில பாதியளவுக்கு வெற்றியடைஞ்சிருக்கேன்.
உணவே சாப்பிடாத ஆயிரக்கணக்கான காற்றுணவு மனிதர்களை உருவாக்கியிருக்கேன்...’’ - புன்னகையோடு சொல்கிற இனியனைப் பார்க்கவும், கேட்கவும் பெருவியப்பு! ஒன்றல்ல இரண்டல்ல... கடந்த 13 வருடங்களாக உணவே இல்லாமல் வாழ்கிறார் இந்த மனிதர்!
"‘நீர், நிலம், காற்றுனு எல்லாமே விஷமாகிடுச்சு. அடுத்த தலைமுறை இந்த பூமியில வாழ முடியாது. நிச்சயம் வேறு வாழிடம் தேடியாகணும். அதுக்குத் தீர்வு விண்வெளி வாழ்க்கை. விண்வெளி வாழ்க்கைக்கான வேலைகள் ஜப்பான், அமெரிக்கா, ரஷ்யா... ஏன் நம்ம இந்தியாவுலயும் கூட நடந்துக்கிட்டிருக்கு.
அந்த விண்வெளி வாழ்க்கைக்கான முன்னேற்பாடுகள்ல ஒண்ணுதான் காற்றுணவு வாழ்க்கை. இது முற்றிலும் அறிவியல்பூர்வமானது. நம் சித்தர்கள் அப்படித்தான் வாழ்ந்தாங்க. பயிற்சியும், உறுதியும் இருந்தா எல்லோரும் இது மாதிரி வாழலாம்’’ என்கிற இனியனுக்கு சொந்த ஊர் கோபிச்செட்டிப்பாளையம். அந்தக் கால பி.யூ.ஸி. ராணுவத்தில் 2 ஆண்டுகள் பொறியாளராகப் பணியாற்றிய அனுபவமும் உண்டு.
‘‘அப்பாவுக்கு சித்தர்கள் மேல நிறைய நாட்டம். ஜீவ சமாதிகளுக்கெல்லாம் அழைச்சிட்டுப் போவார். சித்தர் பாடல்களைப் பாடுவார். எனக்கு இயற்கை உணவு, இயற்கை வாழ்வியல் மேல பள்ளிக் காலத்துலயே நல்ல புரிதல் இருந்துச்சு. மிலிட்டரியில இருந்து திரும்பின பிறகு எனக்குள்ள நிறைய தேடல்கள். நீதிவெண்பா, திருக்குறள்னு நிறைய வாசிக்கத் தொடங்கினேன். என்னைப் பொறுத்தவரைக்கும் நம்ம இலக்கியங்கள் சொல்ற வாழ்க்கை முறை எதையுமே நாம எடுத்துக்கல.
திருக்குறளைக் கூட இன்னும் முழுசா பயன்படுத்தலே. 'யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்...’னு வள்ளுவர் சொல்றார். 'எதன் மீதெல்லாம் ஆசையைக் குறைக்கிறாயோ அதில் இருந்தெல்லாம் விடுபடுவாய்...' - இந்த சிந்தனை என்னை வேறு பாதைக்கு அழைச்சிட்டுப் போச்சு.
'ஒருவேளை உண்பான் யோகி, இருவேளை உண்பான் ரோகி, மூவேளை உண்பான் போகி'னு ஒரு சித்தர் சொல்றார். நிறைய குழப்பங்களோட மேலும் மேலும் தேடினேன். வள்ளுவர் 'மருந்து'னு ஒரு அதிகாரம் எழுதி யிருக்கார். ஆனால், இது தான் மருந்துன்னு எதையும் சொல்லல...
'மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்...'னு அவர் எழுதின குறளோட உண்மையான பொருள் இது வரைக்கும் சொல்லப்படவே இல்லை. யாருமே ஆராய்ச்சி நோக்கத்துல குறளுக்கு உரை எழுதல. 'உடம்புக்கு எந்த மருந்தும் தேவையில்லை. வயித்துக்குள்ள கொஞ்சமா நீர் மட்டும் இருந்தாப் போதும்'கிறார் வள்ளுவர். 'அர்னால்டு எகிரேட்' தியரியும் அதைத்தான் சொல்லுது.
ஜெர்மனைச் சேர்ந்த டாக்டர் அர்னால்டு எகிரேட் புற்றுநோயால பாதிக்கப்பட்டார். தனக்கு புற்றுநோய் வர நவீன உணவுகள்தான் காரணம்னு அவரே கண்டுபிடிச்சார். மரணமில்லாப் பெருவாழ்வுக்கு தடையா இருக்கிறது உணவுதான்னு அவர் சொல்றார். கிட்டத்தட்ட எகிரேட் மாதிரியே தமிழ்நாட்டுல இருக்கவர்தான் மன்னார்குடி வெங்கடேசன் ஐயா. உலகப்புகழ் பெற்ற கட்டுமானப் பொறியாளர் அவர். பல்வேறு நோய்களுக்கு உள்ளான பிறகு அவர் வடிவமைச்சதுதான், உணவில்லாமல் வாழும் கலை. கோவை பக்கத்துல நரசிபுரத்துல இருக்கார். அவரைப் போய் பாத்தேன். நிறைய பேசினார். உணவில்லா வாழ்க்கையைக் கத்தும் கொடுத்தார்.
உலகத்துலயே கொடுமையான நீர், நம் உடம்புல சுரக்குற ஜீரண நீர்தான். ஹைட்ரோகுளோரிக் ஆசிட்னு சொல்லப்படுற அதைக் கட்டுப்படுத்திட்டா மரணமில்லாப் பெருவாழ்வு சாத்தியம். அதுக்கு சில வழிமுறைகளைக் கத்துத்தந்தார். 'பசி வர்றப்போ அதைக் கட்டுப்படுத்த மாவுச்சத்தில்லாத காய்கறிகள் சாப்பிடு... உள்ளே இருக்கிற கழிவுகளை வெளியேத்தவும், உராய்வைக் குறைக்கவும் கொஞ்சமா தண்ணி குடிச்சிக்கோ'னு சொன்னார். ரொம்பவும் கஷ்டமா இருந்தா இடையில ரெண்டு பேரிச்சம்பழம் சாப்பிடு...’’னு சொன்னார்.
பயிற்சி எடுத்து 85வது நாள் எனக்கு ஜீரண நீர் சுரப்பு நின்னுடுச்சு. பசி உணர்வே வரல. 74 கிலோ இருந்த என் உடம்பு 54 கிலோவாச்சு. தேவையில்லாத சளி, கொழுப்பு, விஷம்... எல்லாம் உடம்புல இருந்து விலகிடுச்சு. அதுக்கப்புறம் இந்த 13 வருடத்துல ஒரு கிலோ கூட குறையலே. இப்போ மருந்து மாதிரி கொஞ்சம் தண்ணி... எப்போவாவது 2 பேரிச்சை... அவ்வளவுதான்.

காத்துல இருக்கிற ஆக்ஸிஜனை மட்டும்தான் நாம பேசுறோம். அதில், 78% நைட்ரஜனும் இருக்கு. நம்ம சுவாசத்துக்குள்ள போற நைட்ரஜனை உடம்பு புரோட்டீனா மாத்திக்கும். மருந்துக்கு நீர்.... உணவுக்குக் காத்து... இன்னைக்கு மிகப்பெரும் சுதந்திர மனிதனா உலவுறேன். நிறைய மலையேற்றங்கள் செய்யறேன்.
உலகம் முழுக்க பயணிச்சு நீருணவு பயிற்சி கொடுக்கறேன். எந்த நோயும் என்னைத் தீண்டினதில்லை. உணவுக்கும் சக்திக்கும் சம்பந்தமில்லைங்கிறதை நிரூபிக்கிறதுக்காக சில வருடங்களுக்கு முன்னால ரெண்டாவதா ஒரு குழந்தையையும் பெத்துக்கிட்டேன். என் மனைவி, குழந்தைகளும் கூட இதே வாழ்வியலுக்கு வந்துக்கிட்டிருக்காங்க!’’ என்கிற இனியனுக்கு இப்போது தமிழகம் முழுக்க ஆயிரக்கணக்கான மாணவர்கள்

ஒரு ஏக்கர்... மாதம் 50 ஆயிரம்...

ஒரு ஏக்கர்... மாதம் 50 ஆயிரம்...

கிறங்க வைக்கும் கீரை சாகுபடி... பட்டையைக் கிளப்பும் 'பட்டாம்பூச்சி' பாசனம்!
தண்ணீர் தட்டுப்பாடு, மின்சாரத் தட்டுப்பாடு, கூலியாட்கள் தட்டுப்பாடு... என விவசாயத்தில் ஏகப்பட்ட பிரச்னைகள். இத்தனையையும் தாண்டி விவசாயம் செய்ய வேண்டுமென்றால், புதிய தொழில்நுட்பங்கள் கண்டிப்பாகத் தேவை. இதை சரியாகப் புரிந்து கொண்ட விவசாயிகள் பலரும் நவீன கருவிகளைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.
அந்த வகையில், குறைந்த நேரமே கிடைக்கும் மின்சாரத்தையும், குறைந்தளவு தண்ணீரையும் வைத்து பாசனம் செய்யவும், பல நவீன கருவிகள் மற்றும் முறைகள் உள்ளன. அதில் ஒன்றுதான், தெளிப்பு நீர்ப் பாசனம். இந்த முறையில், பாசனம் செய்து கீரை சாகுபடி செய்து வருகிறார், ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகேயுள்ள கரிச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி பொன்னுசாமி.
மனைவி சிவகாமி மற்றும் மகன் சதீஷ்குமார் ஆகியோருடன் இணைந்து, கீரை வயலில் வேலையாக இருந்த பொன்னுசாமியை சந்தித்தோம்.

'சுளீர் சுளீர்’ என சுழன்று பூமியில் இருந்து புறப்பட்ட ஊற்றுகள் போல, தண்ணீரைத் தூவிக்கொண்டு இருந்தன ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்த தெளிப்பு நீர்க் கருவிகள்.
குளிப்பாட்டி தலை துவட்டிய குழந்தையின் குதூகலம் போல பளிச்சென பசுமைக் கட்டி இருந்தன கீரைச் செடிகள்.
அதைப் பெருமிதமாகப் பார்த்தவாறே நம்மிடம் பேசத் தொடங்கினார், பொன்னுசாமி.
''கொங்கு நாட்டின் நெற்களஞ்சியம்னு கோபிச்செட்டிபாளையம் பகுதியை சொல்லுவாங்க. அந்தளவுக்கு வளமான பகுதி. ஆனா, அதே தாலூகாவோட தெக்கு பக்கம் இருக்கற எங்க பகுதி வானம் பாத்த பூமி. ஆறு, குளம், குட்டை, வாய்க்கால் எதுவும் இங்க இல்ல. முழுக்க முழுக்க கிணத்துப் பாசனத்தை மட்டுமே நம்பித்தான் வெள்ளாமை.
ஆயிரம் அடிக்கும் மேல, போர் போட்டு கிடைக்கிற கொஞ்ச தண்ணீரை வெச்சுதான் வெவசாயம் செய்றோம்.
போதுமான தண்ணி இல்லாததால, கிடைக்கற தண்ணியை வெச்சு பிஞ்சு வெள்ளாமையா கீரையை சாகுபடி செய்றேன். ஆரம்பத்துல வாய்க்கால் பாசனம்தான் செஞ்சேன். வாய்க்கால்ல ஓடி, வயலை அடையுறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடும். அந்த மாதிரி சமயத்துலதான் ஒருநாள் உழவர் சந்தையில ஒரு விவசாயி, சொட்டுநீர்ப் பாசனத்தைப் பத்தி சொன்னாரு.
வாய்க்கால் பாசனத்துல ஒரு ஏக்கர் பயிருக்கு போற தண்ணியை... சொட்டுநீர்ப் பாசனம் மூலமா மூணு ஏக்கருக்குப் பாய்ச்சிடலாம்னு அவர் சொன்னது, எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு. அவர்கிட்ட சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கிற கம்பெனியோட அட்ரசை வாங்கிட்டு, அடுத்த நாளே, மகன் சதீஷ்குமாரோட அங்க போய் விவரம் கேட்டேன்.
என்னோட வயல், கிடைக்கிற தண்ணி, வெள்ளாமை எல்லாத்தையும் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு, 'உங்களுக்கு தெளிப்புநீர்ப் பாசனம்தான் தோதா இருக்கும்’னு சொன்னாங்க. அந்தக் கருவியை அமைச்சுருக்கற சில வயல்களையும் கூட்டிக்கொண்டு போய் காட்டுனாங்க.
எங்களுக்கும் அது திருப்தியா தெரியவும், ஒரு ஏக்கர் கீரை சாகுபடிக்கு ஏத்த அளவுக்குத் தேவையான கருவிகளை வாங்கிட்டு வந்து நாங்களே போட்டுக்கிட்டோம். 15 அடி இடைவெளியில 4 அடி உயரத்துக்கு மரக்குச்சிகளை நட்டு, அதுல ரெண்டரை அடி உயரமுள்ள குழாய்களை அசையாம இருக்கற மாதிரி கட்டி விட்டோம்.
குழாய் முனையில பட்டாம்பூச்சி நாசிலைப் பொருத்தினோம். தண்ணியைப் பீச்சி அடிக்கிற இந்த நாசில் பட்டாம்பூச்சியோட றெக்கை மாதிரியே இருக்கும். அதனால, 'பட்டாம்பூச்சிப் பாசனம்'னுதான் எங்க பக்கம் சொல்லுவாங்க. இதுக்கு அரசு மானியம் கிடையாது.
15 அடி இடைவெளியில ஒரு ஏக்கர் நிலத்துல பட்டாம்பூச்சிப் பாசனம் அமைக்கறதுக்கு 30 ஆயிரம் ரூபாய் செலவாகும்'' என்று விவரங்களைத் தெளிவாகத் தந்தார் பொன்னுசாமி!
பூச்சிகளை விரட்டும் தெளிப்புநீர் !
அப்பாவைத் தொடர்ந்த மகன் சதீஷ்குமார், ''5 ஹெச்.பி. போர்வெல் மோட்டார் மூலமாதான் பாசனம் செஞ்சுட்டிருந்தோம். அதுல ஒரு ஏக்கர் பாசனம் செய்ய குறைஞ்சபட்சம் 6 மணிநேரம் ஆகும். அந்தளவுக்கு பாசனம் செய்றதுக்கு எங்க கிணத்துல தண்ணியும் இல்லை.
கரன்ட்டும் அவ்வளவு நேரம் கிடைக்காது. ஆனா, பட்டாம்பூச்சிப் பாசனம் அமைச்ச பிறகு, அந்தக் கவலையே இல்லை. செங்கீரை, புதினா, அரைக்கீரை, மணத்தக்காளி, சிறுகீரைனு அஞ்சு வகையான கீரைகளைப் பயிர் பண்றோம்.
ஒரு ஏக்கர் நிலத்தை ரெண்டா பிரிச்சு, அதுல தனித்தனியா சாகுபடி பண்றதால சுழற்சி முறையில தினமும் கீரையை அறுவடை பண்றோம். இந்தக் கீரைகள்ல சிறு கீரையைத் தவிர மத்த நாலு கீரைகளும் மறுதழைவு ரக கீரைங்க. வெட்ட வெட்ட தழைஞ்சுட்டே இருக்கும்.
அடியுரமா கோழி எரு, தொழுவுரம் ரெண்டையும் போடுறோம். மேலுரமா யூரியா கொடுப்போம். ஆனா, பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கறதே இல்லை. அதுக்கும் காரணம், பட்டாம்பூச்சிப் பாசனம்தான்.
தினமும் ஒரு மணி நேரம் பூவாளித்தூவல் போல பத்தடி சுத்தளவுக்கு தண்ணி பீச்சி அடிக்கிறதால, இலைகள் எல்லாம் கழுவிவிட்ட மாதிரியாகிடுது.
இலை வழியா செடியைத் தாக்குற பச்சைப்புழு, சாறு உறிஞ்சும் பூச்சி, இலைப்பேன், முட்டைகள்னு எல்லாத்தையும் பீச்சி அடிக்குற பாசன தண்ணி கழுவிடுறதால செடிகள்ல பூச்சிகளே இருக்குறதில்லை. அதனால பளபளனு தரமான கீரை கிடைக்குது'' என்று சிலாகித்துச் சொன்னார்.
கட்டு இரண்டு ரூபாய் !
தொடர்ந்து பேசிய சதீஷ்குமார், ''கீரையை திருப்பூர் வடக்கு உழவர் சந்தையில கொண்டு போய் அப்பா வித்துட்டு வந்துடுவார். ஆரம்பத்துல டவுன் பஸ்லதான் கீரைக்கட்டுகளைக் கொண்டு போனோம்.
பட்டாம்பூச்சிப் பாசனத்துக்கு மாறுன பிறகு, அதிக மகசூல் கிடைக்குது. சுழற்சி முறையில அறுவடை பண்றதால தினமும் ஆயிரத்து முன்னூறு கட்டு வரைக்கும் மகசூல் கிடைக்குது.
இப்ப சொந்தமா மூணு சக்கர டெம்போ வாங்கி, அதுலதான் கொண்டு போறார். ஒரு சின்னக்கட்டு ரெண்டு ரூபாய்னு விக்குறோம். நேரடியா விக்கிறதால கூடுதலா லாபம்'' என்றார் குஷியான குரலில்!
தினமும் 2,600 ரூபாய் !

நிறைவாகப் பேசிய பொன்னுசாமியின் மனைவி சிவகாமி, ''இந்த தெளிப்புநீர்ப் பாசனம் மட்டும் இல்லீனா, நாங்க இந்த மண்ணை விட்டே போயிருப்போம்.
எங்க நாலு ஏக்கர் நிலத்துல மட்டும் 11 போர்வெல் போட்டோம். எல்லாமே 900 அடி ஆழம். ஆனா, எதுலயுமே சரியான தண்ணி கிடைக்கல. பத்து லட்சம் ரூபாய் கடானாளியானதுதான் மிச்சம். இருந்தாலும் நம்பிக்கையை விடாம கடைசியா தோண்டுன கிணத்துல ஓரளவு தண்ணி வந்துச்சு. 'அதை வெச்சு பெரிசா வெள்ளாமை பண்ண முடியாது. கீரை போட்டா ஜெயிக்கலாம்’னு சொந்தக்காரர் ஒருத்தர் சொன்னாரு. அதும்படியே செஞ்சோம். ஓரளவு பொழப்பு ஓடுச்சு.
அப்புறமா தெளிப்புநீருக்கு மாறின பிறகுதான், மாசத்துக்கு 75 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாம வருமானம் கிடைக்குது. இதுல செலவெல்லாம் போக மாசத்துக்கு சராசரியா 50 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாம லாபம் கிடைச்சுடும். இதை வெச்சே பழையக் கடனையும் கட்டிட்டோம். நாங்க இந்த அளவுக்கு முன்னேற முக்கியக் காரணமே பட்டாம்பூச்சிப் பாசனம்தான்'' என்று நெகிழ, கீரைச்செடி போல நம் மனதும் நனைந்தது!!
தொடர்புக்கு, சதீஷ்குமார், செல்போன்: 98658-37804

50 சென்ட்... மாதம் 30 ஆயிரம்

50 சென்ட்... மாதம் 30 ஆயிரம்... பட்டதாரி இளைஞர்களின் பலே விவசாயம்..!

இயற்கை விவசாயத்தில் பட்டதாரி இளைஞர்கள்...
கூட்டுப் பண்ணையில் கீரைகள்...
விரைவில் இயற்கை விவசாயச் சந்தை...
விவசாயிகளின் பிள்ளைகளே விவசாயத்தை மறந்து அல்லது துறை மாற நினைத்து... பன்னாட்டு நிறுவனங்களை நோக்கி படையெடுத்திருக்கும் நவீன யுகம் இது! இதற்கு நடுவே, விவசாயமே தெரியாத சிலர்... பன்னாட்டு நிறுவன வேலைகளை உதறிவிட்டு, விவசாயத்தைக் கையிலெடுக்கிறார்கள் என்றால்... ஆச்சர்யம்தானே!

சாஃப்ட்வேர் இன்ஜினீயர்கள், விஞ்ஞானி, கல்லூரிப் பேராசிரியர், வழக்கறிஞர், ஆடிட்டர், பொறியாளர்கள் என பல துறையைச் சேர்ந்த இவர்களை ஒன்று சேர்த்திருக்கிறது, இயற்கை விவசாயம். 'நல்ல கீரை’ என்கிற பெயரில் அமைப்பை உருவாக்கி,  பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்... ஜெகன்னாதன், கௌதம், ராதாகிருஷ்ணன், சலோமிஏசுதாஸ், ராமு, விசு, திருமலை, புனிதா, ஷாம், சிவகுமார், ராஜமுருகன், அறிவரசன் ஆகிய 12 பட்டதாரி இளைஞர்கள்!
திருநின்றவூர்-பெரியப்பாளையம் பிரதான சாலையில், ஐந்தாவது கிலோ மீட்டரில் பாக்கம் என்னும் கிராமம் உள்ளது. இங்கு இந்த அமைப்பினர், இயற்கை முறையில் கீரை சாகுபடி செய்து... சென்னையில் நேரடியாக சந்தைப்படுத்தி வருகிறார்கள்.
பண்ணைக்குத் தேடிச் சென்ற நம்மிடம், முதலில் பேச ஆரம்பித்த ஜெகன்னாதன், ''கிராமப் பொருளாதாரத்தப் பத்தி அடிக்கடி நான் சிந்திப்பேன். அதோட தொடர்ச்சியா, கிராம மக்கள்கிட்ட சர்வே பண்ணினேன். 240 குடும்பங்கள்கிட்ட ஆய்வு பண்ணினதுல... செயற்கை உரம், பூச்சிக்கொல்லி, மதுபானங்கள், புகையிலைனு வருஷத்துக்கு 1 கோடியே
60 லட்ச ரூபாயைச் செலவு செய்றாங்கனு தெரிஞ்சுது.  படாதபாடுபட்டு இந்தக் குடும்பங்கள் சம்பாதிக்கற பணம்... சம்பந்தமில்லாத யாருக்கோ போறத நினைக்கறப்ப... ரொம்ப வருத்தமா இருந்துச்சு.
இந்தச் செலவைக் குறைக்கறதுக்கும், இவங்கள இதுல இருந்து மீட்டெடுக்கறதுக்கும் என்ன வழி?னு யோசிச்சப்பதான்... இயற்கை விவசாயத்தால உரம், பூச்சிக்கொல்லிச் செலவை சுத்தமா ஒளிச்சுடலாம்னு தோணுச்சு. இதுக்காகவே நம்மாழ்வார் அய்யா நடத்துன பல கூட்டங்கள்ல கலந்துகிட்டேன். இயற்கை விவசாயிகள் பலரையும் சந்திச்சேன். அவங்ளோட தங்கி, அவங்க செய்ற விவசாயத்தப் பாத்து, தொழில்முறையா எப்படி செய்யலாம்னு தெரிஞ்சுகிட்டேன்.
இணைத்த இயற்கை!
அப்போ பன்னாட்டு கம்பெனியில வியாபார மேம்பாட்டாளரா நான் இருந்தேன். அங்க நண்பர்களோட பேசினதுல... நிறைய பேருக்கு இதுல ஆர்வம் இருக்கறது தெரிஞ்சது. அவங்களையெல்லாம் இணைச்சு... இந்த அமைப்பைத் தொடங்கினோம். முதல் கட்டமா, சென்னை மக்களுக்கு ரசாயனம் தெளிக்காத கீரையை உற்பத்தி செஞ்சு கொடுக்கலாம்னு முடிவு செஞ்சோம். அதுக்காக, இந்த 5 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து கீரை சாகுபடியைத் தொடங்கியிருக்கோம். விளையற கீரையை சென்னையில வாடிக்கையாளர்களுக்கு நேரடியா விற்பனை செய்றோம்.
மொத்தமிருக்கற 12 உறுப்பினர்கள்ல... நாலு பேர் முழுநேரமா செயல்படுறோம். இதுக்காகவே... ஏற்கெனவே நாங்க பார்த்திட்டிருந்த வேலையை விட்டுட்டோம் (ஜெகந்நாத், ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் மருத்துவ நிறுவன அதிகாரிகளாகவும்... கௌதம், மின்சாதனங்கள் தயாரிக்கும் நிறுவன நிதி ஆலோசகராகவும், சலோமி ஏசுதாஸ் ஆந்திர மாநிலத்தில் இருக்கும் டெக்கான் டெவலப்மென்ட் சொஸைட்டி தொண்டு நிறுவன திட்ட அதிகாரியாகவும் பணியாற்றி வந்தனர்). மத்த உறுப்பினர்கள்.. வாரம் ஒரு முறை வருவாங்க. மாசம் ஒரு முறை கூட்டம் நடத்துவோம். அவங்கவங்க ஆலோசனைகளைப் பரிமாறிக்குவோம்.
இயற்கை உரத் தேவைக்காகவே நாட்டு மாடுகளை வளர்க்கிறோம். இப்போதைக்கு எட்டு மாடுகள் இருக்குது. இயற்கை முறையில விளைஞ்ச பொருட்களை விக்கிறதுக்காக... 'நல்ல சந்தை’னு ஒரு அமைப்பையும் தொடங்கப் போறோம். இயற்கை விவசாயிகள், அத்தனைப் பேருமே பயன்படுற வகையில லாபநோக்கம் இல்லாம இதை நடத்தப் போறோம்'' என்றார் ஜெகன்னாதன்!
''கீரையில சின்னச்சின்ன ஓட்டைகள் இருந்தாகூட... பூச்சிக் கீரைனு சொல்லி வாங்க மாட்டேங்கறாங்க சிலர். இயற்கை முறையில விளைவிக்கறப்ப... சில நேரங்கள்ல கீரைகள்  இப்படித்தான் இருக்கும். அதோட, பூச்சிகள் சாப்பிடற கீரைகளை சாப்பிடறதால எந்த பாதிப்பும் இல்லைங்கறதுதான் உண்மை. பூச்சிங்க சாப்பிட்டிருந்தா... அது இயற்கையில விளைஞ்ச கீரைனு நம்பி வாங்கலாம். ரசாயனப் பூச்சிக்கொல்லி தெளிக்கற வயல்கள்ல இருந்து வர்ற கீரைகள்தான், பெரும்பாலும் ஓட்டைஇல்லாத கீரையா இருக்கும்.
பொதுவா... காய்கறி, கீரை, பழம்னு எல்லாத்துக்குமே சீசன் இருக்கு. அந்தந்த சீஸன்லதான்... அதெல்லாம் நல்லா விளையும். அப்படிப்பட்ட காய்கறிகளை, இயற்கை முறையில எளிதா விளையவெக்க முடியும். ஒவ்வொரு சீஸன்லயும், மனிதனுக்கும் விலங்குகளுக்கும் என்ªன்ன தேவைப்படும்னு இயற்கையே செய்திருக்கற ஏற்பாடுதான் இது. அதனால, அந்தந்த சீஸன்ல விளையறதை மட்டும் வாங்கிச் சாப்பிடறதுதான் நல்லது. இந்த உண்மை புரியாம, பலரும் சீஸன் இல்லாத சமயங்கள்லகூட அந்தக் காய்கள்தான் வேணும்னு வற்புறுத்திக் கேக்கறாங்க'' என்று தங்களது சிக்கலைச் சொன்னார், முழுநேர ஊழியர்களில் ஒருவரான ராதாகிருஷ்ணன்.
விதவிதமா இருக்குது, கீரை!
''முளைக்கீரை, சிகப்பு முளைக்கீரை, சுக்கான், சக்கரவர்த்தினி, பசலைக் கீரை, அரைக் கீரை, சிறு கீரை, கொத்துமல்லி, புதினா, பொன்னாங்கன்னி, சிகப்புப் பொன்னாங்கன்னி, கோங்கூரானு சொல்லற சீமைக் காசினி, கொம்புக் காசினி, அகத்தி, முருங்கை, வல்லாரை, தூதுவளை, முடக்கத்தான், வெந்தயக் கீரை, கல் இளக்கி, காசினி, கறிவேப்பிலை, மணத்தக்காளி, தண்டுக் கீரை, பருப்புக் கீரை, தவசிக் கீரை, சிலோன் கீரை, திருநீற்றுக் கீரை... இப்படி முப்பதுக்கும் மேற்பட்ட கீரை வகைகளை சாகுபடி செய்றோம்'' என்று பட்டியலிட்ட முழு நேர ஊழியர் கௌதம், கீரை சாகுபடி செய்யும் முறைகள் குறித்து பாடம் சொன்னார்.
நிறைவாகப் பேசிய கௌதம், '' ஒரு பாத்தி அமைக்க, 200 ரூபாய் செலவாகும். முதல் கட்டமா, நாங்க மொத்தம் 50 சென்ட் நிலத்துல 300 பாத்திகள அமைச்சுருக்கோம். இதை ஒரு முறை அமைச்சா... மூணு, நாலு தடவை சாகுபடி பண்ணலாம். ஒரு பாத்தியில அதிகபட்சம், 100 கட்டு கீரை பறிக்க முடியும். ஒரு கட்டுக்கு 5 ரூபாய்க்கு குறையாம விலை கிடைக்கும். பாத்திகளோட இடைவெளியில அகத்தி, வல்லாரை, தூதுவளை, பிரண்டை மாதிரியான பயிர்களைப் போட்டிருக்கோம். வேலைக்கு 2 பேர் இருந்தா போதும். 300 பாத்தியிலிருந்தும் மாசத்துக்கு 30 ஆயிரம் ரூபா வரை வருமானம் கிடைச்சுட்டுருக்கு.
ஒரு பானை சோத்துக்கு, ஒரு சோறு பதம் போல, 50 சென்ட் நிலத்துல பல விஷயங்களைக் கத்துக்கிட்டோம். இந்த அனுபவத்தை வெச்சே... கீரை சாகுபடியை விரிவுப்படுத்தப் போறோம். அதேபோல, வேறு சில பயிர்களையும் கையில எடுக்கப் போறோம். இதன் மூலமா மொத்தமா இருக்கற
5 ஏக்கர்ல இருந்தும், ஒவ்வொரு மாசமுமே... பல லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். முறையா திட்டம் போட்டு உழைச்சா, விவசாயமும், மத்த தொழில் மாதிரி லாபம் கொட்டும். ஏற்கெனவே நாங்க பார்த்துட்டிருந்த வேலையில கிடைச்ச சம்பளத்தைவிட, இன்னும் கூடுதலா விவசாயத்தின் மூலமே லாபம் பார்க்க முடியும்கிறத நிரூபிச்சே தீருவோம்'' என்று சூளுரைத்து விடை கொடுத்தார்.

தெளிப்புப் பாசனம்தான் நல்லது !
கீரை சாகுபடிக்கு கௌதம் சொல்லும் சாகுபடி முறை !

'கீரை சாகுபடிக்கு மேட்டுப்பாத்தி முறைதான் சிறந்தது. சாகுபடிக்குத் தயார் செய்த நிலத்தில், 30 சதுர அடிக்கு ஒரு பாத்தி என்கிற அளவில் அமைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பாத்திக்கு இடையிலும் நடந்து செல்ல வசதியாக, இடைவெளிவிட வேண்டும். பாத்தியைச் சுற்றி செங்கல் அல்லது ஓடுகள் மூலமாக அரண் அமைத்துக் கொண்டால், இடும் தொழுவுரம் கீழே சரியாது.
பாத்திக்குள் நன்றாகக் கொத்திவிட்டு, அரையடி உயரத்துக்கு மேடாக்கி, ஒரு கூடை எருவை விதையோடு சேர்த்துத் தூவ வேண்டும். ஒரு பாத்தியில் தூவிய ரகத்தை அடுத்தப் பாத்தியில் தூவக் கூடாது. ஒரே ரகத்தைப் போட்டால், நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு. அதனால், முதலில் தூவிய ரகத்தை மூன்று பாத்திகள் தள்ளித்தான் தூவ வேண்டும். கீரை தூவிய உடனே பாசனம் செய்ய வேண்டும். மேட்டுப்பாத்தியில் கீரை உற்பத்தி செய்ய... தெளிப்பு நீர்ப் பாசனம்தான் சிறந்தது. இம்முறையில் சீக்கிரம் விதை முளைக்கத் தொடங்கும்.

அதிக நாட்கள் காத்திருக்கத் தேவையில்லை !
வெந்தயக்கீரை 15 நாட்களிலும், சிறுகீரை, பருப்புக்கீரை ஆகியவை 20 நாட்களிலும், முளைக்கீரை, சிகப்பு முளைக்கீரை, தண்டுக்கீரை ஆகியவை 30 நாட்களிலும், கொத்தமல்லி
40 நாட்களிலும், வல்லாரை, பொன்னாங்கன்னி ஆகியவை 60 நாட்களிலும் அறுவடைக்கு வரும்.
பசலை, சுக்கான், காசினி, புளிச்சக்கீரை, மணத்தக்காளி, முருங்கை, கறிவேப்பிலை ஆகியவை 6 மாதத்தில் அறுவடைக்கு வரும்.
கீரைகளைப் பெரும்பாலும் நோய்கள் தாக்காது. ஆனால், பூச்சித்தாக்குதல் இருக்கும். கீரைப் பாத்திகளுக்கு அருகில் சாமந்தி, ஆமணக்குச் செடிகளை நட்டு வைத்தால் பூச்சிகள் வராது. அதையும் மீறி பூச்சித்தொல்லை இருந்தால்... மஞ்சள் நிற டப்பாக்களில் கிரீஸ் தடவி, பாத்திகளின் அருகில் போட்டு விட்டால் போதும். பூச்சிகள் அதில் ஒட்டிக் கொள்ளும். கீரைகளுக்கு வளர்ச்சி ஊக்கியாக அமுதக்கரைசல், பஞ்சகவ்யா ஆகியவற்றை தேவையான அளவு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.'
தெளிப்புப் பாசனம்தான் நல்லது !
கீரை சாகுபடிக்கு கௌதம் சொல்லும் சாகுபடி முறை!
'கீரை சாகுபடிக்கு மேட்டுப்பாத்தி முறைதான் சிறந்தது. சாகுபடிக்குத் தயார் செய்த நிலத்தில், 30 சதுர அடிக்கு ஒரு பாத்தி என்கிற அளவில் அமைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பாத்திக்கு இடையிலும் நடந்து செல்ல வசதியாக, இடைவெளிவிட வேண்டும். பாத்தியைச் சுற்றி செங்கல் அல்லது ஓடுகள் மூலமாக அரண் அமைத்துக் கொண்டால், இடும் தொழுவுரம் கீழே சரியாது.
பாத்திக்குள் நன்றாகக் கொத்திவிட்டு, அரையடி உயரத்துக்கு மேடாக்கி, ஒரு கூடை எருவை விதையோடு சேர்த்துத் தூவ வேண்டும். ஒரு பாத்தியில் தூவிய ரகத்தை அடுத்தப் பாத்தியில் தூவக் கூடாது. ஒரே ரகத்தைப் போட்டால், நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு. அதனால், முதலில் தூவிய ரகத்தை மூன்று பாத்திகள் தள்ளித்தான் தூவ வேண்டும். கீரை தூவிய உடனே பாசனம் செய்ய வேண்டும். மேட்டுப்பாத்தியில் கீரை உற்பத்தி செய்ய... தெளிப்பு நீர்ப் பாசனம்தான் சிறந்தது. இம்முறையில் சீக்கிரம் விதை முளைக்கத் தொடங்கும்.

அதிக நாட்கள் காத்திருக்கத் தேவையில்லை !
வெந்தயக்கீரை 15 நாட்களிலும், சிறுகீரை, பருப்புக்கீரை ஆகியவை 20 நாட்களிலும், முளைக்கீரை, சிகப்பு முளைக்கீரை, தண்டுக்கீரை ஆகியவை 30 நாட்களிலும், கொத்தமல்லி
40 நாட்களிலும், வல்லாரை, பொன்னாங்கன்னி ஆகியவை 60 நாட்களிலும் அறுவடைக்கு வரும்.
பசலை, சுக்கான், காசினி, புளிச்சக்கீரை, மணத்தக்காளி, முருங்கை, கறிவேப்பிலை ஆகியவை 6 மாதத்தில் அறுவடைக்கு வரும்.
கீரைகளைப் பெரும்பாலும் நோய்கள் தாக்காது. ஆனால், பூச்சித்தாக்குதல் இருக்கும். கீரைப் பாத்திகளுக்கு அருகில் சாமந்தி, ஆமணக்குச் செடிகளை நட்டு வைத்தால் பூச்சிகள் வராது. அதையும் மீறி பூச்சித்தொல்லை இருந்தால்... மஞ்சள் நிற டப்பாக்களில் கிரீஸ் தடவி, பாத்திகளின் அருகில் போட்டு விட்டால் போதும். பூச்சிகள் அதில் ஒட்டிக் கொள்ளும். கீரைகளுக்கு வளர்ச்சி ஊக்கியாக அமுதக்கரைசல், பஞ்சகவ்யா ஆகியவற்றை தேவையான அளவு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.'
 தொடர்புக்கு,
ஜெகன்னாதன், செல்போன்: 99626-11767
கௌதம், செல்போன்: 98406-14128
ராதாகிருஷ்ணன், செல்போன்: 97898-40630

அசோலா‘ ஓர் அமுதசுரபி!

அசோலா‘ ஓர் அமுதசுரபி!



“ஊர்ல சொல்வாங்களே... 'சுண்டைக்காய் கால்பணம், சுமை கூலி முக்காப்பணம்'னு... அதுமாதிரிதான் நேத்துவரை எங்க பொழப்பு இருந்துச்சி. பால் கறந்து வித்தா கிடைக்கற காசுல பாதி காசு தீவனம் வாங்கறதுக்கே காணாம போயிட்டி ருந்திச்சி. கையில கால் காசு தங்கல. ஆனா, இன்னிக்கு நிலமையே வேற... இந்த 'அசோலா'வை வளர்த்து மாடுகளுக்குக் கொடுத்த பின்னாடி தீவன செலவு பாதியா கொறைஞ்சி போச்சி.. அதோட பாலும் கூடுதலா கறக்குது. இப்பதான் நாலு காசு கையில நிக்கிது”
-திண்டுக்கல் அருகே கண்ணாபட்டியைச் சேர்ந்த முருகேசன் என்கிற விவசாயியின் அனுபவம் இது.
இவரைப்போலவே பல விவசாயிகளின் வாழ்க்கையில் அற்புத மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது அசோலா என்ற பாசிவகைத் தாவரம். 

ஐம்பது செங்கல், சின்னதாக ஒரு தார்பாலின் ஷீட், இரண்டு சட்டி மாட்டுச் சாணம், பத்துக் குடம் தண்ணீர், கால் கிலோ அசோலா இது இருந்தால் போதும்... நீங்களும் அசோலா வளர்க்க ஆரம்பித்துவிடலாம். இவற்றை வாங்குவதற்கு வெறும் இருநூறு ரூபாய்தான் செலவு... மூன்றே நாட்களில் இருமடங்கு, அடுத்தடுத்த நாட்களில் பலமடங்கு என்று பெருகிக்கொண்டே இருக்கும் அசோலாவினால் கிடைக்கும் பலனோ... பல ஆயிரம் ரூபாய் மதிப்புடையது.
மாட்டுக்கு மட்டுமல்லாமல் அனைத்து கால்நடை களுக்கும் தீவனமாக பயன்படுவதுடன், நெல் வயலில் உரச்செலவை குறைத்து, களையைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் இந்த அசோலாவுக்கு இருப்பதால், விவசா யிகளைப் பொறுத்தவரை இது ஓர் அமுதசுரபி!
''என்கிட்ட ஆறு கறவை மாடு இருக்கு. பால் மூலமா வர்ற வருமானத்தை வெச்சிதான் குடும்பத்தை ஓட்டிட்டிருக்கேன். தவுடு, புண்ணாக்கு எல்லாம் கலந்து வெச்சாதான் பால் அதிகமா குடுக்கும். ஒரு லிட்டர் பால் வித்தா, பத்து ரூவா கிடைக்கும். இதுல தீவன செலவுக்கே அஞ்சு ரூவா போயிருது. ஒரு நாளைக்கு புண்ணாக்கை போடாட்டி பாலோட அளவு குறைஞ்சிரும். இப்படி தீவன செலவு போக மிச்சமிருந்ததை வெச்சிதான் பொழப்பை ஓட்டிட்டிருந்தேன். இந்த நிலைமையிலதான் என்.ஜி.ஓ. அமைப்பைச் சேர்ந்தவங்க அசோலாவைப் பத்திச் சொன்னதோட பயிற்சியும் கொடுத்தாங்க.
அம்பது சதுரடி தொட்டியில கால் கிலோ அசோலாவைதான் போட்டேன். இப்ப தெனமும் ஒரு கிலோ அசோலா எடுத்து மாடுகளுக்கு தீவனமா குடுக்கிறேன். தவிடு, புண்ணாக்கோட அளவைப் பாதியா கொறைச்சிட்டேன். சராசரியா ஆறு லிட்டர் பால் கொடுத்துக்கிட்டிருந்த மாடுங்க, இப்ப ஏழு லிட்டர் வரைக்கும் கொடுக்குது. பாலும் அதிக கொழுப்புச் சத்தோட இருக்கு.

முன்னல்லாம் தீவன செலவு பதினைஞ்சி ரூபாய் வரைக்கும் ஆகும். ஆனா, அசோலாவை கிலோ அறுபது பைசா செலவுல நானே உற்பத்தி செய்றதால செலவு ரொம்ப குறைஞ்சிருக்கு. பாலும் கூடுதலா கெடைக்குது. இதெல்லாம் அசோலா எனக்குக் கொடுத்த போனஸ்'' என்று தெம்பாகச் சிரிக்கும் முருகேசன்,
''என்னை பாத்துட்டு இப்ப பலரும் அசோலா உற்பத்தி பண்றாங்க. எங்க ஏரியாவுல இப்ப அசோலாவோட ஆட்சிதான் நடக்குது” என்று மகிழ்ச்சி பொங்கச் சொன்னார்.
அசோலாவை தமிழக விவசாயிகளிடத்தில் அறிமுகம் செய்ததில் கன்னியாகுமரியில் உள்ள 'விவேகானந்தா கேந்திர'த்துக்கு முக்கிய இடம் உண்டு. இங்கே இயற்கை வள அபிவிருத்தித் திட்டம் என தனி அமைப்பே செயல்பட்டு வருகிறது. அதன் ஆராய்ச்சி உதவியாளர் பிரேமலதா, (தொலைபேசி: 04652 -246296) மலையாள வாசனையுடன் அசோலவைப் பற்றி விவரித்தார்.
''பாசி குடும்பத்தைச் சேர்ந்த மிதக்கும் தாவரம்தான் இந்த அசோலா. இதன் தண்டு, வேர் பகுதிகள் தண்ணீருக்குள் மூழ்கி இருக்கும். இலைகள் நீரின் மேல்பரப்பில் இருக்கும். பெரும்பாலும் பச்சை அல்லது லேசான பழுப்பு நிறத்தில் இருக்கும். கால்நடை தீவனமாகப் பயன்படுவது போலவே தாவரங்களுக்கு உரமாகவும் பயன்படுகிறது. அசோலாவின் இலைப்பகுதியின் உள்ளே நீலப்பச்சைப் பாசி இருக்கிறது. காற்று மண்டலத்திலுள்ள தழைச்சத்தை கிரகித்து தாவரங்களுக்கு கொடுக்கும் வேலையை இது செய்கிறது. இந்த நீலப்பச்சை பாசியின் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்களை நீரிலிருந்து அசோலா எடுத்துத் தருகிறது. அசோலாவின் விதைப்பருவத்திலிருந்து அதனுள் இந்த நீலப்பச்சை பாசியும் சேர்ந்தே வளர்கிறது. இந்தச் சிறப்பு வேறு எந்தத் தாவரத் துக்கும் இல்லை” என்று வியப்பூட்டும் தகவல்களை எடுத்து வைத்தவர், அசோலா வளர்ப்பு முறைகளைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.
''வளர்ப்புச் செலவைக் குறைக்கும் வகையில் செயற்கை நீர்தொட்டியை அறிமுகப்படுத்தி யிருக்கிறோம். மரநிழலில் ரெண்டு மீட்டர் நீளம், ஒரு மீட்டர் அகலத்துக்கு செங்கல்லை வரிசையா அடுக்கினால் தொட்டிபோன்ற அமைப்பு உருவாகும். அதனுள் பழைய பிளாஸ்டிக் சாக்குகளை விரித்து, அதன் மீது தார்பாலின் ஷீட்டை விரிக்கவேண்டும். அதன் மீது 15 கிலோ அளவுக்கு வளமான மண்ணைப் பரப்பிவிடவேண்டும். பத்து லிட்டர் தண்ணீரில் ஒரு கிலோ பசும்சாணியையும், இருபது கிராம் ராக்பாஸ்பேட் (கல்மாவு) அல்லது சூப்பர் பாஸ்பேட்டை கரைத்துவிட வேண்டும். தொட்டியின் உள்பகுதியில் பத்து செ.மீ. உயரத்துக்கு தண்ணீர் இருந்தால் போதும். அதில் 500 கிராம் அசோலாவை போடவேண்டும். பத்து பதினைந்து நாட்களில் தினமும் அரை கிலோவிலிருந்து ஒரு கிலோ வரை அசோலா அறுவடை செய்யலாம்.
சூப்பர் பாஸ்பேட் பத்து கிராம், சாணம் 500 கிராம் இவற்றை ஐந்து நாட்களுக்கொரு முறைக் கரைத்து அந்தத் தொட்டியில் விட்டுக் கொண்டிருந்தால் அசோலாவின் வளர்ச்சி ஒரே சீராக இருக்கும். உற்பத்திச் செலவு கிலோவுக்கு 65 பைசாதான்.
வெப்பநிலை 25 முதல் 31 டிகிரி வரை இருக்கும்போது அசோலாவின் வளர்ச்சி நன்றாக இருக்கும். வெப்பநிலை அதிகமாகும் போது, வளர்ச்சி குறைந்து நிறமும் பழுப்பாக மாறிவிடும். தினமும் கையினாலோ... குச்சியாலோ தொட்டி யைக் கிளறிவிட்டு, அசோலாவை அறுவடை செய்துகொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் இட நெருக்கடி இல்லாமல் அவை நன்றாக வளரும்” என்றவர், அடுத்து அதன் பயன்பாடுகள் பற்றி விவரித்தார்.
''அசோலா எல்லாச் சத்துக்களும் உள்ள ஒரு தீவனமாகும். குறைந்த அளவு லிக்னின் மற்றும் நார்ச்சத்து இருப்பதால் இதை கால்நடைகள் மட்டுமல்லாமல் கோழி, மீன், பன்றி ஆகியவற்றுக்கும் உணவாக கொடுக்கலாம். அறுவடை செய்த அசோலாவில் மாட்டுச் சாண வாடை இருக்கும். அதனால் நன்றாக கழுவிதான் கால்நடைகளுக்குக் கொடுக்கவேண்டும். தவிடு அல்லது மாட்டு தீவனத்துடன் சரிபாதியாகக் கலந்து கொடுக்கலாம். ஒரு மாட்டுக்கு ரெண்டு கிலோ அளவில் தீவனமாக கொடுக்கும்போது 20% வரை பால் உற்பத்தி அதிகரிப்பதுடன் பாலின் தரம், மாட்டின் உடல் ஆரோக்கியம், வாழ்நாள் ஆகியவை அதிகரிக்கிறது. புண்ணாக்கு போன்ற தீவனத்தின் பயன்பாட்டை 40% வரை குறைக்கிறது.
கோழிகளுக்கு அசோலாவை நேரடியாக கொடுக்கும் போது முட்டையின் தரம் கூடுவதுடன் எண்ணிக் கையும் அதிகரிக்கிறது. அசோலா சாப்பிடும் கோழி களை பெரும்பாலும் நோய் தாக்குவதில்லை. ஆடு களுக்கு கொடுக்கும்போது ஆரோக்கியம் அதிகரிப் பதுடன் பாலின் அளவு கூடுகிறது. அசோலாவை உணவு உப்புடன் சேர்த்து பன்றிகளுக்கு கொடுத்தால் எடை அதிகரிப்பதுடன் இறைச்சியின் தன்மையும் நன்றாக இருக்கும். பெரிய தொட்டிகளில் வியாபார ரீதியாக மீன் வளர்ப்பவர்கள், அசோலாவை உணவாகக் கொடுத்தால் அதிக எடையிலான மீன்கள் விரைவாகவே கிடைக்கும். முயலுக்கும் கூட அசோலாவைக் கொடுக்கலாம். இதன் பயன்ப £ட்டை சொல்லிக்கொண்டே போகலாம்'' என்று பெருமிதமாகச் சொன்னவர், ''அசோலா வளர்ப்பு சம்பந்தமான பயிற்சியை மாதம் இரண்டு தடவை கன்னியாகுமரியிலிருக்கும் எங்கள் கேந்திராவில சொல்லிக்கொடுக்கிறோம். இரண்டு நாள் பயிற்சிக்கான கட்டணம் ரூ.400. தங்குமிடம், உணவு மற்றும் அசோலா வளர்ப்புக்கான பாலிதீன் ஷீட்கள் ஆகியவையும், விதைப்புக்குத் தேவைப்படும் அசோலாவையும் இலவசமாக கொடுப்போம்” என்று சொன்னார்.
ஆடு, மாடுகளுக்கு மட்டுமன்றி பயிருக்கும் பயன் தருவதாக வந்திருக்கும் அசோலா... உண்மையிலேயே அமுதசுரபிதான்!

கொசு விரட்டும் அசோலா! 

அசோலாவில் அதிகளவு புரதச்சத்து, அமினோ அமிலங்கள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி-12, பீட்டா கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு, தாமிரம், மெக்னீசியம், ஆகியவை அடங்கி யுள்ளன. அசோலாவில் நீர்ச்சத்து 90-92%, புரோட்டீன் 25-30%, அமினோ அமிலங்கள் 10-15% என்ற அளவில் உள்ளன. மிகக் குறைந்தளவு எண்ணெய் சத்தும், கார்போ-ஹைட்ரேட்டும் உள்ளன.
ஏழைகளின் 'ஸ்பைருலினா' என அழைக்கப்படும் அசோலாவை மனிதர்களும் சாப்பிடலாம். அசோலாவை நன்றாக கழுவி பாலில் போட்டு கொதிக்கவைத்து சாப்பிடலாம். வடை, போண்டா வகைகளில் கீரைக்குப் பதிலாக அசோலாவை பயன்படுத்தலாம். கொழுப்பே இல்லை... முழுக்க புரதமே நிறைந்திருக்கிறது என்பதால் எந்த பயமும் இல்லை.
அசோலா வளர்க்கும் இடத்தில் கொசு வராது என்பதால், கொசுத் தொல்லை இருப்பவர்களும் இதை வளர்க்கலாம்.

நெல் நடவு செய்த ஒரு வாரத்தில ஒரு ஏக்கர் நிலத்தில் 200 கிலோ அசோலாவை போடவேண்டும். அது 25 நாட்களில் நன்றாக வளர்ந்து நிலம் முழுவதும் பரவிவிடும். இது நுண்ணுயிர் உரம் என்பதால் 30% உரச்செலவு குறையும். தண்ணீர் ஆவியாவது தடுக்கப் படும். களைகள் கட்டுப்படும். மகசூலும் கூடும்.

செலவு சின்ன மீன்... வரவு பெரிய மீன்!

செலவு சின்ன மீன்... வரவு பெரிய மீன்!


ப சியில் வாடுபவனுக்கு மீனைக் கொடுக்காதே... மீன் பிடிக்கக்கற்றுக்கொடு’ என்பார்கள். அதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கம்பீரமாக களத்தில் குதித்திருக்கிறார்
அகமது மொகைதீன். மீன்பண்ணை அமைத்து, தனிமனிதன் தன் பொருளா தார வளத்தை எப்படி மேம்படுத்திக் கொள்வது என்பதற்கு உதாரணமாக இருப்பதோடு, அதையே பிறருக்குச் சொல்லித் தரும் வேலையையும் செய்து வருகிறார்.
மதுரை, ஒத்தக்கடை அருகே அரும்பனூரில் 'ஏ.எம்.அக்வா ஃபார்ம்' என்ற பெயரில் மீன் பண்ணை நடத்தி வரும் மொகைதீன், '‘சில ஆயிரங்களும், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தால் போதும். மீன்கள் வளர்த்து மாதம் குறைந்தபட்சம் பத்தாயிரம் ரூபாய் வருமானம் பார்க்கலாம்'' என்று இளைஞர்களுக்கு அழைப்பு வைக்கிறார்.
பத்து ஏக்கர் பரப்பளவிலான தோட்டம்... அதில் ஆறு ஏக்கரில் நிமிர்ந்து நிற்கிறது தென்னந்தோப்பு. மீதமுள்ள பகுதியில் நெல், வாழை என விவசாயம் விரிந்து கிடக்க... தென்னை மரங்களுக்கு இடையில் நீள, நீளமான குழிகளில் தண்ணீர் அலையடிக்கிறது. அதுதான் அவரின் மீன் பண்ணை.

பொருளாதாரப் படிப்பை முடித்த கையோடு சவுதி அரேபியாவுக்குப் பறந்தவர், அங்கே வேலை அவ்வளவு சிறப்பானதாக இல்லாது போகவே, ஒரு கட்டத்தில் இந்தியாவுக்கு திரும்பியிருக்கிறார். வந்த வேகத்தில் பூர்வீக நிலத்தில் விவசாயத்தை ஆரம்பித்தவர்... படிப்படியாக முன்னேறி, இன்றைக்கு மீன்பண்ணை வரை வந்திருக்கிறார்.
மேற்கொண்டு அவரே சொல்கிறார் கேட்போம்...
''எங்க கிணத்துல தண்ணி எப்பவுமே வத்தாது. அதை வெச்சித்தான் மீன் பண்ணை போடலாம்னு முடிவு பண்ணினேன். பல இடங்களுக்கும் போய் மீன் பண்ணைகளைப் பாத்து விஷயங்களை தெரிஞ்சிகிட்டு, எனக்கு ஏத்த மாதிரி இந்தப் பண்ணையை அமைச்சேன். சிமென்ட் தொட்டி களைக் கட்டினா அதிகமா செலவாகும். அதனால தென்னை மரங்களுக்கு இடையில குழிகளை வெட்டி அதில் தண்ணியை விட்டு மீன் குஞ்சுகளை வளர்க்க ஆரம்பிச்சேன். என்னோட முயற்சி வெற்றிகரமா அமைஞ்சி போச்சி.
தரமான மீன் குஞ்சுகள் கிடைக்கறதுல சிக்கல் இருந்திச்சி. நானே தரமான குஞ்சுகளை தேடிப்பிடிச்சி வாங்கி வந்ததோட, அதை என்னோட பண்ணையிலயும் உற்பத்தி பண்ணி விக்க ஆரம்பிச்சிட்டேன். பொறிச்சி மூணே நாள் ஆன குஞ்சுகளை பவானிசாகர், கொல்கத்தாவுல இருந்தெல்லாம் வாங்கி, ரெண்டு மாசம் வரை என்னோட பண்ணையில வளர்க்கிறேன். அதுக்குப் பிறகு மற்ற பண்ணைகளுக்கு விக்கிறேன்.
குளத்து மீன் வகைகளைப் பொறுத்தவரை கட்லா, ரோகு, கண்ணாடி கெண்டை, சில்வர் கெண்டை, பொட்லா, மிர்கால், வாளை, நாட்டு விரால், புல் கெண்டை மாதிரியான ரக குஞ்சுகளை உற்பத்தி செய்றேன். லட்சக்கணக்கான குஞ்சுகளை உற்பத்தி பண்ணினாலும், எல்லாம் வித்துருது. கவர்மென்ட் ஆர்டர், தனியார் ஆர்டர்னு தொடர்ந்து வாங்கிக்கிட்டே இருக்காங்க. திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்கள்ல அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் குளத்துல மீன் வளக்கறாங்க. அதுக்கும் நான்தான் மீன் குஞ்சுகள கொடுக்கறேன். தென்மாவட்டத்தைப் பொறுத்தவரை குளத்து மீன் வளக்கற ரொம்ப பேரு எங்கிட்ட வாங்குறாங்க. மீன் குஞ்சு ஒண்ணுக்கு இருபது பைசாவில் இருந்து எண்பது பைசா வரைக்கும் ரகத்துக்கு ஏத்தா மாதிரி விலை இருக்கும்.
தண்ணீர் ரொம்ப குறைவா கிடைக்கற காலத்துல தென்னைக்கு இடையே சிமென்ட் சிலாப்களை வெச்சி, அதுல வண்ண வண்ண மீன்களை வளக்கறேன். அதுக்கான சந்தை வாய்ப்பும் நல்லா இருக்கு'' என்று கொஞ்சம் நிறுத்தினார் மொகைதீன்.
மீன் வளர்ப்பில் இவருடைய கொடி வெகுவாக பறக்கவே, 'தமிழ்நாடு மீன் வளர்ப்பு விவசாயிகள் நலச்சங்க’த்தின் தென்மாவட்ட அமைப்பாளர் என்ற பதவி வந்து சேர்ந்திருக்கிறது. அத்துடன், மீன் பண்ணையையும் சிறப்பாக நடத்துவதால், அரசுத் தரப்பலிருந்து நடத்தப்படும் மீன் வளர்ப்பு பயிற்சி முகாம்களுக்கு அழைக்கப்பட்டு பலருக்கும் பயிற்சி கொடுக்கும் வேலையையும் செய்து வருகிறார் மொகைதீன்.
சரி, மீன் வளர்ப்பு எல்லோருக்கும் சாத்தியமா... அதைப் பற்றி என்ன சொல்கிறார் மொகைதீன்?
“பொதுவா இருபது ஏக்கர் நிலத்தில விவசாயம் செஞ்சு கிடைக்கிற லாபத்தை, ஒரு ஏக்கர்ல மீன் வளர்த்தாலே எடுத்துறலாம். அதனாலயே இப்ப விவசாயிகள் பலரும் மீன் வளர்ப்புல அதிக ஆர்வம் காட்ட ஆரம்பிச்சிருக்காங்க. முப்பதாயிரம் ரூபாய் பணம், அரை ஏக்கர் இடம், தண்ணி இது மூணும் இருந்தா போதும்... யார் வேணும்னாலும் மீன் வளர்ப்பை ஆரம்பிச்சிடலாம். வர்ற வருமானத்தைப் பொறுத்து மீன் வளர்ப்பையும் விரிவு படுத்திக்கலாம். தென்னை விவசாயம் மட்டும் செய்றவங்களுக்கு வரப்பிரசாதமான தொழில் இது. ஊடு பயிர் போடறதுக்குப் பதிலா தென்னை மரங்களுக்கு நடுவுலயே குழி எடுத்து மீனை வளக்கலாம்.
அதிக செலவாகும்னு நெனச்சுகிட்டுதான் ரொம்ப பேரு இந்தத் துறைக்கு வரத் தயங்குறாங்க. உண்மையில சொல்லப்போனா... செலவு ரொம்ப கம்மி, வருமானம் ஜாஸ்தி. இதை அனுபவத்துல உணர்ந்தவன் நான். மீனை வளர்த்து எங்க விக்கறதுனு ஒரு கேள்வி வரும். நீங்க எங்கயும் அலைய வேணாம். மீன் இருக்குதுனு தெரிஞ்சா வியாபாரிகளே தன்னால வந்து வாங்கிட்டு போயிடுவாங்க. மீன்வளத்துறையில இருந்தும் உதவிகள் கிடைக்கும். நம்ம நாட்டுத் தேவையில பத்தில ஒரு பங்குகூட நாம் இன்னும் உற்பத்தி செய்யல. மீன் உணவின் தேவை ரொம்ப அதிகம். அதனால விற்பனை ஒரு பிரச்னையே இல்லை'' என்று நம்பிக்கையூட்டும் வார்த்தைகளால் பேசி முடித்த மொகைதீன்,
''மீன் வளர்ப்பு சம்பந்தமாக ஏதாவது சந்தேகங்கள் இருந்தாலும் நேரிலோ போன்லயோ என்கிட்ட கேட்கலாம். எப்பவும் ஆலோசனைகள் சொல்லத் தயாரா இருக்கேன். பயிற்சிக்காக என்கிட்ட வந்தா இலவசமாகவே சொல்லித் தரவும் தயார்'' என்றார்.
தொடர்பு முகவரி: அகமது மொகைதீன், அரும்பனூர் (அஞ்சல்), வேளாண்மை கல்லூரி (வழி) மதுரை-625104, போன்: 98431-70706, 0452- 3293426.
வரவு எப்படி?
மீன் வளர்ப்பின் வருவாய் எப்படி என்பதை கெண்டை மீனை உதாரணமாக எடுத்துக் கொண்டு சொல்கிறார் மொகைதீன்:
அரை ஏக்கரில் மீன் வளர்ப்பதாக வைத்துக் கொள் வோம். ஒரு மீன் குஞ்சு அம்பது பைசா வீதம் இருபதாயிரம் குஞ்சுகள் வாங்கவேண்டும். அதன் விலை பத்தாயிரம் ரூபாய். அதில் இருபது முதல் ஐம்பது சதவிகித குஞ்சுகள் தேறிவிடும். இருபது சதவிகிதம் தேறுகிறது என்று எடுத்துக்கொண்டலே... நான்காயிரம் மீன்கள் கிடைக்கும். ஆறு மாதம் வளர்ந்த நிலையில் ஒரு மீன் சராசரியாக ஒரு கிலோ எடை இருக்கும். மொத்தம் நான்கு டன் மீன்கள் கிடைக்கும். ஒரு கிலோ மீன் குறைந்தபட்சம் முப்பது ரூபாய் போகும் என்று வைத்துக்கொண்டால்... 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். செலவெல்லாம் போக... கையில் 80 ஆயிரம் ரூபாய் நிச்சயம் கிடைக்கும். மாதத்துக்கு சராசரி யாக 13 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.

குழிகளை அமைப்பது எப்படி?
தென்னை மரங்களுக்கு நடுவே நூத்தி இருபதடி நீளம், பத்தடி அகலம், அஞ்சடி ஆழம் இதுதான் ஒரு குழிக்கான கணக்கு. மீன் குஞ்சு வளர்ப்பு மட்டும் செய்ய நினைப்பவர்கள் மூணு அடி ஆழம் வைத்துக்கொண்டால் போதும். குழியில் கரம்பை மண்ணைக் கொட்டி, தண்ணீர் விட்டு மீன் குஞ்சுகளை வளர்க்கலாம். சரியான மண் கிடைக்கவில்லை என்றால் குழிக்குள் பிளாஸ்டிக் ஷீட் போட்டு, அதில் தண்ணீரை விட்டும் வளர்க்கலாம்.
கிராமத்து விவசாயிகளுக்கு சுலபமாக கிடைக்கும் மாட்டுச் சாணம், தவிடு, கொஞ்சம் புண்ணாக்கு, கருவாட்டு தூள் இதெல்லாம் மீன்களுக்கு உணவாகக் கொடுக்கலாம்.